கடவுளின் அருளை பெற...
ADDED :1702 days ago
வாரம் ஒருமுறையாவது கோயில் வழிபாடு செய்வது அவசியம். வீட்டில் வழிபட்டால் போதாதா என சிலர் கேட்கலாம். எங்கும் பரவியிருக்கும் கடவுளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தியானிப்பது அவசியம். பூமிக்கடியில் நீரோட்டம் பரவி இருந்தாலும், ஆழ்துளை கிணற்றின் மூலமே தண்ணீர் பெறுகிறோம். அதுபோல கோயில் வழிபாட்டின் மூலமே கடவுளின் அருளை பெற முடியும். அதிலும் பவுர்ணமி நாட்களில் மலைக்கோயில் வழிபாடு செய்வது சிறப்பு. முழுநிலவின் குளிர்ந்த கிரணங்கள் (கதிர்கள்) நம் மீது பட்டால் உடல்நலம், மனநலம் அதிகரிக்கும்.