உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை நடை திறப்பு: பிரதிஷ்டா தினம்!

சபரிமலை நடை திறப்பு: பிரதிஷ்டா தினம்!

சபரிமலை: மூலவர் சிலை பிரதிஷ்டா தினத்தை ஒட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று பிரதிஷ்டா தின சிறப்பு பூஜைகள் முடிந்து, இன்றிரவு நடை அடைக்கப்படும். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அய்யப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தை கொண்டாடுவது வழக்கம். அதேபோல், இவ்வாண்டுக்கான பிரதிஷ்டா தினத்தை ஒட்டி, நேற்று மாலை 5.30 மணிக்கு, தந்திரி கண்டரரு மகேஸ்வரரு தலைமையில் மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி நடையை திறந்தார்.நேற்று வேறு பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை வழக்கம் போல் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கும். பிரதிஷ்டா தினத்தை ஒட்டி, உதயாஸ்தமன பூஜை, நெய்யபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், சந்தன அபிஷேகம், படி பூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் இன்று நடைபெறும்.வழக்கமான பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் முடிவடைந்து, இன்றிரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும். தொடர்ந்து ஆனி மாத பூஜைகளுக்காக ஜூன் மாதம் 14ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !