திருவாதிரை உற்சவம்
ADDED :4852 days ago
ஸ்ரீபெரும்புதூர்:ராமானுஜர் கோவிலில் திருவாதிரை உற்சவம் சிறப்பாக நடந்தது.ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, திருவாதிரை உற்சவம் நேற்றுமுன்தினம் நடந்தது. காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனத்துடன் விழா துவங்கியது. காலை 8.30 மணிக்கு ராமானுஜர் சன்னிதியில் இருந்து புறப்பட்டு, உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு ராமானுஜருக்கு பால், தேன், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலை 6 மணிக்கு உள் புறப்பாடும் நடந்தது.