ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: 7ம் நாள்
                              ADDED :1775 days ago 
                            
                          
                          திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 7ம் திருநாள் - நம்பெருமாள் முத்துக்கிரீடம், மகர கண்டிகை, ரத்தின அபய ஹஸ்தம், காசு மாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடியபடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.