உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயபுரத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

சிவாலயபுரத்தில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

மதுரை : மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் கோமதி அம்பிகை சமேத அருள்மிகு சங்கர லிங்கம் சுவாமி,  சங்கர நாராயணர் சுவாமி கோயிலில் கால பைரவர் சுவாமிக்கு நேற்று (30ம் தேதி) தேய்பிறை அஷ்டமி பூஜை, அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது.

நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், நாட்டில் நிலவும் கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக  சுவாமிக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது.  சுவாமி  சர்வ  அலங்காரத்தில் காட்சி  அளித்தார்.  இன்றைய பூஜை இறைப் பணியில் எட்டிமங்கலம்  திரு.ம. பாண்டி செல்வம், குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். கோயில் அர்ச்சகர் ராஜேஷ், சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !