உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆருத்ரா தரிசனம் பக்தர்களுக்கு தடை

ஆருத்ரா தரிசனம் பக்தர்களுக்கு தடை

 வடமதுரை : வடமதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தின் போது பக்தர்கள் கூட்டமாக குவிய தடை விதித்துள்ளனர்.இங்கு நடராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம், அபிஷேகம் செய்து நாளை (டிச.30) காலை 5:00 முதல் 6:00 மணிக்குள் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கையாக, ஆருத்ரா தரிசனத்தின் போது ஒரே நேரத்தில் பக்தர்கள் கூட்டமாக சேர கூடாது. முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்யலாம் என, செயல் அலுவலர் மாலதி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !