வரவு அறிந்து செலவு செய்க!
ADDED :1884 days ago
“சொற்ப வருமானத்தில் திருப்தியாக வாழுகின்ற மனிதனை வாழ்த்துகிறேன். அப்படிப்பட்ட நல்லவனை, இறைவன் திருப்தியோடு ஏற்றுக் கொள்வான். ஒரு மனிதன் மீது விருப்பம் கொண்டால் மட்டுமே இறைவன் பலவகையிலும் அவனை சோதிப்பான். சோதனையைப் பொறுத்துக் கொள்பவனே சிறந்த மனிதன்’’ என்கிறார் நாயகம்.
இறைவனால் நமக்கு என்ன தரப்பட்டிருக்கிறதோ, அதை முழு மனதாக ஏற்கப் பழக வேண்டும். அவரவர் வருமானம், அதற்கேற்ப செலவு செய்ய வேண்டும்.