உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

சாத்துார்: இருக்கன் குடி மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிடப்பட்டன. விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கணேசன், கோவில் உதவி ஆணையர் கருணாகரன் , பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிட பட்டன. ரொக்கம் ரூ 74,91,322 ம், தங்கம் 228 .400 கிராம், வெள்ளி 1100 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரியவந்தது. கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் ஆதிபராசக்தி வழிபாட்டுக் குழுவினர் காணிக்கை கணக்கிடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !