கூடலூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கூடலூர்: கூடலூர், பாண்டியார் ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
கூடலூர், பாண்டியார் அரசு தேயிலை கோட்டம் சரகம் எண் 2ல் ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா 21ம் தேதி துவங்கியது. காலை 9:00 மணி முதல் புண்ணியாக வாகனம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி பூஜை நடந்தது. 22ம் தேதி காலை 400 மணிக்கு அனுக்ஞை, விக்ணேஷ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. 23ம் தேதி மாலை 4:30 மணிக்கு ஆற்றில் இருந்து புனித நீர் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6:00 மணிக்கு முதல்கால பூர்ணாஹுதி தீபாராதனை; இரவு 10:00 மணிக்கு யந்திரஸ்தாபனம், திருமேனி பிரதிஷ்டை நடந்தது. நேற்று, காலை 6:00 மணிக்கு யாக பூஜைகளும்; காலை 9:30 மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலவர் பரிவார திருக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார, பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டி, ஊர் மக்கள் செய்திருந்தனர்.