முருக பக்தர்கள் பேரவை கந்த சஷ்டி கவச பாராயணம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திருக்கோவிலுார் தனியார் மண்டபத்தில் ஹிந்து முன்னணி அமைப்பின் முருக பக்தர்கள் பேரவை சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண விழாவில், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல், மாவட்ட செயலாளர் ராமராஜன் முன்னிலை வகித்தனர்.
ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் மனோகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழாவினை துவக்கி வைத்து உரையாற்றினார். பி.கே.எம்., ஜூவல்லரி உரிமையாளர் செந்தில், அ.தி.மு.க., மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி, ஐ.ஜே.கே., மாநில துணை பொதுச் செயலாளர் செந்தில்குமார் குத்துவிளக்கு ஏற்றினார்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் மேற்கொண்டனர். சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் தீர்த்தமலை நன்றி கூறினார்.