ஆதிசங்கரர் அருளிய பிரசாதம்
ADDED :1897 days ago
கேரளாவில் உள்ள கொல்லூர் முகாம்பிகை கோயிலில், இரவு பூஜையின்போது அம்பிகைக்கு சுக்கு கஷாயம் நிவேதனம் செய்வர். சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் இந்த விசேஷ பிரசாதம் வழங்கும் முறையை ஆதிசங்கரரே ஆரம்பித்து வைத்ததாக வரலாறு கூறுகிறது. அம்பிக்கைக்கு சமர்ப்பித்த சுக்கு கஷாயம் பிறகு, பக்தர்களுக்கு வழங்குவர்.