உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒற்றுமை காப்போம்

ஒற்றுமை காப்போம்


* ஒற்றுமையுடன் வாழுங்கள். ஆண்டவர் உங்களோடு இருப்பார்.
* செய்ய நினைக்கும் செயல்களை ஆற்றல் உள்ள போதே செய்து முடியுங்கள்.
* எதிரி அளிக்கும் கறி விருந்தை விட அன்பானவர் தரும் மரக்கறி உணவு சிறந்தது.  
* அன்பு பொறுமை மிக்கது. எப்போதும் நன்மையே செய்யும்.
* அன்பு தற்புகழ்ச்சியோ, ஆணவமோ கொள்வதில்லை.  
* உங்களைத் துன்புறுத்துவோருக்கும் வாழ்த்து சொல்லுங்கள்
* இனிமையுடன் பேசினால் உடலும், உள்ளமும் மகிழ்ச்சி பெறும்.  
* நெற்றி வியர்வை நிலத்தில் விழும்படி உழைத்து உண்ணுங்கள்.
* சிறிது சிறிதாக சேர்ப்பவரின் செல்வம் பெருகிக் கொண்டே போகும்.
* தொலைவில் இருக்கும் உடன் பிறந்தவரை விட அருகிலுள்ள நண்பர் மேலானவர்.  
* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர்களை துன்பம் நெருங்காது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !