உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்கடல் நிகழ்வு தாக்கம்; தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நீர்மட்டம் குறைந்தது

கள்ளக்கடல் நிகழ்வு தாக்கம்; தேவிபட்டினம் நவபாஷாணத்தில் நீர்மட்டம் குறைந்தது

தேவிபட்டினம்; கள்ளக் கடல் தாக்கம் காரணமாக, தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரை பகுதியில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.


தென் தமிழக கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கள்ளக் கடல் நிகழ்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஹைதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவைகள் மையம் சார்பில், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வு பெருங்கடல்களின் ஆழத்தில் பல நூறு கிலோமீட்டர் தொலைவில் ஏற்படும் புயல் மாற்றங்களால் உருவாகும் அலைகள் கரைக்கு வந்து திடீர் எழுச்சியை தரும்போது, மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களும், கடலோரப் பகுதி குடியிருப்பு வாசிகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் நிகழ்வாகும். இது கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட கடல் மைல் தொலைவு வரை கடலில், எந்தவித அறிகுறியும் இல்லாமல், இயல்பான நிலையிலையே இருந்து வருவதும், திடீரென, கடல் நீர் சீற்றம் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வாகும். இந்த கள்ளக்கடல் நிகழ்வு தாக்கமாக, நேற்று அதிகாலை முதல் தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரை பகுதியில் கடல் நீர் வழக்கத்தை விட , அலைகள் இன்றி அமைதியான முறையில் கடல்நீர் மட்டம் குறைந்து காணப்பட்டது. இதனால், பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்து அனுப்பப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !