கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சப்தமாதா பூஜை
ADDED :1677 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சப்தமாதா பூஜை நடந்தது.
திருக்கோவிலூர், தெற்கு வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சப்தமாதா, சப்தகன்னியர் மகா வைபவ விழா நேற்று முன்தினம் நடந்தது. சப்த கன்னியர்கள் கலசத்தில் ஆவாகனம் செய்யப்பட்டு சௌந்தர்யலஹரி, மகா தீபாராதனை, தொடர்ந்து சப்த கண்ணிகள் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. உற்சவர் அம்மனுக்கு கடஅபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. ஆரிய வைசிய சமூக நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.