மக்கள் நலமுடன் வாழ கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :1743 days ago
பெரியகுளம்: கொரோனா தொற்று நீங்கி மக்கள் நலமுடன் வாழ வேண்டி பெரியகுளம் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற வழிபாடில் மகாலட்சுமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோபால கிருஷ்ணன் கோயிலில் வழிபாடு பூஜையில் ராமருடன் சீதை, லட்சுமணர் அருள்பாலித்தனர். பக்தர்கள் கோயிலில் அனுமதிக்கப்படவில்லை.