உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம்

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் நடந்த மாசிமக திருவிழாவின் விடையாற்றி உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் காய்கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவில் விடையாற்றி உற்சவம் இன்று நடைபெற்றது. உற்சவத்தையொட்டி, விநாயகர், முருகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, வாழை உள்ளிட்ட பழங்கள், கத்தரி, முள்ளங்கி, புடலை, கேரட், பச்சை மிளகாய், அவரை, வெண்டை, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகளால் பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !