வைகாசி அமாவாசை: அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1693 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி அமாவாசை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு, 20வது ஆண்டாக மஹா அபிஷேகம் நடந்தது. இதில், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் உற்சவ மூர்த்திக்கு, பால், நெய், தேன், பஞ்சாமிர்தம், மூலிகை பொடி, பூக்கள், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில், கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.