தொற்றில் இருந்து விடுபட திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1665 days ago
வானுார், : கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டி, வானுார் திருநீலகண்டேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
ஒன்றிய தலைவர் தங்க சிவக்குமார் தலைமை தாங்கினார். வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், பொதுச்செயலாளர் சொக்கலிங்கம், செயலாளர் மனோகர், துணைத் தலைவர்கள் ராஜவேல், கிருஷ்ணன், மகளிர் அணி நிர்வாகிகள் அஞ்சலாட்சி, தனம், மாணவர் அணி நிர்வாகிகள் நவீன்குமார், அரிபிரசாத், செல்வமணி, ரமணா, வசந்தன், ஜோதி, குருபிரசாத் பங்கேற்றனர்.கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டி சிறப்பு பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.