உத்தரகோசமங்கை களரி வீரபத்திர சுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம்
ADDED :1 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே களரியில் கருப்பண்ண சுவாமி, வீரபத்திர சுவாமி கோயிலில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த ஜன., 23 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. களரி, ராமநாதபுரம் நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த இக்கோயிலில் கும்பாபிஷேகம் நிறைவு பெற்று 48 நாட்களுக்குப் பிறகு மண்டல பூஜை நிறைவுவிழா நடந்தது. யாகசாலை பூஜையுடன் மூலவர் கருப்பண்ணசுவாமி, வீரபத்திரசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.