ரமலான் சிந்தனைகள்: குடும்பத்தில் நிம்மதி
ADDED :1630 days ago
நாயகத்தின் மனைவி ஆயிஷா அன்றாடம் கணவரின் துணிகளைத் துவைப்பது, அவருக்கு எண்ணெய் தேய்ப்பது, தலை வாருவது, நறுமணம் பூசுவது என பணிவிடைகளை அக்கறையுடன் செய்வார்.
கணவருக்கு சேவை செய்வது ஒவ்வொரு பெண்ணின் அன்றாடக் கடமை. அது மட்டுமல்ல! கணவர் வேலையாக வெளியே சென்று வருவதற்குள் பொருட்களை ஒழுங்குபடுத்தி துாய்மைப்படுத்துவார். அவரைப் போல பெண்கள் தங்களின் கணவருக்கு சேவை செய்யவும், வீட்டை பராமரிக்கவும் வேண்டும். குழந்தைகளின் பராமரிப்பில் அக்கறையுடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணியிலும் துாய்மை, ஒழுங்கு, அழகு நிறைந்திருக்க வேண்டும். இதனால் வீட்டிற்குள் நுழைந்தாலே மகிழ்ச்சியான மனநிலை அமையும். அப்போது குடும்பத்தில் ஒற்றுமையும், நிம்மதியும் நிலைத்திருக்கும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:29 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:08 மணி