உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு

தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு

தஞ்சாவூர், ஆவணி மாதத்தின் முதல் பிரதோஷ வழிப்பாட்டை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரியகோவிலில், நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறும். ஆவணி மாதத்தின் முதல் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், திரவியப்பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பிரதோஷ வழிபாட்டில், பக்தர்கள் அனுமதிக்கப் படாததால் வெறிச்சோடி கிடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !