முன்வினை பாவம் தீர்க்கும் கோயில்
ADDED :1614 days ago
வாழ்வில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறதா... கவலை வேண்டாம். குஜராத்தில் ஜூனாகட் மாவட்டத்தில் உள்ள பிரபாசப்பட்டணம் சோமநாதர் கோயிலுக்கு வாருங்கள். ஜோதிர்லிங்கத்தலமான இங்கு சந்திரன் வழிபட்டுள்ளார்.
சிவன் இங்கு பார்வதி தேவியுடன் அருள்பாலிக்கிறார். செல்வ வளத்துடன் விளங்கிய இக்கோயில் மீது கஜினிமுகமது 17 முறை படையெடுத்தான். கோயிலை இடித்து கிடைத்த தங்க ஆபரணங்களை அள்ளிச்சென்றான். தொடர்ந்து அலாவுதீன் கில்ஜி, குத்புதீன், துக்ளக், அவுரங்கசீப் ஆகியோரும் இக்கோயில் மீது படையெடுத்தனர். ஏழுமுறை இடிக்கப்பட்ட இக்கோயில் சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் புதிதாக அமைக்கப்பட்டது. இப்பகுதியில் 135 சிவன்கோயில்கள் உள்ளன.
பார்வதிக்கு 25 கோயில்களும், சூரியனுக்கு 16 கோயில்களும், விஷ்ணுவுக்கும், விநாயகருக்கும் தலா 5 கோயில்களும், நாகருக்கும், சந்திரனுக்கும் ஒரு கோயிலும் உள்ளன. இது தவிர 19 தீர்த்தக்கிணறுகள் உள்ளன. குறிப்பாக இரண்யா, கபிலம், சரஸ்வதி நதிகள் கூடும் திரிவேணி, சந்திரகுண்டம் ஆகியவை முக்கியமான தீர்த்தங்கள், ராமேஸ்வரத்தில் இருப்பதுபோலவே எல்லா தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடுகின்றனர்.
எப்படி செல்வது: குஜராத் ஜூனாகட் மாவட்டத்தில் இருந்து 95 கி.மீ.,