கள்ளழகர் கோயில் நிலம் மீட்பு
ADDED :1550 days ago
அழகர்கோவில்: மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் வேதபாராயணம் செய்வதற்காக பிள்ளையார்நத்தத்தில் ஒரு ஏக்கர் நிலம் அக்காலத்தில் கோயிலுக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போதைய மதிப்பு ரூ.15 லட்சம். நன்செய் நிலமான அதை தனி நபர் ஆக்கிரமித்திருந்தார். கோயில் செயல் அலுவலர் அனிதா நிலத்தை மீட்க உத்தரவிட்டார். அறநிலையத்துறை உதவிகமிஷனர் விஜயன் முன்னிலையில் போலீஸ், வருவாய்த்துறை உதவியுடன் நிலம் மீட்கப்பட்டது.