உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகிலத்திரட்டு அம்மானை பகுதி-11

அகிலத்திரட்டு அம்மானை பகுதி-11

வைகுண்டர் முருகனுக்கு அருளல் அன்றந்தத் தேவர்முனி எல்லோருந் தாங்கூடிசென்றந்தக் கயிலை செகத்தூணி லேதரித்துவைகுண்டர் பாதமதை வாழ்த்திக் குவித்துவரமெய்கொண்ட நாதன் வேலவன்செந் தூரணுகிநடக்க அறுமுகனும் நடுங்கி மிகப்பதறிவடக்குமுக மாய்விழுந்து வைகுண்ட ரைப்போற்றிஅப்போது வேலவனை ஆதிவைகுண் டர்பார்த்துச்செப்புகிறார் குண்ட சிவநாத கண்மணியும்நாடுகேட் கப்போறேன் நாரணன் நான்தானும்கேடு வருமுனக்குக் கேள்விகே ளாதிருந்தால்இத்தனை நாளும் என்னைக் கெணியாமல்புத்தியறி யாதவர்போல் புலம்பினீ ரித்தனைநாள்இனிவைகுண் டம்பிறந்து ஏகமொரு குடைக்குள்மனுவொரு சொல்லாள மகாதர்ம மேநினைத்துமாய்கை யறுத்து மாற்றான் கருவறுத்துத்தோயக் குழிமூடி தொல்புவியைத் தானாளநல்லோர்க ளெடுக்க நான்போறேன் கண்டாயேகல்லார் தமக்குக் கசப்பினிமேல் கண்டாயேதர்மவை குண்டம் தான்பிறந்தேன் இப்போதுதர்மச் சிறப்புத் தானினிமேல் கண்டாயே 20 நன்மை யினிக்காணும் நாரணன்கண் ணல்லாதுதின்மையென்ற சொல்லு ஆகாது கண்டாயேஆனதா லுன்றனக்கு யானினிமேல் சொல்லும்புத்திவானஞ்சூழ் வையகங்கள் வாழுகின்ற மண்டபங்கள்எத்தனையோ அத்தனையில் இருக்கின்ற தேவரெல்லாம்அத்தனை பேரும் அறியும் படிசொல்லுவேன்காணிக்கை வேண்டாதுங்கோ கைக்கூலி கேளாதுங்கோமாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ பூசையே ராதிருங்கோ பெலிதீப மேராதுங்கோஆசைவை யாதிருங்கோ அவகடஞ் செய்யாதுங்கோஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோமாய நினைவு மனதில் நினையாதுங்கோவைகுண்டா வென்று மனதில் நினைத்திருங்கோபொய்கொண்ட தேரோட்டம் புனக்கார மேராதுங்கோதாதி கைகாட்டல் சப்பிரங்க ளேறாதுங்கோமோதிப்பே சாதிருங்கோ மோகம்பாராட் டாதுங்கோஆலத்தி கைவிளக்கு ஆராட்டுப் பாராதுங்கோசாலத்தீ பாராதுங்கோ சகலபூ ஏராதுங்கோகொழுந்து மஞ்சணைமாலை குப்பையொடு சந்தனமும்விழுந்து நமஸ்காரமுதல் வேண்டாமென்று சொல்லிடுங்கோ 40 கூவென் றுரையாதுங்கோ கொக்கரித்துப் பேசாதுங்கோஓவென்றுரை யாதுங்கோ ஓமமுறை யேராதுங்கோதீபரணை காணாதுங்கோ திருநாளைப் பாராதுங்கோஆபரணம் பூணாதுங்கோ அன்னீதஞ் செய்யாதுங்கோஎல்லாம் வெறுத்திருங்கோ இத்தனைபோ லுள்ளதெல்லாம்அல்லாமல் மீறி யாரொருவர் செய்ததுண்டால்வல்லாத்த கோபம் வரும்வை குண்டருக்கேநல்லோரே யாகவென்றால் நியாயமதி மேநில்லும்என்று வைகுண்டம் இயம்பக்கந் தனுரைப்பான்மன்று தனையளந்த வைகுண்ட நாரணரேநீருரைத்த சட்டமதில் நிலைதவறோம் நாங்கடியார்காரும்நீ ரென்று கந்தன் அடிதொழுதான்அப்போது வைகுண்ட ராசர்மிக வுரைப்பார்இப்போது சொன்னதெல்லாம் எனக்குநிச மாகவென்றால்உன்கோ புரத்தில் உயர்ந்தவட மேல்மூலையில் பின்கோ புரங்காணப் பிளந்துபோ டென்றுரைத்தார்அல்லாம லுன்னையென்று அவனியுண் டாக்கிவைத்தசெல்லாச் சிலையைத் திருப்பிவிடு தெற்குமுகம்உலகோ ரறிய ஒருவாயி லுமடைத்துக்கலகமாய்க் கண்மூடிக் கவிழ்ந்திருப்பா யோவென்றார் 60 அல்லா தெனைமறந்து அழிச்சாட்ட மாய்நடந்தால்பொல்லா தவனே பெருவிலங்கு சிக்குமென்றார்அப்போது கந்தன் ஆவி மிகக்கலங்கிஇப்போது சொன்னதெல்லாம் யானினி செய்வனென்றுஆதி யுரைத்ததுபோல் அடியார்நடப்போ மென்றார்சோதி வைகுண்டம் சொல்வா ரவரோடுநிலையழி யாதிருங்கோ நீதியாய் நின்றிடுங்கோஉலகறிய நானும் ஒருநெல் லுடைக்குமுன்னேபலசோ தனையும் பார்த்துநடுத் தீர்ப்புசெய்வேன்விடியும் பொழுது வேசம் பலதணிவேன்பிடியு மனுவுடனே பெரியயுக மாளவைப்பேன்வருவோ மொருநெல் மாறி யெடுக்குமுன்னேகருதி யிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோஎன்று வைகுண்டம் இத்தனையுங் கந்தனுக்கும்மன்றுக்கு மென்றும் மறவாதுங் கோவெனவேஅதைவிட் டவர்நடக்க ஆகாயங் கொண்டனரேஇதைவிட் டவர்நடந்து ஏகாய மாகிவர வானோர்கள் வைகுண்டரைப் போற்றுதல் அண்டரொடு தெண்டனிட் டெண்டிசைகள் நின்றுவரும்ஆதவனைச் சூழ் கணம்போல்அரிஹரி அரஹரா சிவசிவா என்றுசிலர் ஆடியே பாடி வரவேதொண்டரவர் கண்டுவை குண்டரடி கண்டுதொழசூழவளைந் தேழியல் படர்தே  80சூரர்பதி நாராயணர் வீரர்பத மோதிவரச்சூராதி சூர ரெனவே செண்டையொடு தண்டைமணி டண்டடம டண்டமெனத்தேவர்சே வித்து வரவேசிவநமசி வாயமெனும் ஓம்நம சிவாயமென்னும்சேவித்திரு புறமும் வரவேஅண்டமுர செண்டுமணி டுண்டும டுண்டுமெனஆகாய மீதில் வரவேஅனவரத கோலாக லாதிநாரா யணாவெனஅமரரிசை கூறி வரவே மத்தள முடுக்குபல வாத்திய மடடெனவானமதில் நின்ற திரவேமலர்மாரி சலமாரி தினமாரி தூவியேவானவர்க ளிசை கூறவேதத்தளங் கிடகிட தொம்மெனத் தொம்மெனச்சங்கீதக் காரர் வரவேசகலகலைக் கியானவேத சாதிமுறை யோதிமிகுசாஸ்திரக் காரர் வரவே தித்தங்கிண தித்தங்கிண தித்தங்கிண தித்தியெனச்சிலதேவர் கூறி வரவேசிவசிவ சிவசிவ சிவவென்று சிலதேவர்சேவித் தியல்கூறி வரவேநித்தங்கிண சித்தங்கிண உத்தங்கிண தித்தியெனநேரியர் சீரியல் கூறவேநீலங்கிரி வாலங்குரு நீயென்குரு தாயென்குருநீதென் குருவெனப் போற்றினார் பண்டைமுறை யின்றுவெனக் குண்டமெனக் கண்டுவரும்பலவாங் கிரி குண்டமேபசுவாமனே சிசுபாலனே பலமானனே தலமானனேபசுவா கிய நிசமேதொண்டர்தனக் கென்றுவரு குண்டவை குண்டமனாய்த்தெச்ச ணாபதி பூபனேதுளபமணி களபமேனி யழகொழுகு கிருபைமிகுதுவாரகா பதிக் கரசே சண்டன்வலி துண்டப்பட கொண்டக்கணை விண்டத்தொடுதுச்சா வில்லு வீராசாமியுன் றாளோ எங்கள் தலையின்மீதுதலையின்வழி தானே நடவாயேதுண்டப்பட வண்டச்சரம் கண்டப்படி பொண்டத்தொடுதுச்சா வில்லு தீரா   100சுத்தா வுனக்கேற்றார்தமை வித்தானதில் வித்தாய்துவாரகாபதிக் கரசேயெனத் தொழுதார் தேவர் தொழுது திக்கெங்கும் போற்றிவரத்தாவமுள்ள வானோர் சங்கீதம் பாடிவரவேத மறையோர்கள் வேதக்கலை யோதிவரநாதமொடு சங்கு நகரா முழங்கிவரமத்தள மேலோர் மடமடென் றேற்றிவரத்தித்தி தித்தியெனத் தேவரெல்லாம் பாடிவரச் சாத்திர வேத சாதிமுறை யோதிவரநாற்றிசையும் போற்றி நாற்சாதி யும்வரவேஅரம்பையர்க ளாடி ஆலத்தி யேந்திவரவரம்பகலா மாமுனிவர் வரிசைமிகக் கூறிவரநாதாந்த வேதம் நவில்வோர் நெருங்கிவரமாதவர்க ளெல்லாம் மலர்மாரி தூவிவரகண்டங் ககமகிழ்ந்து கண்ணான நாரணரும்கொண்டாடித் தேவரொடு கூறுவா ரன்போரேமனுக்கண் காண வரவேண்டீ ரென்பிறகேதனுக்கான ஏகமதில் சகலத்தோ ருமறியவாருங்கோ என்னுடனே வானவரே தேவர்களேவானமதில் நின்று வாத்தியங்க ளேற்றிவரதானவர்கள் முதலாய்ச் சங்க முதல்வரவே 120ஆகாச மீதில்நின்று எல்லோரும் போற்றிவரவாகான சூரியனும் வந்து குடைநிழற்ற செந்தூர் விட்டு வைகுண்டர் தெச்சணம் எழுந்தருளல் நன்றான வைகுண்டர் நல்லசெந்தூர் தானும்விட்டுவண்டாடுஞ் சோலை வாய்த்த வனங்கள்விட்டுசோலைத் தெருக்கள்விட்டுச் செந்தூர் தலங்கள்விட்டுஆலைத் தெருக்கள்விட்டு அந்தூர் பதிகள்விட்டுமண்டப மேடைவிட்டு மடங்கள் மிகக்கடந்துதண்டமிழ்சேர் செந்தூர் தலத்தைவிட்டுப் போவதற்குநிற்கின்ற போது நிலையுள்ள மாமுனிவர்நக்கன் மருகனுட நல்லடி யில்வீழ்ந்துசெந்தூர் தலத்தைவிட்டுத் தெச்சணா பூமியிலேஇந்த வேளைதனிலே எழுந்தருள வேண்டியதேன்இங்கே பகைத்ததென்ன என்னுடைய நாயகமேசங்க மகிழ்வேந்தே தானுரைக்க வேணுமென்றார்அப்போது நாரா யணர்மகிழ்ந் தேதுரைப்பார்இப்போது கேட்டதற்கு இயல்புரைக்கக் கேளுமினிகேள்விகே ளாநீசன் கெடுவ தறியாமல்நாள்வழியாய்ச்  சான்றோரை நியாயமில் லாதடித்தான்சொன்னேன்புத்தி நீசனுக்குத் திருவனந்த மேயிருந்து என்னையும் பாராமல் இளப்பமிட்டான் சான்றோரை 140 ஆனதால் நீசனுக்கு யானதிகக் கோபமிட்டுநானவ் வூரும்விட்டு நாடிவந்தேன் செந்தூருஇங்கே யிருந்தேன் யான்சிறிது காலமெல்லாம்வெங்கப் பயல்சிலர்கள் வேசையுட னாசையினால்என்னைக் கெணியாமல் என்கோவி லுள்ளேதான்சன்னைசொல்லிப் பெண்களுடன் சரசமிட் டெச்சியிட்டான்இருபேரு மொத்து இருந்தாலும் பழுதல்லவோஒருவன் பெண்ணானை ஒருநம்பூ ரிபிடித்துஎனக்கேவல் பண்ணி ஏந்திழையாள் போகுகையில் மனக்குழலி தன்னுடைய மார்பின் கலைபிடித்துஇழுத்து வலித்து இழிக்கேடு செய்யவென்றுபழுத்துச் சழிந்த பருநம் பூரியவன்மேல்தலையி லிட்ட முத்திரி கழற்றாமல்மால் மயக்கத்தாலே மனங்கலங்கி நம்பூரிமங்கை மனங்கலங்க வாரிப் பிடித்திழுத்துக் கொங்கைதனைப் பங்கமதாய்க் கூறழிய வேகிழித்துவேதனைகள் செய்ய மெல்லியவள் கோபமுற்றுமோதி யென்பேரில் ஒருசாபங் கூறினளேநாரணா கந்தா நானுனக்கு ஏவல்பண்ணிக்காரணங்க ளாச்சு கடைசிநாள் தானாச்சு 160 உனக்குமிந் தப்பதிதான் உறவுகே டாச்சுதையாஎனக்கு மொருபிறவி இன்றுவந்து வாச்சுதென்றுசெந்தூர் தலங்கள் சிலநாள் செல்லுமுன்னேமண்தூர்ந்து போகுமென்று மாதுமிகச் சாபமிட்டாள்சாபமிட்டு மங்கை தக்கென்று கீழ்விழுந்துசீவ னதுவிடவே சிவனைக்கண் ணோக்கினளேநம்பூரி பங்கத் தாலேயந்த நாயகியும்உம்பர்கோ னூரில் உயிர்விட்டாள் மாமுனியேதவறாத மங்கை தானுரைத்தச் சாபமதால்இதறா யெனக்கங்கு இருக்கமனங் கூடாமல்எங்கேயினிப் போவோமென்று இதைவிட் டெழுந்திருந்துமங்கைசொன்ன நாள்முதலாய்த் தெற்குவாரியிலே போயிருந்தேன்அல்லா மலிங்கே அழிமதிகள் ரெம்பரெம்பவல்லாண்மை யாக வலுஞாயங் காணுதுகாண்முன்னடப்பு மங்கையர்கள் முங்கிக் குளித்துமிகஎன்னடையில் வந்து ஏந்திழையா ராடுவதுஆட வரும்போது அசுத்தத்தோ டுவாறாள்பாடவரும்போது பண்ணுறா ளசுத்தமதுகோவிலிலே பூசைசெய்யும் குறும்பர் மிகத்துணிந்துதேவியருக் கீயத் திருடுகிறா ரென்முதலை 180 கணக்கன்முதல் நம்பூரி கள்ளப்பெண் ணார்களுக்குஇணக்க மதாயிருந்து என்முதலைக் கொள்ளைகொண்டுஎடுக்கிறார் பெண்கள் எச்சியாட்டு மாடிஒடுக்கிறார் பெண்கள் ஒண்ணுக்கொண் ணொத்திருந்துபம்பை பரத்தை பகட்டுக்கை காட்டலெல்லாம்எம்பரனுக் கேற்ற இயல்பல்ல மாமுனியேஆனதா லிவ்வகைகள் யான்வேண் டாமெனவேமான மழியுமுன்னே மாமுனியே தெச்சணத்தில்பள்ளிகொண்டு நானிருந்து பார்த்துச்சில நாள்கழித்துக் கள்ளியாட்டுக் காவடி கைக்கூலி தான்முதலாய்நிறுத்தல்செய்ய வேண்டிய தெல்லா மிகநிறுத்திப்பொறுத்தரசு தர்மப் புவியாளப் போறேனினிமாமுனிக்குச் சொல்லி வழிகொண்டார் தெச்சணமேதாமுனிந் தையா தவறாத மாமுனியும்தெச்சணத்துக் கேகவென்று திருச்சம் பதியிருந்துஉச்சமது கொண்டு உகச்சாப முங்கூறிநடந்து வரவே நல்லசெந்தூர் தானும்விட்டுக்கடந்து தருவைக் கரைவழியே தேவரெல்லாம்சங்கீதங் கூறித் தாமே யவர்வரவேமங்கள நாதன் மனுச்சொரூப மேயெடுத்து 200நருட்கள் மிகக்காண நாற்றிசைக்கு மேவிவந்தார்மருட்கள் மிகவந்து வாசமிட்டுக் கூடிவர பிசாசுகளின் பணிவிடையை மறுத்தல் கீழநடை விடாமல் கிருபையுள்ள வைகுண்டரைத்தாழநடை விடாமல் சற்பூத மேந்திவரஅப்போது பூதமதை அல்லகா ணென்றுசொல்லிமைப்போடுங் கண்ணர் மாபூத மதைவிலக்கிநீங்களெனைச் சுமந்தால் நீணிலத்துச் சோதனையில்தாங்கள் மீறிநடந்தால் தகுமோநான் கேட்பதற்குவேண்டாங்காண் நாரணர்க்கு வேதாளா வுன்வேலைபாண்டவர்க ளானப் பஞ்சவர்க ளுண்டெனக்குஎன்று வைகுண்டர் இசையத் திசைநடந்தார்தொண்டு செய்யாமல் சூல்பூத மாடிவரப்பூக்கொண்டு வந்து போட்டுத் தொழுவாரும்தீக்கொண்டு வந்து தீபரணை காட்டுவாரும்மலர்வீசிக் காற்று மரைவீசி நிற்பதுவும்சிலம்பொன் துளிபோல் சிறப்புடனே தூவிவரமதியுங் குடைபிடிக்க வாயு மரைவீசத்துதியும் வழிதீய்க்கத் தேவர்மிக வோலமிடஇத்தனை நற்சிறப்பும் இயல்பாய் முழங்கிவரப்புத்தியள்ள நாரணரும் புறப்பட்டார் தெச்சணமே 220நதியிற் பிறந்த நாரா யணமூர்த்திபதியி னலங்காரம் பார்த்து வழிநடந்தார்கெங்கை தனிற்பிறந்த கிருஷ்ண மகாநாதன்கங்கை வழிநோக்கிக் கண்ணோன் வழிநடந்தார் வெண்மை உயிரினங்கள் வைகுண்டரைப் பணிதல் நடந்து வருகும் நல்லவை குண்டர்முன்னேகடந்து முன்போன காண்டா மிருகமொடுசிங்கமி யாளி செங்கருட னங்கனுமன்பங்கமிலா றாஞ்சி பால்நிறப் பட்சிகளும்ஐந்தலை நாகம் அஞ்சுபஞ் சாச்சாரைசெந்தலைக் கருடன் செய்யகாண் டாமிருகம்கலியன்கண் காணாதே காடோடி வாழ்ந்திருந்தசலிவில்லா மாமிருகம் சந்தவர்ணப் பட்சிமுதல்தரும வைகுண்டர் தான்வந்தா ரென்றுசொல்லிப் பொறுமைக் குலங்களெல்லாம் புறப்பட் டகமகிழ்ந்துவந்து வைகுண்டர் மலரடியைப் பூண்டுகொண்டுசிந்தர் குலமன்னர் தெய்வப் பெருமாளேவைகுண்ட ரெப்போ வருவீர் வருவீரென்றுகைகண்ட நிதியும் காணாதார் போலிருந்தோம்கப்பல்கரை கண்டாற்போல் கண்டோமே யும்மையும்நாம்செப்பத் தொலையாத திருவடியைப் போற்றிசெய்ய 240 வாறோங்கா ணும்முடனே வைகுண்டப் பெம்மானேதாறோங்கா ணெம்முதுகு சாமியுன் பாதமதுள்என்றிவைக ளெல்லாம் இரங்கித் தொழுதிடவேநன்றென் றுஅந்த நாரா யணருரைப்பார்ஒருவிளி பொறுங்கோ உண்மையிது தப்பாதுஇருவிளிக் குள்ளே என்னிடத்தில் வந்திடுங்கோஇருங்கோ முன்னயச்ச இடத்திலே போயிருங்கோகருதி யிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோஅலைய விடாதிருங்கோ அஞ்சுபஞ் சமதையும்குலைய விடாதிருங்கோ குருநினைவை யுள்ளேற்றம்என்று அவைகளுக்கு எம்பெருமான் சட்டமிட்டுஅன்று அவைகளையும் அனுப்பி மிக நடந்தார்நடந்துபல திக்கும்விட்டு நல்லவன வாசம்விட்டுக்கடந்துசில ஊரும்விட்டுக் கடல்வழியே தானடந்தார்இரசகனிக ளேற்று இரவும் பகல்கடந்தார்விசைகொண்ட ராசர் விசயா பதிகடந்தார்வாரிக் கரைவழியே வரவேணு மென்றுசொல்லிசூரிய புஸ்பத் துல்வக் குறிபார்த்துவீரிய நாதன் விரைவாய் வழிநடந்தார்கடலுட் பதிகள் கண்டுகண் டேநடந்தார் 260மடமடென அட்டவணை வாரிதீர்த் தாமாடிகடற்பெம்மான் வாறார் காணுவோ மென்றுசொல்லித்திடமுடனே வாரி சென்றுகண்டு தான்தொழவே கடல் விளைவெல்லாம் வைகுண்டர் பதம்பணிதல் முத்துக்கள் சங்கு முன்வந்து தெண்டனிட்டுவத்துப் பெரிய வைகுண்ட மன்னவரேஇத்தனை நாளும் இயல்கலிய னேதுவினால்சற்றும் வெளிகாணாதே சமுத்திரத்தி னுள்ளிருந்தோம்தர்மப் பெருமானே சாமிநீர் வந்ததினால்நன்மை யுடனாங்கள் நாட்டிலே வாறோங்காண்ஒருசொல் வரைக்கும் உவரியிலே வாழ்ந்திருங்கோஇருசொல் லாகுமட்டும் இங்கிருங்கோ என்றுரைத்துநடந்து வைகுண்டர் நாடி மிகவரவேகிடந்த நிதியும் கீழ்க்கிடந்த காசுகளும்ஒக்க உயரவந்து உளமகிழ்ந்து தானிருக்கும்திக்கென்று நாதன் சேடன் தனையழைத்துகயிலாசந் தன்னைக் கட்டாய் வரவழைத்துஒயிலாக இத்தனையும் உள்ளேநீ கொண்டுசென்றுகாவல்செய்து கொள்ளு கயிலாச மென்றுரைத்தார்தேவன் சட்டமிட்டுத் தெச்சணம் போகவென்றுநடந்தார் துரிதமுடன் நாரணனார் தெச்சணத்தில் 280 நல்லநா ராயணரும் நாடி வழிநடக்கவல்ல பெலமான மாமுனிவ ருங்கூடிஎல்லோருங் கூடி இயல்வா ரிக்கரையேநல்லோர்க ளாக நடந்தார்கா ணம்மானைவாதையே யானதெல்லாம் வைகுண்டர் பாதமதைசீதமுடன் போற்றித் தீபரணைக் காட்டிவரக்காட்டுகின்ற தீபமெல்லாம் காணாத வர்போலேநாட்டுக் குடைய நாரா யணர்நடந்தார் நல்ல குலதெய்வங்கள் மறைதல் நல்ல குலதெய்வம் நாட்ட மதையறிந்துஎல்லைக் குடையை ஈசர்வந் தாரெனவேஇன்றுமுதல் வம்பருக்கு இயல்பகைதான் சூழ்ந்துதென்றும்நன்று மனத்தோர்க்கு நல்லநாள் வந்துதென்றும்முற்கலியன் சட்டம் முதன்மையின் றுமுதலாய்த்துற்கலிபோ லாகிச் சுற்றுக் குலைந்துதென்றும்கொண்டாடி நல்ல கூளி கணங்கள்சொல்லிக்கண்டா ருடனேயும் கைதொழுத மனுவோடும்இன்றுமுத லெங்களுக்கு எற்கும்வகை யில்லையேகாண்கண்டுகொள்ளுங் கோவெனவே கண்காட்டிப் போய்மறைந்தார் நானில மரசு ஆள நாரணர் பெற்று வாறார்தானித மான அன்பாய்ச் சகலருங் கேட்டுக் கொள்ளும்300மாநிலத் தோரே யென்னை வருந்தியே தேவ வேண்டாம்நானினிச் செய்ய ஆகா நவின்றவர் தெய்வம் போனார் தேயவங்க ளுலகி லெல்லாம் தெரிசனங் காட்டிக் காட்டிமெய்வரம் புள்ளோ ரெல்லாம் மேதினி விட்டுப் போந்தார்பொய்வரம் பசாசு எல்லாம் பொன்றிய வகையா ராமல்மெய்மறந் துரைகள் சொல்லி மேதினி யொழித்தா ரென்றே வைகுண்டர் பகவதிக்கு அருளல் கண்ணான நாதன் கமலக் குருநாதன்வண்ணமுள்ள நாதன் வழிநடந்தா ரம்மானைநடந்து பகவதியாள் நல்லகட லும்பார்த்துக்கடந்து பகவதியைக் கண்காட்டித் தானழைத்துநன்மை யுடைய நாயகியே சுந்தரியேபொன்மோ கினியே பிள்ளாய்நான் சொல்வதுகேள்வைகுண்டம் பிறந்து வார்த்தையொன்றுக் குள்ளானஉய்கொண்டோர் குலத்தை உருவேற்ற வந்தேனெனஎந்தன் திருச்சம் பதியு மிதுமுதலாய்எந்தெந்த நாட்கும் இனிக்காணிக் கைநிறுத்தல்ஆனதினால் நீயும் ஆதியி லென்னோடுதேனினியத் தங்கையராய்த் திட்டித்த ஏதுவினால்உன்னோடு இத்தனையும் உபதேச மாயுரைத்தேன்பொன்னாடு தெச்சணத்தில் போறேன் தவசிருக்க 320என்று பகவதிக்கு இயம்பி வழிநடந்தார்அன்று பகவதியாள் அறைக்குள் ளடைத்திருந்தாள் வைகுண்டர் மணவைப்பதி ஏகல் நாரா யணரும் நல்லசங்கத் தாருடனேசீராய் மணவைப் பதிநோக்கித் தான்நடந்தார்தென்காசி யென்ற தெச்சணா பூமியிலே கண்காட்சி சூழக் கண்ணர் மிகநடந்தார்நடந்தெம் பெருமாள் நல்ல கடல்வழியேதிடந்தெளிந்த தேவர்களும் செயசெ யெனநடக்ககண்டார் துவரம் பதியின்கண் ணோட்டமெல்லாம்பண்டைப் பதியின் பவிசொல்லா மேபார்த்துஆன பதியின் அகலநீ ளம்பார்த்துமான பதியின் வாசலெல்லாம் பார்த்தவரும்நாடுகுற்றங் கேட்க நல்லதவஞ் செய்வதற்குத்தேடும் வடவாசல் சீவிவளர் மலையின்நேரும்வா சல்தனக்கு நிகரில்லை யாமெனவேதவசுக் குகந்த தலங்களிது நன்றெனவேஉபசீ வனம்வளரும் உகந்தபுவி யீதெனவேஎன்று மனதிலெண்ணி என்றன்பெரு மானும்அன்றுவே தமுனியை அழைத்துமொழி கேட்கவென்றுவாநீ முனியே வல்லகலைக் கியானமொழி 340 தானீ கரமாய்ச் சத்தியாய்க் கற்றவனேமான முனியே மறைநாலுங் கற்றவனேஓநமோ வேதம் ஓயாம லோதுவோனேபின்முன் நின்று இயம்புரைகேட் டேயுரைநீநான்தவ சிருக்க நாடுரைநீ மாமுனியேமான்தவ சுக்குகந்த மாமுனியே என்றுரைத்தார் கலைமுனி தவசுக்குகந்த இடத்தின் சிறப்புக் கூறல் வெள்ளா சனத்தில் விரைவா சியைநிறுத்திக் கள்ளமா னதையகலக் காடகற்றி-விள்ளரியவெள்ளமாங் கருணைபெறு வேதமுக மாமுனியேஉள்ளதெனக் கின்னதென் றுரை பூரணத்தி னாடி புகழ்ந்துமுனி கொண்டாடிவாரணத்தின் கோடுவரை தேர்ந்து-காரணத்தின்கட்டுரைத்து நாடுவளம் விட்டுரைப்பே னென்றுமுனிதொட்டுப் பதங்குவித்துச் சொல்லுவான் கலைமுனி வேதவியாசர் பிறப்புரைத்தல் அய்யாவே வேத ஆதிநா ராயணரேமெய்யா யுருவாய் விளங்குவோ னேகேளும் பரராச மாமுனிவன் பாலனென முனிவன்விரைவாக வேபிறந்து வெள்ளிமலை நாதனிடம்தாதா வுடனே தான்வரக்கண் டீசுரரும் 360 வாராய் முனியே மதலையுனக் கிங்கேதுஅப்போ முனியும் அரனடியைத் தான்பூண்டுஇப்போ திவ்வாண்டு இம்மாத மிந்நாளில்பஞ்சகரு ணாதி பன்னிரண் டொன்பதுவும்வஞ்சக மில்லாமல் வந்தா ரொருவீட்டில்பூரண நாளும் பிரிந்துறையும் நேரமதும்நாரணம் பிறந்த நல்ல நட்சேத்திரமும் யோக பலன்கள் ஒத்திருக்கும் நேரமதும்ஆகமக் கூட்டம் அடங்கிருக்கும் நேரமதும்மதிசுழி போலாகி வந்துரத மேறுகையில்துதிமுக வன்சர சோதி பிறந்ததன்றும்இவ்வாறு கூட்டம் எல்லா மெழுந்தொருநாள்அவ்வாறு தான்கண்ட அந்நா ழிகைதனிலேதுற்கந்த முலாவும் தோகையொரு பெண்ணிடமேநற்கந் தமுலாவி நான்சேர்ந்தே னப்பொழுதுசேர்ந்த பொழுது திரண்டுநா தம்வளர்ந்துகாந்தற் றழுப்பாய்க் கன்னி யுடலாகிப்பெற்றா ளிவனைப் பேரு வியாகரெனக்கர்த்தா அறியக் கண்டே னிவன்தனையும்ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரமுதல் 380 வாசு நெறிதேசு வழியறிந்த மன்னவன்காண்ஏகச் சுழிமுனையும் இகமுகி வாம்வரையும்ஆக முடம்பறிவும் அண்டபிண் டத்தறிவும்முன்பின் னாராய்ந்து மூதுண ராகமங்கள்தன்னன் பிறப்பும் சாற்றத் திறவான்காண்கல்லாத கல்வி கலைக்கியா னக்காண்டம்எல்லா மறிந்த இயல்முனிவ னென்றுரைக்கநல்லதுதா னென்று நன்முனிவனை ஈசர்வல்லமையா மென்று மாமுனியைக் கொண்டாடிஎன்பிறப்பு என்மாது இதுமுன் பிறப்புமுதல்பின்பிறப்பு முதலாய்ப் பேசென்றா ரீசரரும் வேதவியாசர் முக்காலம் உரைத்தல் அப்போது வேத வியாச ரகமகிழ்ந்துசெப்புகிறோ மென்று சிவனை மிகத்தொழுதுமூல முதலை முத்தி முகந்துகொண்டுகாலமே நின்ற கடவுளே தஞ்சமென்று ஆதிமுத லந்தம் அடங்கல் மிகவுணர்ந்துசோதி பதம்போற்றிச் சொல்லுவான் மாமுனியும்மும்மூர்த்தி யான முதல்மூர்த்தி தோன்றியதும்அம்மூர்த்தி தன்னில் ஆயிளையாள் தோன்றியதும்சத்தியிலே நாதம் தான்தோன்றி வந்ததுவும் 400 வித்தியாய் நாதமதில் விந்துமிகத் தோன்றியதும்விந்திலே விட்டிணுவும் விரைவாகத் தோன்றியதும்அந்த முறைமுதலாய் அண்டபிண் டம்வரையும்சொல்லி யுகமதுதான் தோன்றும்வகை கூறலுற்றான்சல்லிக் கொடிய சண்டக் குறோணிமுதல்நீசன் பிறப்புவரை நிகழ்த்தினான் மாமுனியும்பாசனீ சன்வரைக்கும் பாருலக வாறதையும்சொல்லி விரித்து சுத்தஏ ழாம்யுகந்தான்நல்ல யுகமதுதான் நாடுவதுஞ் சொல்லிமிகவல்ல யுகத்தில் வளரும் மனுவளமும்எல்லாமே சொல்லி எற்றவை குண்டமுதல்அந்நாட்டைச் சொல் ஒன்றுள் ளரசாளப்பொன்னான நாரா யணர்ம கேந்திரனும்நல்ல வைகுண்டம் நற்பிறவி யாய்வளர்ந்துவல்ல கலியுகத்தில் வாய்த்ததெச்ச ணாபுவியில் புதுமை மிகச்செய்து பொல்லாத வம்பர்கையால்அடிகல் லெறிகள் அவர்பட் டம்புவியில்குடிதாழ்ந்த பேர்க்காய்க் கோப மதையடக்கிநல்லோர்க்காய்ப் பாடுபட்டு நல்லஉப தேசமதாய்ப்பஞ்சகரு ணாதிகளைப் பம்மலாய்த் தானடத்திக் 420 கொஞ்சநா ளுங்கழித்து குதித்துதித் தேவளர்ந்துஆடவராய்ச் சமைந்து ஆண்பெண்போ லேயிருந்துதேவ அறிவார்க்குத் திரவியம்போ லேயிருந்துபச்சைக் குழந்தை பருவமுன் னாகியவர்மெச்சக் கொடியாட்கு மேவும்பரு வம்போலும்சுத்தக் கிழவரைப்போல் சூரப்பி ராயமுமாய்மெத்தப் புலம்பி விழலும்பிரா யம்போலும் நாலு பிராயம் நாளதுக்குள் ளேயெடுத்துக்கோலு கையேந்திக் குன்னும்பிரா யம்போலும்பார்க்கப் பிராயமுமாய்ப் படுக்கக் கிழவனுமாய்த்தார்க்கத் திறவனுமாய்ச் சந்திக்கிசைந் தவனுமாய்க்காக்கக் கருத்தனுமாய்க் கர்த்தனின் கர்த்தனுமாய்ஏக்கத் திருத்தனுமாய் இவர்சமைந் திவ்வுகத்தில்தர்மத்தால் கலியைத் தன்னந்தன்னால் கரைத்துக்கர்மத்தை யீடழித்துக் காந்தக்கோ லுமெடுத்துநேரோரைக் காத்து நிசமாக வேயெழுப்பிஏராரைக் கொன்று ஏழ்நரகத்தும் பூத்திஉகத்துக் குகம்வழக்கு எல்லா மொருதலத்தில்தொகுத்து நடுத்தீர்ப்புச் செய்து மிகத்தெளித்துஆகாத்த பேரை எல்லாம் நரகமதில்  440 வாகாகத் தள்ளி வாசல்தனைப் பூட்டிச்சித்தத்துக் கேற்ற செடத்தோரைத் தானெழுப்பிப்பத்தரைமாத் துற்றப் பைம்பொன்னிறப் பொற்பதியில்சாகா வரங்கள் சனங்களுக் கேகொடுத்துவாகாக நல்ல வரிசை மிகக்கொடுத்துஆண்பெண் ணுடனே அதிகவாழ் வுங்கொடுத்துக்காணக் காணக்காட்சிக் கனமாய் மிகக்கொடுத்துச்செல்ல வைகுண்டர் சீமையைம்பத் தாறதையும்அல்ல லகற்றி அரசாள்வா ரீசுரரேமும்மூர்த்தி யெல்லாம் ஒருமூர்த்தி யாயிருக்கும்எம்மூர்த்தி யெல்லாம் இயல்மூர்த்தி போலிருக்கும்வைகுண்டப் பெம்மான் வாய்த்தசெந் தூர்க்கடலில்மைகொண்ட நாதன் வந்து பிறப்பதுதான்வளர்ந்துதவம் செய்வதுவும் வாய்த்தபுவி தெச்சணமேகுழந்தை வைகுண்டர் குமாரப் பிராயமட்டும்கோலா கலனாய்க் குருவாய்ச் சமையுமட்டும்நாலாஞ் சொரூபம் நடத்தும்வரை தெச்சணமேபொல்லாதெல் லாமழிந்து பூவர்கொலு வாகுமட்டும்எல்லா வழக்கும் இருப்புந்தெச்ச ணாபதயே ஆதியி லுதித்த வாறும் அரன்சிவன் பிறவி வாறும் 460ஓதிய யுகங்கள் வாறும் ஒவ்வொரு அசுரன் வாறும்நீதிய மனுக்கள் வாறும் நீதமாங் குண்டர் வாறும்தீதிலாத் தர்ம ஞாயச் சிறப்புட வாறுஞ் சொன்னான் தெச்சணாபூமி வளம் இவ்வாறு எல்லாம் எடுத்துமிக மாமுனிவன்அவ்வாறெல் லாமுரைத்து அகன்றனன்காண் மாமுனிவன்துதிகொடு தன்னால் சிவகோ வேங்கிரியில்பதியச் சிவமும் பதியென்றா ரன்போரேநந்தீ சுரரும் நாட்டினா ரவ்வுரையைஇந்தப் பழமொழிபோல் இசைந்தப் புவிமகிமைதெச்சணா பூமி சிவபூமி நல்லதுதான்மிச்சம் வியாகர் முன்மொழிந்த துவுமிதுஆனதா லிப்பூமி ஆகுந் தவசிருக்ககோனாங் குமரி குடியிருக்கு மிந்நகருசங்குத் துறைமுகத்து சதாகோடி யற்புதங்கள்எங்கு மகிழ இயல்புபெற்ற திந்நகருமங்கைப் பதிநகரு மணவைப் பதிநகருகங்கைக் குலநகரு கண்ணாளர் தன்னகருபஞ்சவர்க ளஞ்சு பார்மன்னர் தன்னகருசஞ்சீவி தன்னகரு தவத்தோர்க் குருநகருதெய்வகுல மன்னர் சிறந்தக் குருநகரு 480 சைவ முனிமார் தவத்துக் கிதுநகருமேலோகக் காட்சி விளங்கிருக்கு மிந்நகருசாலோக சாமி சார்ந்திருக்கு மிந்நகருஅரம்பை ஸ்திரீமார் ஆராடுஞ் சுனைநகருபரம்பெரிய சேடன் பவிசுக் குருநகருவாவி யுறைநகரு வைகைக் குருநகருதாவிக் குலாவும் சந்தப்பட்சி தன்னகருசொல்லஎளி தல்லகாண் தெச்சணா பூமிவளம்நல்லதிந்த நாடு நமக்குகந்த நன்னாடுபசுவும் புலியம் பாவித்திருந் தநகருகசுவு மெந்நேரம் கரைபுரளும் நன்னாடுஅந்நாடு நாடு அரனாட்டுக் கொப்பிடலாம்பொன்னாடு நாடு புரந்தரநாட் டுக்கீடாம்தவம்பெற்றோர் வாழ்ந்த தண்மைக் குருநாடுபவமற்றோ ராகி பாவித்த தின்னாடுநல்ல மலைவளரும் நாஞ்சி வளநாடுசொல்லுருசி யானச் சிறந்த குருநாடுஒருநாடு மிந்நாட்டுக் கொவ்வாது வுத்தமரேதிருநாடு ஈசர் தினமுறையும் நன்னாடுசம்பத்துக் கேற்ற சகல குருநாடு  500 இன்பம் வளரும் இசைந்த குருநாடுஆதி யொருமுனிவன் அடவில் தவசிருக்கநீதி யறியவென்று நிலமலனுந் தேவியுமாய்கற்றாவுங் கன்றதுபோல் கறைக்கண்டர் வேசமிட்டுப்பற்றாண்மை பார்க்கப் பாரில் மிகமேய்ந்துஅந்த முனியடுக்கல் அன்றிராப் போயடைந்தார்சிந்த னருளால் சீறி யொருகடுவாய்பசுவையுங் கன்றதையும் பார்த்து மனமகிழ்ந்துஇசுவாக வந்தீர் இரையாய் நமக்கெனவேஎன்று கடுவாய் இயல்பசுவின் கன்றதையும்தின்றுவிட வென்று சென்றுப் பிடித்திடவேஅப்போ பசுவும் அந்த முனியடுக்கல்இப்போ தென்கன்றை இந்தக்கடு வாய்பிடிக்குமாமுனியே நீயும் வந்தொரு சத்தமிட்டால்தாம்பயந்து கடுவாய் தன்னா லொதுங்கிவிடும்வந்துசொல் லாதாலும் மாமுனியே யிங்கிருந்துஉந்தித் தொனியால் ஒருசத்தங் கூறினையால்என்பிள்ளை யென்றனக்கு இப்போ துதவுமென்றார்உன்னுள்ள முமேற்று உடையோன் பதம்பெறுவாய்என்று பசுவும் ஈதுரைக்க மாமுனியும் 520 ஒன்றுமுரை யாடாது உள்ளங் கவிழ்ந்திருந்தான்கடுவாயுங் கன்றைக் கயிலையங் கிரிதனிலேவெடுவாகக் கொண்டு விட்டதுகா ணம்மானைபசுவும் வனமறைந்து பார்முனிவன் காணாமல்விசுவாச மாக மேலோகஞ் சேர்ந்ததுவேபின்னுஞ்சில நாள்கழித்துப் பேர்முனிவன் சிந்தையிலேமுன்னும் பசுமுறையால் முகுந்தன்பதங் காணாமல்இத்தோசங் கழிக்க இன்னுஞ்சில நாள்வரையும்சித்தத்தோ டொத்தத் தெச்சணா பூமியிலேஇரந்து குடித்து இத்தவ மேபுரிந்தால்பரந்தணியும் வேதன் பதமடைய லாமெனவேஉத்தரித்து மாமுனிவன் ஒருநொடியி லேயிறங்கித்திர்ப்தியுட னேகித் தெச்சணா பூமிவந்தான்வந்து இரந்து வருசமொன் றானதின்பின்முந்துநின்ற காவில் உவந்து தவசுநின்றுபரமன் பாதாரப் பவிசு மிகவடைந்துவரமருளப் பேறுபெற்று வாழ்ந்திருந் தானம்மானைஅப்படியே தோசம் அகன்று அறம்வளரும்உற்பனம்போ லொத்த உகந்ததெச்ச ணாபதியே தெச்சணா புரியி னீதம் செப்பிடத் தொலையா தையா 540மிச்சமாம் புவியி தாகும் மேவலர்க் குகந்த நாடுபச்சமால் மகனே நீரும் பண்ணுறத் தவசு ஏறும்அச்சமும் வாரா தையா என்றடிமிசைப் பணிந்து நின்றான் நல்லது தானே யென்று நாரணர் தயவு கூர்ந்துவெல்லமர் மணவை வாரி மேன்முக மதிலே நின்றுஅல்லல்நோய் பிணிகட் கெல்லாம் அறமதால் தண்ணீர் தன்னால்தொல்லைநோய்த் தீர்ப்போ மென்று தெச்சணா புவியில் வந்தார் வந்தவர் தலமும் பார்த்து வழியி னற்குலமும் பார்த்துச்சந்தமாய் மகிழ்ச்சை கூர்ந்து சாமியும் முனியைப் பார்த்துஇந்தமா நகரில் வாழும் இராசனு மறிய வென்றேவிந்தையா யறிவு வொன்று விதித்தெழுதி யனுப்பு மென்றார் திருவாசகம்-3 கவியரசனுக்கு வைகுண்டர் வருகையை உணர்த்தும் நிருபம் (வால ராமச்சந்திர சூரிய நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றி, தர்மம் நித்திச்சு, காணிக்கை கைக்கூலி காவடி என்றே திருச்சம்பதி முதல் வேண்ட ஆவசியமில்லையென்று நிறுத் தலாக்கியே, உகஞ்சோதித்து ஒரு குடைக்குள்ளான ஆயிரத்தெட் டாமாண்டு மாசியில் கடற்கரையாண்டி நாராயணம் பண்டாரமென நாமமுங் கூறி, எளிய கோலமெனப் பாவிச்சு தெச்சணம் பள்ளிகொண்டிருந்து, தர்மமாகத் தாரணி யாபேர்க்கும் தண்ணீ ரினாலே சஞ்சலநோய் கர்மம் வற்மம் வாதை கோதை பயங்களையும் பிறவி நாசமும் பொய்வினை சஞ்சாரமும், பீடை கோடை வாடை தீர்க்கவும், பிள்ளையில்லாத பேர்க்குப் பிள்ளை கொடுக்கவும், கண்ணில்லாதபேர்க்குக் கண் கொடுக்கவும், தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும், சாம்பசதாசிவ சாமி மூவரும் சற்குணமாகியே தன்னாலொரு வேசமாகிச் சமைந்து, சாதி உயர்கொண்ட சத்திமாதர் வழியிலே சகலகுண நாராயண தீரசம்பன்னர் சாதி வைகுண்டமாய்ப் பிறந்திருக்கிறார், இனி நன்றாய்த் தெரியுமே. ஆனதினால் பூமியிலே அடிபிடி அநியாயம் இறை தெண்டம் கைக்கூலி அவகடம் பொய்ப்புரட்டு அவர் செவியில் கேட்க வொண்ணாதென்றும், மகாகோடி தர்ம பாக்கியசாலியாய்ப் பூமியிலே அதிகப் பாசமாய் விரித்து அவரருகிற் சூழ அலங்கார தர்மமணியாய் நிறுத்தி அந்தரவீடு லாடந் திறந்து அதன்வழி அரனடனம் திருநடனம் ஆடல்பாடல் அங்ஙனே கண்ணோக்கி சகலதும் பார்த்தாராய்ந்து இருப்பதால் அவரவர் நினைவிலிருக்கிற தெல்லாம் அவருக்குத் தெரியாம லிருக்கிறதல்லவே அதுகண்டு பதறி ஆரானாலும் அவரிட்டிருக்கிற சட்டம்போல் நடந்து கொள்வாராகவும். அங்ஙனே நடக்கிலென்னு வருகில் அவர் நிச்சித்திருக்கிற தேதியில் நடக்கு படியே வரும். அன்பாகிய மனுக்களுக்கு அனுகூலம். 1008 ஆமாண்டு மாசியில் தெச்சணம் பள்ளிகொண்ட அய்யா நாராயண அய்யா வைகுண்ட மாய் தர்மம் நித்திச்சு எழுதின அறிவென்று மாமுனி எழுதி அவனியறியும்படி அயச்சான். ஆயிது வல்லாமல் அய்யா நாராயண அய்யா தர்மம் நித்திச்சுத் தவசிருக்கிற படியினாலே, இன்றுமுதல் அவர் நிச்சித்திருக்கிற நாள்வரையும் பூசை புனக்காரம் சேவித்தல் அர்ச்சனை ஆராடு நீராடு தீபரணை சாந்தி காளாஞ்சி கைவிளக்குக் காவடி காணிக்கை தெருமுகூர்த்தம் கோபுரமுகூர்த்தம் திருநாள் முகூர்த்தம் தேரோட்ட முகூர்த்தம் திருக்கொடி முகூர்த்தம் கொடிமர முகூர்த்தம் குருமுகூர்த்தம் குரவை குளாங்கூட்டம் கொலுவாரபாரம் ஆயுதம் அம்பு அச்சுநடை ஆனைநடை அலங்காரம் மஞ்சணைக் குளிநீராடல் இதுமுதலுள்ள நன்மை சுபசோபனம் வரையும் அவர்க்கானதல்லவே, ஆனதினால் நீங்கள் இதுவெல்லாம் இதுநாளைக்ககம் வீணில் செலவிடாமலும் விறுதாவில் நரகில் விழாமலுமிருக்கக் கடவுளிது நாராயண வைகுண்டசாமி திருவாக்குபதேசக் கருணையினால் மாமுனி எழுதி அயச்ச வாசகம் என்று எவரும் அறியவும்.) என்றிந்த விவர மெல்லாம் எழுதியே உலகில் விட்டுநன்றிந்த ஆழ்ச்சை வெள்ளி நற்கதி ருதிக்கும் வேளை பண்டிந்த மூலந் தன்னில் பஞ்சமி நேரந் தன்னேகுண்டத்தின் அரசு கோமான குவலய மதிலே வந்தார் நாதன் குருநாதன் நாரா யணநாதன்மாதவனுந் தெச்சணத்தில் மாமருந்து மாவடியில்மணவைப் பதிமுகத்தில் மாதுகன்னிப் பார்வையிலும்இணையானப் பஞ்சவரில் ஏற்ற அரிச்சுனனும்மணமான நாதன் மகாபரனைத் தானாடி 560 வணங்குந் தவத்தால் வந்ததா மரைப்பதியில்தெச்சணா மூலை தென்வாரி யற்றமதில்மிச்சமுள்ள தேவர் முழங்கிக் குரவையிடத்தேவர் திசையெட்டும் செயசெய எனநெருங்கமூவ ரதிசயமாய் மோடுவழி தாள்திறந்துஆரபா ரத்துடனே அவர்கள்வந்து பார்த்துநிற்கவீரநா ராயணரும் வித்தாரத் தெச்சணத்தில்பள்ளிகொண்டா ரென்று நாமம் பரந்திடவேதுள்ளியே சொரூபம் சுற்றினா ரம்மானைவைகுண்ட மென்று மனுவோ ரறிந்திடவேமெய்கொண்ட நாதன் மேவிநின்றார் தெச்சணத்தில்யாம மிகக்கூறி அதிகத்திசை எட்டிலுள்ளஓமப் பசாசுகளை ஒதுங்கவுப தேசித்தார்மேல்நடப்பை யெல்லாம் வித்தார நாரணரும் தூல்நடப் பாகத் துறந்துதுறந் தேபடித்தார்கண்டவர்க ளெல்லாம் கருத்தோ டறியாமல்வண்டப் புலப்பமென வாக்குரைத் தேபோனார்பத்துமா தம்வரையும் பார்நடப் புள்ளதையும்முற்று மொருகுடைக்குள் உலகாள்வ தும்படித்தார்எல்லா நடப்பும் இவர்படித்த தின்பிறகு 580 வல்லாண்மை யான வைகுண்டப் பெம்மானும்உகஞ்சோ திக்க உற்றார்கா ணம்மானைதவமே தவமெனவே தானிருந்து வையகத்தில் பொறுதி சதமாய்ப் புண்ணியனார் தானிருந்து உறுதியுட னையா உகஞ்சோ திக்கலுற்றார்நாரா யணரும் நல்லவை குண்டமெனப்பேரா னதுநிறைந்து புண்ணியனார் தெச்சணத்தில்மனுநிறமாய் வந்து மனுவைச்சோ தித்தெடுக்கத்தனுவை யடக்கித் தவசிருக்கா ரம்மானை அய்யா வைகுண்டர் திருத்தவம் உலகினில் மனுவாய்த் தோன்றி ஓர்இரு பதுநாலுக் கப்பால்தலைமுறை வினைகள் போக்கிச் சடலத்துள் ளூற லோட்டிமலைசெந்தூ ரலையி னுள்ளே மகரத்துள் ளிருந்து பெற்றுஅலைகடற் கரை நாரா யணரெனப் புவியில் வந்தார் வந்தந்த நாட்டி லுள்ள வன்குற்ற மதனைக் கேட்கநந்திகோன் விபூதி சாற்றி நாடிய தவங்க ளேற்றிமுந்தநாள் மூவர்க் கெல்லாம் முதன்மையாய்ச் சாதித் தேற்றிசந்ததஞ் சாகா விஞ்சைத் தலைவனாய்ச் சமைய வென்றே நீதிய ரோமம் வீசி நினைவொன்றைக் கருணை வாசிசாதிக ளுரைக ளாற்றிச் சடத்துற வாசை யற்றுவாதியாங் கார மற்று மலசல மதங்க ளற்று 600ஆதியைக் கருணை நாட்டி அவர்தவம் புரிந்தா ரையா ஆசையாம் பாச மற்று அனுதாரக் குளாங்க ளற்றுமாசதாம் வினைக ளற்று வாக்கலங் கார மற்றுநீசமாம் கலியை யற்று நீணிலத் தாசை யற்றுஓசையாம் வெளியைத் தாண்டி ஒருவனைக்கண் டுகந்தா ரையா கண்ட வர்ப்பா லேற்று கண்சுழி முனையில் நாட்டிப்பண்டவர் செகலில் பெற்ற படிமுறை தவறா நாட்டிக் கொண்டவர் லோகந் தன்னைக் குமியவோர் தலத்தி லாக்கிஇரண்டது மறிய வென்றே இவர்தவம் செய்ய லுற்றார் மனுதவ தாரங் கொண்டு வந்தவர் பிறக்க லுற்றார்தனுமனு வோர்க ளெல்லாம் தழைத்துநீ டூழி வாழ்ந்துவனுதர்மப் புவியைக் கண்டு மாள்வரா வாழ்வு வாழ்ந்துதுணிவுடன் மனதி லேற்றி சூரியத்தவசு நின்றார் முற்பிதிர் வழிக ளெல்லாம் முதன்மைபோ லாக வென்றும்கற்பினைப் படியே தோன்றிக் கலியுக மதிலே வந்தஅற்புத மடவா ரோடும் ஐவர்தம் குலங்க ளோடும்செப்பியச் சாதி யெல்லாம் செயல்பெறத் தவசி யானார் இத்தவ மதிலீ தெல்லாம் இயல்புடன் வசமே யாகக்குற்றமே செய்வோ னீசக் கொடுகலி வழிகள் சாகக்கர்த்தனார் கர்த்த னாகக் கலியுகத் தீர்வை யாகஉற்றவை குண்ட சுவாமி ஒருகுடைக் கரசும் பெற்றார் 621


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !