உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெற்றோரை சந்தோஷப்படுத்து

பெற்றோரை சந்தோஷப்படுத்து


கட்டளையிடுகிறார் விவேகானந்தர்

* பெற்றோரை சந்தோஷப்படுத்து. கடவுள் மகிழ்வார்.  
* பொறாமையை கைவிடு. மகத்தான செயலை செய்யலாம்.
* நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.
* உன்னால் எதையும் சாதிக்க முடியும்.
* பலமே வாழ்வு. பலவீனமே மரணம்.
* கீழ்ப்படிய கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக வரும்.
* உற்சாகமாக இரு. இதுவே வெற்றியின் முதல் அறிகுறி.
* ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.
* நீ செய்த தவறுகளை வாழ்த்து. அதுவே உனக்கு வழிகாட்டும் தெய்வமாக இருக்கும்.
* அன்பின் மூலம் செய்யும் செயல் மகிழ்ச்சி தரும்.
* உனக்குத் தேவையான வலிமை உனக்குள்ளே உள்ளது.
* உலகம் போல உன்னுடைய இதயத்தை பெரிதாக்கு.
* பணம் மட்டுமே வாழ்க்கையல்ல.
* மனவலிமையும், இரக்க குணமும் கொண்டவனே உண்மையான வீரன்.
* பிறருக்கு உதவு. அது கடவுள் அளித்த வாய்ப்பு.
* சாதனை புரியவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார்.
* உண்மையின் பாதையில் செல். வெற்றி உனக்கே.
* நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தை பார். ஓடுவது முள் அல்ல. உன் வாழ்க்கை.
* உனது பலவீனமே உனக்கு துன்பமாக அமைகிறது.
* உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !