ஊட்டியில் அர்ச்சகர்களுக்கு நிவாரணம்
ADDED :1658 days ago
ஊட்டி: ஊட்டியில், 16 அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.கொரோனா நோய் தொற்று பாதிப்பினால் வாழ்வாதாரம் இழந்த, 16 அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு தலா, 4,000 ரூபாய் கொரோனா கால நிவாரண உதவி தொகை, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி மாரியம்மன் கோவிலில் நடந்தது. வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பங்கேற்று வழங்கினார். எம்.எல்.ஏ., கணேஷ், இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில் வடிவேலன் உட்பட பலர் பங்கேற்றனர்.