உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹெத்தையம்மன் பண்டிகை: டிச., 30 உள்ளூர் விடுமுறை

ஹெத்தையம்மன் பண்டிகை: டிச., 30 உள்ளூர் விடுமுறை

ஊட்டி:ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி டிச., 30ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:நீலகிரி மாவட்டத்தில் ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி, மாவட்டத்திற்கு வரும், 30ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலகங்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இதற்கு பதிலாக வரும் ஜன., 9ம் தேதி அன்று, மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
 



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !