முருகன் கோயில்களில் சஷ்டி சிறப்பு பூஜை
ADDED :1499 days ago
நம்புதாளை: முருகன் கோயில்களில் சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது.தொண்டி அருகே நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயில்களில் ஆவணி சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள், தீபாராதனை நடந்தது. முருகன் மலர் மாலைகளால் அலங்கரிக்கபட்டு வள்ளி தெய்வானையுடன்காட்சியளித்தார். பக்தர்கள்கந்தசஷ்டி கவசம் போன்ற பக்தி பாடல்களை பாடினர்.