ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: 2ம் நாள் உற்சவம்
ADDED :1770 days ago
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து இரண்டாம் நாளான இன்று (16 ம் தேதி) ஸ்ரீநம்பெருமாள் முத்து சாய் கொண்டை, வைர அபயஹஸ்தம், தங்க கிளி, பவளமாலை, பஞ்சாயுத பதக்கம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.