உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் கோவில் நன்கொடை: 15 ஆயிரம் காசோலை திரும்பின

ராமர் கோவில் நன்கொடை: 15 ஆயிரம் காசோலை திரும்பின

அயோத்தி : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷ் வசூலித்த, 22 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 ஆயிரம் காசோலைகள் பல்வேறு காரணங்களால் திரும்பிவிட்டன.  உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டது. இதுவரை, 5,000 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்படுகிறது. இறுதி தொகை, அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், வங்கி காசோலைகளாக வசூலிக்கப்பட்ட, 15 ஆயிரம் காசோலைகள், கணக்கில் பணம் இல்லாதது உட்பட, பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திரும்ப வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காசோலைகளின் மதிப்பு, 22 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதில், 2,000 காசோலைகள் அயோத்தியில் பெறப்பட்டவை என கூறப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திரும்பி வந்த காசோலைகளை, திரும்ப வங்கியில் செலுத்தவும் திட்டமிடப்பட்டு வருவதாக, ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷே த்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !