தனிச்சியம் பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம்
ADDED :1763 days ago
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பகவதி அம்மன் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு மார்ச் 18 கும்பாபிஷேகம் நடந்தது.கோயிலில் 29 வது ஆண்டு உற்ஸவ விழா துவங்கியது. எட்டாவது நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.