உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரத்தில் வைகாசித் திருவிழா நாளை தொடக்கம்!

எமனேஸ்வரத்தில் வைகாசித் திருவிழா நாளை தொடக்கம்!

பரமக்குடி: பரமக்குடி அடுத்த எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபையைச் சேர்ந்த வரதராஜப் பெருமாள் கோயிலின் வைகாசித்திருவிழா நாளை (ஜூன் 3) தொடங்குகிறது. காலை 9மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 2மணிக்கு மேல் வரதராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன், புஷ்பபல்லக்கில் வைகை ஆற்றில் இறங்குகிறார். ஜூன் 4ல் காலை 9மணிக்கு மஞ்சள்பட்டிணத்தில் இருந்து குதிரை வாகனத்தில் அலங்காரமாகி முக்கிய வீதிகள் வழியாக வைகை ஆற்றில் சப்பரத்தில் எழுந்தருளி, எமனேஸ்வரம் வண்டியூரை அடைகிறார். மறுநாள் மாணிக்கா மண்டகப்படியில் மண்டூக மகரிஷி சாபவிமோசம், அவதாரசேவை, கருட, அனுமார் வாகனத்தில் சேவை சாதிக்கிறார். ஜூன் 8ல் இரவு புஷ்பபல்லக்கில் அழகர் திருக்கோலத்துடன், வீதியுலா வந்து ஜூன் 9ம் காலை 10மணிக்கு கோயிலை அடைகிறார். விழா ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்ட்ரா சபையார் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !