உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில், ஆனி திருமஞ்சன திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி, நேற்று காலை நடராஜர் கோவில் சன்னிதி எதிரே உள்ள பிரமாண்டமான கொடிமரத்தில், உற்சவ ஆச்சாரியார் ரத்ன பூஷண தீட்சதர் உற்சவக் கொடியை ஏற்றி வைத்தார். கொடிமரத்திற்கு விஷேச தீபாராதனை, வழிபாடுகள் நடந்தது. 25ம் தேதி முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழாவில், அலங்கரிக்கப்பட்ட தேரில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மறுநாள் 26ம் தேதி, அதிகாலை 2.30 மணிக்கு, ஆயிரங்கால் மண்டபத்தில் மகா அபிஷேகமும், 6 முதல் 10 மணி வரை திருவாபரண அலங்கார பூஜையும், 10 மணிக்கு சிற்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா காட்சி நடக்கிறது. மதியம் அலங்கரிக்கப்பட்ட நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து, நடராஜர் சன்னிதிக்கு கொண்டு செல்லப்படுவர். அப்போது, நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் மூன்று முறை முன்னும், பின்னும் நடனமாடியபடியே பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பர். இதையே ஆனித்திருமஞ்சனம் தரிசனம் என்பர். 27ம் தேதி முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !