உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமிநாராயண பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.,18ல் கொடியேற்றதுடன் துவங்கியது.


அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறி முறைப்படி திருவிழா உற்ஸவங்கள் ஆகம் விதிப்படி நடைபெறும் கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான லட்சுமி நரசிம்ம பெருமாள் சமேத திருக்கல்யாண உற்ஸவம் நேற்று பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. இதில் செயல் அலுவலர் கிராந்தி குமார் பாடி, துணை ஆணையர் செந்தில் குமார், கண்காணிப்பாளர் முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். அதன்பின் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக விலகலை கடைபிடித்து சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா். மேலும் சுவாமி புறப்பாடு கோயில் வளாகத்தில் நடைபெற்றது. நாளை (ஏப்.26)ல் சித்ரா பவுர்ணமி, நடைபெறும் திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு சுவாமி சப்பரத்தில் கோயில் வளாகத்தை வலம் வரும். மேலும் திருஆவினன்குடி கோயிலில் பால்குட அபிஷேகமும், பெரியநாயகி அம்மன் கோயிலில் வெள்ளிரதமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !