போடி சுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
ADDED :1677 days ago
போடி: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு போடி சுப்பிரமணியர் கோயிலில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம் நடந்தது. தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தனர். சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். அலங்காரத்தினை அர்ச்சகர் விக்னேஸ்வரன் செய்தார்.