உலகம் ஒரு உடற்பயிற்சிக்கூடம்
சொல்கிறார் விவேகானந்தர்
* உலகம் ஒரு உடற்பயிற்சிக்கூடம். அதில் நம்மை வலிமை ஆக்கவே வந்திருக்கிறோம்.
* துணிவுடன் முன்னேறுங்கள். தற்போதைய நிலை குறித்து சிந்திக்காதீர்கள்.
* லட்சியத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு கடமையில் ஈடுபடுங்கள்.
* முழுப்பொறுப்பையும் உங்கள் தோள் மீது சுமத்திக் கொண்டு பணியாற்றுங்கள்.
* அரிய செயல்கள் நிறைவேற உழைப்பு, விடாமுயற்சியும் அவசியம்.
* எதை மண்ணில் விதைத்தோமோ அதையே அறுவடை செய்ய முடியும். நமது விதியை நாமே வகுத்துக் கொள்கிறோம்.
* செயலில் மட்டுமில்லாமல் மனதாலும் நல்லதை சிந்தியுங்கள்.
* முகத்தில் புன்னகையும், பேச்சில் இனிமையும் கொண்டிருங்கள்.
* குழந்தையின் கள்ளம் கபடமற்ற தன்மையோடு செயலாற்றுங்கள்.
* நாய்க்கு ஒரு பிடி சோறிட்டாலும், அந்த நாயைக் கடவுளாக எண்ணி வழிபடுங்கள்.
* நல்லதைக் கற்றுக் கொள்ளுங்கள். கற்றதை மனதில் அடிக்கடி சிந்தியுங்கள்.
* தன்னை நம்பாதவன் கடவுள் மீது பக்தி செலுத்தாத நாத்திகன் போன்றவன்.
* மனிதன் எதை நினைக்கிறானோ அதுவாகவே மாறி விடும் சக்தி படைத்தவன்.
* ‘நான் எதையும் சாதிக்க வல்லவன்’ என்ற மனஉறுதி இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்.
* பிறருக்குச் செய்யும் எளிய சேவை கூட உங்களுக்கு பேராற்றலை உண்டாக்கும்.
* தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவர்களே உண்மையில் வாழ்பவர்கள்.
* பாமரனைப் பண்புள்ளவனாக்கவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்துவதே ஆன்மிகம்.
* உண்மை எங்கே அழைத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள்.
* கோழையாகவும், வேஷதாரியாகவும் யாரும் இருக்காதீர்கள்.
* அடக்கப்படாத மனம் மனிதனை கீழ்நோக்கி இழுத்துச் செல்லும்.
* அடக்கப்பட்ட மனமோ பாதுகாப்பு அளிப்பதோடு சுதந்திரமாக வாழச் செய்யும்.
* உயிர் வாழ்வதற்கான ஒரே அறிகுறி வளர்ச்சியடைவது தான்.
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் விரிவடையுங்கள். அதுவே உண்மையான வளர்ச்சி.