பழநி கோயில் வாயிலில் பக்தர்கள் வழிபாடு
ADDED :1494 days ago
பழநி : கார்த்திகையை முன்னிட்டு, பழநியில் கோயில் வாயிலில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா கட்டுப்பாடால் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என அரசு அறிவித்துள்ளது. நேற்று (ஆக.28) கார்த்திகை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர். கோயிலுக்குள் அனுமதி இல்லாததால் விரதம் இருந்த பக்தர்கள் கோயில் வாயிலில் நின்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.