சர்வசாதகம் என்றால் என்ன?
ADDED :1611 days ago
கும்பாபிஷேகத்தின் போது யாகம் நடத்துதல், சுவாமிக்கு மருந்து சாத்துதல், கோபுரக் கலசங்களை சரியாக வைத்தல், அபிேஷகம், ஆராதனை என எல்லாம் முறையாக நடத்த வேண்டும். இப்பணிகளை அனுபவம் மிக்க சிவாச்சாரியார் அல்லது பட்டாசாரியார் ஏற்று நடத்துவர். இவர்களை ‘சர்வ சாதகம்’ என்பர். இதற்கு ‘எல்லாவிதத்திலும் உதவுதல்’ என பொருள்.