மிகச் சிறந்த பக்திமான் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?
ADDED :4873 days ago
தாயின் கருவில் இருக்கும் போதே மந்திர உபதேசம் கேட்ட தெய்வீகக் குழந்தை பிரகலாதன். கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்துஇருக்கிறார் என்ற உண்மையை உலகிற்கு எடுத்து சொன்னவன். அவனைக் காக்க மகாவிஷ்ணு நரசிம்மராகத் தூணில் இருந்து வெளிப்பட்டார். பெயருக்குமுன் பக்த என்ற அடைமொழியையும் சேர்த்து பக்த பிரகலாதன் ஆனான்.