செஞ்சி சிவசக்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED :4 days ago
செஞ்சி: செஞ்சி சிவசக்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
செஞ்சி சிறுகடம்பூர், சிவசக்தி விநாயகர் கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. இதை முன்னிட்டு 4ம் தேதி மாலை மணிக்கு விநாயகர் வழிபாடு, கலச பிரதிஷ்டை, முதல் கால வேள்வியும் நடந்தது. இன்று காலை 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 6.30 மணிக்கு கோ பூஜை, மகாசங்கல்பமும், 7 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும், 8.30 மணிக்கு வேள்வி நிறைவும், கலச புறப்பாடும், 9:10 மணிக்கு கோபுரம் மகா கும்பாபிஷேகமும், 10 மணிக்கு மூலவர் மகா அபிஷேகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.