உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி லட்சுமிநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை கொடியேற்றம்

பழநி லட்சுமிநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை கொடியேற்றம்

பழநி : பழநி லட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது.

பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமிநாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா இன்று முதல் ஏப்.27 வரை நடைபெற உள்ளது. இன்று காலை 6.45 மணிக்கு சித்திரை திருவிழா கொடியேற்றதுடன் துவங்கியது. சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயணப்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார், விழாவில் மண்டகபடிதாரர்கள் 5 நபர்கள் மட்டும் மண்டகபடிக்கு அனுமதிக்கபடுவர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஏப்.,24 ல் திருக்கல்யாணம் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறும். ஏப்,26ல் நடைபெற உள்ள திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு சுவாமி சப்பரத்தில் கோயில் வளாகத்தை வலம் வரும். மேலும் சித்ரா பவுர்ணமி (ஏப்.26) அன்று திருஆவினன்குடி கோயிலில் பால்குட அபிஷேகமும், பெரியநாயகி அம்மன் கோயிலில் வெள்ளிரதமும் ரத்து செய்யப்படுகிறது. அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறி முறைப்படி திருவிழா உற்சவங்கள் ஆகம் விதிப்படி நடைபெறும். பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்யுமாறு கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !