திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :1812 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும், காலை, மாலை, உற்சவர், பல்வேறு அலங்கரிக்கப் பட்ட வாகனங்களில் எழுந்தருளி, வருகிறார். விழாவின், தினமும், காலை, மாலை வேத பாராயணம் நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தீர்த்தீஸ்வரர் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.