உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பைப்பட்டி சங்கர நாராயணர் கோவிலில் அஷ்டமி பூஜை

தும்பைப்பட்டி சங்கர நாராயணர் கோவிலில் அஷ்டமி பூஜை

மதுரை: மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும்,  கோமதி அம்பிகை சமேத  சங்கர லிங்கம் சுவாமி,  சங்கரநாராயணர் கோவிலில், பங்குனி மாத  தேய்பிறை   அஷ்டமி  பூஜை  மற்றும் சிறப்பு அர்ச்சனை,  அலங்கார வழிபாடு நடைபெற்றது. நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், நாட்டில் நிலவும் கொரோனா நோயிலிருந்து விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக  சுவாமிக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது. சுவாமி  சர்வ  அலங்காரத்தில் காட்சி  அளித்தார். இன்றைய பூஜை இறைப் பணியில்  கோவையைச் சேர்ந்த டாக்டர்.குமார், சித்ரா குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பக்தர்கள் கால பைரவர் மந்திரம்,  லிங்காஷ்டகம், கோளறு பதிகம், தேவாரம்,  திருவாசகம்,  பாராயணம் செய்தனர். தயிர் சாதம், உளுந்து வடை, பால், பஞ்சாமிர்தம்,  பிரசாதம் வழங்கப்பட்டது.  திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ், சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !