உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் மஹா சிவராத்திரி விழா

சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் மஹா சிவராத்திரி விழா

மதுரை : மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும்,  கோமதி அம்பிகை சமேத  சங்கர லிங்கம் சுவாமி,  சங்கரநாராயணர் கோவிலில், மாசி மாத  மஹா சிவன் ராத்திரி பூஜை  மற்றும் சிறப்பு அர்ச்சனை,  அலங்கார வழிபாடு கணபதி ஹோமத்துடன் துவங்கி நடைபெற்றது. நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், நாட்டில் நிலவும் கொரோனா நோயிலிருந்து விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

முன்னதாக  சுவாமிக்கும்,  கோமதி அம்பிகைக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது. சுவாமி  நான்கு கால பூஜையிலும் சர்வ  அலங்காரத்தில் காட்சி  அளித்தார். இன்றைய பூஜையில் பக்தர்கள், சிவனடியார்கள் லிங்காஷ்டகம், கோளறு பதிகம், தேவாரம்,  திருவாசகம்,  பதிகங்கள் பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு  சம்பா பொங்கல் அன்னம், பால் பஞ்சாமிர்தம்,  தயிர் சாதம், பாயசம், எள் அன்னம், சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. ராஜேஷ் அர்ச்சகர் ,  சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் விடிய விடிய நடந்த பூஜையில் கண் விழித்து,  கலந்து  கொண்டு, சுவாமிகள் ஆசி பெற்று சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !