உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று இரவு 7:00 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாவரண பூஜை, மகா அபிஷேகம் நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வசந்த மண்டபத்தில், சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ஷோடசோபவுபச்சார தீபாராதனை, சுவாமி கோவில் வளாகத்தில் புறப்பாடு, ஊடல் உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !