/
கோயில்கள் செய்திகள் / உழைக்காமலே கடவுளை முழுமையாக நம்பிக்கொண்டிருந்தால் வாழ்வில் முன்னேற முடியுமா?
உழைக்காமலே கடவுளை முழுமையாக நம்பிக்கொண்டிருந்தால் வாழ்வில் முன்னேற முடியுமா?
ADDED :5039 days ago
முன்னேற விரும்புபவன் உழைக்கத் தயங்குவது இல்லை. கடமையைச் செய், பலனை இறைவன் பொறுப்பில் விட்டுவிடு என்று கீதை நமக்கு வழிகாட்டுகிறது. உழைப்பே தெய்வம் என்பதால் தான் ஆயுதபூஜை என்ற விழாவையே உருவாக்கி, தொழிலுக்கு நாயகியான சரஸ்வதியை வணங்குகிறோம். அதனால், ஏற்றுக் கொண்ட கடமையில் அக்கறையுடன் உழைத்துத் தான் ஆகவேண்டும். பக்தி மட்டுமே வாழ்க்கை என்று எண்ணுவது நடைமுறை வாழ்வுக்கு பொருந்தாது.