உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பைப்பட்டி சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் ஆடி தபசு விழா

தும்பைப்பட்டி சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் ஆடி தபசு விழா

மதுரை: மேலூர் தாலுகா, தும்பைப்பட்டி, சிவாலயபுரத்தில் அருள் பாலிக்கும் கோமதி அம்பிகை சமேத சங்கரலிங்கம், சங்கர நாராயணர் சுவாமிகள் கோயிலில் இன்று (13ம் தேதி) துவங்கியது. 23.07.2021 வரை திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக இன்று காலை ஸ்வாமிகளுக்கு, எண்ணை காப்பு சாற்றி, 15 வகையான அபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து ஸ்வாமிகளுக்கு மஞ்சள் நூலில் காப்பு கட்டப்பட்டது.  கோயில் வளாகத்தில் கொடி மரம் நட்டு, பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர்.

இன்று முதல் தினசரி மாலை 4 மணிக்கு ஸ்வாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். காப்பு கட்டியவர்கள், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன், அரசு வழிகாட்டுதலின் படி, தினசரி மாலை நேர பூஜையில் கலந்து கொண்டு,  சிவபுராணம், கோளாறு பதிகம், அம்மன் திருப்பதிக்கங்கள் பாராயணம் செய்து வழிபாடு நடைபெறும். தொடர்ந்து 23.07.2021 அன்று காலை 9.15 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், சிறப்பு அர்ச்சனை, வழிபாட்டுடன், மாவிளக்கு, பொங்கலிட்டு ஸ்வாமிகளை வழிபாடு செய்வார்கள்.  அன்றைய தினம் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மனின் வேண்டுதலுக்கு ஏற்ப, ஆடி தபசு கட்சியாக சங்கர நாராயணர் ஸ்வாமியாக,  ஹரியும் சிவனுமாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !