உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகிலத்திரட்டு அம்மானை பகுதி-13

அகிலத்திரட்டு அம்மானை பகுதி-13

கலி சோதனை இருந்தனர் விஞ்சை பெற்று இருபுற முனிவர் சூழப்பொருந்திடும் கமல மாது பூரண மதுவாய் நிற்கக்கரிந்திடும் நீசப் பாவி கயிறுவாள் வெடிகள் சூலம்புரிந்தவன் கோட்டி செய்து பிடிக்கவே வந்தா னங்கே வருமுன்னே யருகில் நின்ற மக்களை வைந்த ராசர் கருதின மாக நோக்கிக் கடக்கவே நில்லும் நீங்கள்பொருதிட நீசன் வாறான் பொறுத்துநாம் வந்த போதுஅருகிலே உங்கள் தம்மை அழைத்துநாம் கொள்வோ மென்றார்முப்படியே யுள்ள முறைநூற் படியாலேஇப்போது நீசன் இங்கோடி வாறான்காண்மெய்ப்பான மக்களெல்லாம் விலகிநின்று வந்திடுங்கோசெய்கிறதைப் பார்த்துத் திரும்பியிங்கே வந்தவுடன்கையருகி லுங்களையும் கட்டாய் வரவழைப்போம்என்று மக்களுக்கு இயம்ப அவர்விலகமுன்குறோணி விந்திலுள்ள மூடக் கௌடனவன்கூட்டப் படையோடு கொக்கரித் தேதுடிப்பாய்ச்சாட்டை வெறிபோலே சாடிவந் தான்கௌடன்சூழப் படையைச் சூதான மாய்நிறுத்திவேழம் பலரேவி வெடியா யுதத்துடனேவந்து வளைந்தான் வைகுண்டர் வாழ்பதியில் 20 சிந்துக் குயிரான ஸ்ரீபல்ப நாபருமேகவிழ்ந்துபதி வாசலிலே கட்டிலின் மேலிருக்கஅவிழ்ந்த துணியோடே அவரிருக்கு முபாயமதைஅறியாமல் நீசன் அணிவகுத்துத் தன்படையைக்குறியாய்ப் பிடிக்கக் கூட்ட மதில்நுழைந்துசாணா ரினங்கள் சதாகோடி கண்டுளைந்துவாணாள் வதைப்பானோ என்று மனதுளைந்துகுதிரை மேலேறிக் கொடுஞ்சாட்டை யால்வீசிசதிரு சதிராய்ச் சாணாரைத் தானடித்துஅடிபட்ட போது அவர்கள்மிகக் கொக்கரித்துமுடிபடவே யிந்த முழுநீச வங்கிசத்தைஇப்போ தொருநொடியில் இவரையெல் லாமடித்துமெய்ப்பாகக் கொன்று விடுமோ மெனச்சினத்தார்ஆளுக் கொருவன் ஆவானோ நீசனெல்லாம்தூளுபோ லாக்கவென்று துடியா யெழுந்திருந்தார்சான்றோர் சினத்துத் தாறு மிகப்பாய்த்துஆன்றோரை நெஞ்சில்வைத்து ஆடை மிகஇறுக்கிஉடையிறுக்கிக் கட்டி உல்லாசத் தொங்கலிட்டுப்படைத்திரளாய்ச் சான்றோர் பண்பா யொருமுகமாய்எதிர்த்துநிற்கும் போது எம்பெருமாள் தானறிந்து 40பொதுக்கென்ற கோபமதைப் புந்திதனி லடக்கிப் சுவாமி பொறுமையுரைத்தல் பொறுத்து இருந்தவரே பெரியோரே யாகுமக்காஅறுத்திட வென்றால் அபுருவமோ என்றனக்குவம்புசெய்வதைப் பார்த்து வதைக்கவந்தே னக்குலத்தைஅன்புக் குடிகொண்ட அதிகமக்கா நீங்களெல்லாம்பொறுத்து இருங்கோ பூலோகம் ஆளவைப்பேன்மறுத்துரை யாடாமல் மக்களென்ற சான்றோர்கள்என்னசெய்வோ மென்று இவர்களையைத் தாங்கடித்துபின்னே விலகிப் பெரியவனே யென்றுநின்றார் நீசன் கொடுமை நீசன் மகிழ்ந்து எதிர்ப்பாரைக் காணோமென்றுபாசக் கயிறுகொண்டு பரமவை குண்டரையும்கட்டி யிறுக்கிக் கைவெடியா லிடித்துக்கெட்டி யிறுக்கிக் கீழேபோட் டுமிதித்துத்தலைமுடியைத் தான்பிடித்து தாறுமா றாயிழுத்துக்குலையக் குலைத்ததுபோல் குண்டரைத் தானலைத்துக்குண்டியிலே குத்திக் குனியவிடு வானொருத்தன்நொண்டியோ வென்று நெளியிலே குத்திடுவான்வெடிப்புடங் கால்சுவாமி மேலெல்லாந் தானிடித்துஅடிப்புடங்கு கொண்டு அடித்தடித்துத் தானிழுப்பான்சாணாருக் காகச் சமைந்தாயோ சுவாமியென்று 60 வாணாளை வைப்போமோ மண்டிப் பதனிக்காராபனையேறி சுபாவம் பட்டுதில்லை யென்றுசொல்லிஅனைவோரை யும்வருத்தி ஆபரணந் தேடவென்றோசமைத்தாய் நீசுவாமியென்று சாணாப் பனையேறிபனைச்சிரங் கின்னம் பற்றித் தெளியலையேஉனைச்சுவாமி யென்றால் ஒருவருக்கு மேராதேஆளான ஆளோநீ ஆளில் சிறந்தவனோதாழாய்க் கிடந்து சாமியென்று வந்தாய்நீநாரண சுவாமி நானென்ற தும்நீயோ வாரணத்தின் காலில்கட்டி வாட்டுவோம் பாருஎன்பான்உன்னோடு நின்றவர்கள் உன்னை யடிக்கையிலேஎன்னோடு வந்து என்னவென்று கேட்கலையேநீசுவா மியென்றால் நெகிழுவ ரோஇவர்கள்பாசக் கயிறு பற்றுமோ வுன்கையிலேவகைதேட வென்று மனுச்சுவாமி யென்றாயேபுகையோடு புகையாய்ப் போறாய்நீ வம்பாலேநருளை வருத்திவிட்ட நல்லமந்தி ரத்தாலேமருளச்செய் தெங்களையும் மண்ணில்விழ வைபார்ப்போம்அல்லாம லுன்கைக் கட்டு மறுவதற்குவல்லாமை யுண்டானால் மந்திரத்தைப் பார்நீயும் 80 கூனைப் போலிருந்து குறுமுழி முழிப்பதென்னநானன்னா வென்று நகைப்பா ரொருகோடிஏசுவார் கோடி எறிவா ரொருகோடிபேசுவார் கோடி பேயன்வெறும் பேயனெனச் சொல்லி நகைப்பார் சுத்தமுள்ள நாரணரைபல்லுயி ரும்படைத்த பரமன்வாய் பேசாமல்கவிழ்ந்து கண்மூடிக் களிகூர்ந் தேமகிழ்ந்துசவந்தரிய நாதன் தானே நடக்கலுற்றார்வெடிகொண் டிடிப்பார் வெட்டவா ளோங்கிடுவார்அடித்தடித்துத் தள்ளி அங்குமிங் குமிழுத்துவேதனைகள் செய்வார் வேதநா ராயணரைசாதனைக ளுள்ள சர்வபர நாரணரும்எவ்வுகத் துக்கும் இப்பாடு என்பாடுஇவ்வுகத் துக்கும் இப்பாடு என்பாடுஅவ்வுகத்தி லுள்ள அநியாயப் பாவிகளை இவ்வுகத்தைப் போலே எரியாமல் விடடேனோஎன்று மனதில் இதமாய் மிகவடக்கிஒன்று முரையாமல் ஊமைபோ லேநடந்தார்நடக்கவே மாயன் நல்லன்பு சான்றோர்கள்கடக்கவந்து நின்று கண்ணீர் மிகத்தூவி 100 ஏழைக்கா யிரங்கி எங்கள்குல மீதில்வந்தீர்கோழைக் குலநீசன் கொண்டடிக்க வந்தானேபாவிநீ சனாலே பட்ட துயரறிந்துஆவுமேய்த் தநாதன் ஆளவந்தார் நம்மையுமேஅய்யோஇனி நாமள் அலைந்துமிகப் போவோமெனமெய்யோடே குத்தி விழுந்தழுவார் சான்றோர்கள்தாய்தகப்ப னில்லையென்று தானடித்த நீசனெல்லாம்வாயயர்ந் திருந்தானே இவர்வந்த நாள்முதலாய்இனியாரு நம்மை ஏற்றுக்கை தாறதுதான்தனியானோம் நாமளினித் தலையெடுப்ப தெக்காலம்என்று சான்றோர்கள் சொல்லி யழுதசத்தம்கன்றுக் கிரங்கும் கண்ணர் மிகக்கேட்டு அய்யா சான்றோர்க்கு அருளல் மலையாதுங் கோநீங்கள் மாமுனிவன் புத்திரரேஅலையாதுங்கோ மக்காள் அய்யா திருவாணைஇப்பூமி தன்னில்வந்து இத்தனை நாள்வரைக்கும்கைப்பொருளுக் கிச்சை கருத்தில் மிகநினைத்துக்கைக்கூலி வேண்டிக் கருமஞ்செய்தே னானாக்கால்இக்குவ லயத்தில் இனிவரேன் கண்டிருங்கோதன்மமது நிச்சத்துத் தாரணியில் வந்துண்டால்நன்மைக் கடைப்பிடித்து நான்வருவேன் நானிலத்தில் 120ஒன்றுக்கு மலைய வேண்டாங்கா ணுத்தமரேஎன்றைக்கும் நானிருப்பேன் என்மக்கள் தங்களிடம்ஆளுவே னோர்குடைக்குள் ஆனவை குண்டமனாய்ஆளுவோம் மக்கா வையகத்தை நாமாக ஒன்றுக்கு மலைய வேண்டாம் உகபர நாத னாணைஎன்றுக்கு மலையின் மீதில் ஏற்றின தீபம் போலேகன்றுக்குப் பாலு போலும் கண்ணுக்குப் புருவம் போலும்என்றுக்கு மக்கா வுங்கள் இடமிருந் தரசு ஆள்வேன் முன்முறை விதியா லிந்த முழுநீசப் பாவி கையால்என்விதிப் படவே வுண்டு இறப்பொன் றனக் கென்றதாலேபின்விதி யெனக்கு நன்றாம் பெரும்புவி யாள்வோ மக்கா உன்விதி நல்ல தாகும் ஒளிவறா வாழ்வீர் தாமே சுவாமி கைது என்று மகிழ்ந்து எம்பெருமா ளுள்ளடக்கிமன்று தனையளந்த மாலோன் நடக்கலுற்றார்கெட்டினக் கெட்டைக் கிறுக்க முடனிறுக்கிக்கட்டினக் கட்டோடே கடுநீசன் தானடத்திஏசுவார் மாயவரை எறிவார்காண் மாயவரைப்பேசுவார் மாயவரைப் பேயனென்பார் மாயவரைஇப்படியே நீசக் குலங்களெல்லா மாயவரைஅப்படியே பேசி அடித்து மிகநடத்தி 140 நீசக் குலமிருக்கும் நெடுந்தெருக்க ளூர்வழியேபாசக் கயிறோடு பகற்கள்ள னைப்போலேதெருவுக்குத் தெருவு சிறுகுழந்தை நீசர்குலம்வருகின்ற மாயவரை மண்கட்டி பேர்த்தெறிவார்தலையைப் பிடித்திழுப்பார் சடைப்பேயன் பேயனென்பார்இலைசருகு போலே எரியுகின்ற சாதியெல்லாம்குண்டியிலே யொருவன் கோல்கொண்டு குத்திடுவான்நொண்டியோ வென்று நெளியிலே குத்திடுவான்நம்மள் குலத்தை நாணங் கெடுக்கவந்தபம்பக் குறும்பேயன் பம்பைதனைப் பின்னுமென்பார்அதிலுஞ் சிலபேர் அடடாபோ என்றிடுவார்மதிலேறி வந்து மாமட வார்சிலர்கள்இவன்தா னடியோ என்னையுமே ஆடவைத்துச்சவந்தனையே சுட்டதுபோல் தான்சுட்டப் பேயனிவன்தலைமயிரைப் பனையில் தான்பங்கு வைத்திறுக்கிக்குலையக் குலையக் கொன்னகொடும் பாவியிவன்என்று எறிவாள் இவள்சிலர்க ளம்மானைஅன்றுதுகள் கண்டு அதிலுஞ் சிலமடவார்ஆமடியோவுங்களையும் அழைத்தானோ வீட்டில்வந்துஓமடியோ இந்த இறுமாப்புப் பேசாதுங்கோ 160 அன்றைக் கவனை அடிபணிந்து நின்றுகொண்டுஇன்றைக் கவனை எறியத் தொடர்ந்தாயோஎன்று சிலபேர் எறியாதே யென்றுரைப்பார்நன்று நன்றென்று நாரணரு முள்ளடக்கிஒருதிக் கொருதி உரைத்திடுகோவெனவேகருதிமுகம் பாராமல் கண்ணர் மிகநடந்தார்பாவிக் குலங்கள் பச்சைமால் நாரணரைதாவிச் சுசீந்திரத் தலம்நோக்கிக் கொண்டுசென்றார் சுசீந்திரத்தில் அய்யா கொண்டுபோ கும்வேளை கொடும்பாவி நெட்டூரன்விண்டுரைக்கக் கூடாத வேதனைகள் செய்யலுற்றான்அய்யய்யோ மாயவரை அன்னீத மாபாவிசெய்த வினையெல்லாம் சொல்ல முடியாதேகொண்டுவிட்டு மாயவரைக் கூண்டகலி ராசன்முன்னேகண்டு கலிராசன் கருத்தில் மிகத்தேர்ந்துபார்ப்போம் பரிட்சை பயித்தியக்கா ரனுடனேதாற்பரிய மாகத் தன்விரலின் மோதிரத்தைக் கழற்றி யொருவர் காணாமல் கையடக்கிச்சழத்தி வருவது தானறியா நீசன்வன்ஏதடா என்றன் கைக்குள் ளிருப்பதையும்ஓதடா வுன்றன் உற்ற வலுவாலே  180 அப்போது மாயன் அடக்க மிக அறிந்துஇப்போ துரைத்தால் இந்தநீ சக்குலங்கள்கண்டு பிடித்துக் கட்டுவார் நம்மையுமேதொண்டுசெய்யுஞ் சான்றோர் துயரமது மாறாதுநாம்நினைத்தக் காரியமும் நடந்திடா தானதினால்ஏனிதைத்தான் சொல்லப் போறோ மெனஅடக்கிஎல்லாம் படைத்த ஏகன் கிருபையெனஅல்லா நினைத்தபடி ஆகு மெனவுரைத்தார்அப்போது நீசன் அவன்வெகுளி யாயுரைப்பான்இப்போ தொருமருட்டாய் இவன்சமைந்தான் சுவாமியென்றுமருளிதுதா னென்று மாநீசன் தான்மருண்டுகொண்டுபோங் கோசறடன் கூண்டவன் முன்பதிலேஎன்றுரைத்த போது ஏவல்சீவா யிகளும்நடத்தி யிழுத்து நாரா யணரையுமோகடத்திச் சறடன் கண்டிருக்கக் கொண்டுவிட்டார்உடனே சறடன் உபாயமதைப் பார்ப்போமென்றுதடதடென எழுந்து சாராய மானதிலேஅஞ்சுவகை நஞ்சு அதில்கலந்தான் மாபாவிநஞ்சில்லை யென்று நல்லபா லென்றீந்தான்பாலென்ற போது பச்சைநா தன்மகிழ்ந்து 200 காலனைக்கா லாலுதைத்தக் கடவுளார் தாமகிழ்ந்துவேண்டி யகமேற்றார் வேதநா ராயணரும்ஆண்டி யதனால் அஞ்சா திருப்பதையும்பார்த்துச் சறடன் பண்நா யகமகிழ்ந்துவேற்றொரு சூட்சம் வேறேயுண் டாகுமெனஎன்னமோ என்று இவனுணர்ந்துப் பாராமல்பொன்னர் மயக்கம் பெரிய மயக்கமதால்கொடுபோங் கோவென்று கூறினான் சேவகநாடுவெடுவாகக் கொண்டு வெறுநீசன் டாணாவில்அடைத்துவைத் தானங்கே அன்னீத மாபாவிதிடத்தமுடன் நாரணரும் சிந்தைமிக மகிழ்ந்துஇருந்தா ரேயங்கே ஏழைக்கிரங்கி யவர்தருந்தார ருக்காகத் தடியிரும்பி லுமிருந்தார்மாண்டோ ரையுமெழுப்பும் மாய வலுவாண்டிஅய்யோ அவரை அடைத்துவைத் தேயிருந்தபொய்யோ புரைக்குள் பொறுக்குமோ கண்ணுகண்டால்மோளுக் குழியும் மொய்த்தத்தெள் ளினங்களுமாய்த்தோளு வழியே சொரியுதே தெள்ளினங்கள்அட்டை மித்க அரியத்தேள் ஈமிதிக்க 220 விட்ட நரகு மிகுவாய்ப் புழுமிதக்கநாற்றத் துறைகள் நரகத் துறைபோலேபார்த்த இடமெல்லாம் பலபுழுக்க ளுஞ்சரியஐயோ அய்யாவை அடைத்தப் புரையதிலேகையாடி நிற்கக் காரணமோ மாயவர்க்குசான்றோ ருக்காகத் தர்மக் குருநாதன்மீன்று முழியாமல் முகமலர்ந் தங்கிருந்தார்ஏழை களுக்காக ஈரொன்றொரு நாளாய்மீளாச் சிலுவையிலே முள்ளா லடிகள்பட்டுமரித்துப் பிறந்ததுபோல் மாயக் குருநாதன்இதுவுகத்துக் கிப்புரையில் இருந்து அழுந்தவென்றுஇருந்தாரே மாயவனார் ஏழைகளுக் காயிரங்கிக்கருந்தார மார்பன் கருத்தில் மிக அடக்கி அய்யாவை அனந்தபுரம் கொண்டு செல்லல் எல்லா மடக்கி இவரிருக்கும் நாளையிலேபொல்லாக் கலியன் புறப்பட்டான் மேற்கெனவேஇப்பே யனையும் இங்கேகொடு வாருமென்றுஅப்போது சொல்லி அவனடந்தான் மேற்கெனவேஉடனே சிவாயி உற்றநா ராயணரைத்திடமாகக் கூட்டிச் சிணமே நடக்கலுற்றான்கொண்டு போனாரே கோட்டாற்று ஊரோடே 240 கண்டுபெரும் பாவியெல்லாம் கட்டிகொண்டு தானெறியஎறிவார் சிலபேர் ஏசுவா ரேசிலபேர்வெறிப்பேய னென்று விரட்டி மிகஎறியார்எல்லாம் பொறுதியுடன் எம்பெருமா ளுமடக்கிக்கல்லாரை யெல்லாம் கமக்கியறுப் பேனென்றுமனதி லடக்கி மாய நெடுமாலும்கனகத் திருமேனி கண்கவிழ்ந் தேநடந்தார்நடந்தாரே கோட்டாறு நல்ல பிடாகைவிட்டுக்கடந்தாரே சுங்கான் கடையெல்கைத் தானும்விட்டுப்பத்மனா புரத்தெல்கைப் பார்த்துத் தெருவோடேஉற்பனமாய் மாயன் உள்தெருவோ டேநடக்கஆகாத பாவியெல்லாம் அவரைக்கண் டேநடக்கஆகாத பாவியெல்லாம் அவரைக்கண் டேபழித்துவாயாராப் பேசி வைதாரே நீசரெல்லாம்அதிலு மன்போர்கள் அவரைக்கண் டேபணிந்துஇதுநாள் வரையும் இவர்நடந்த சட்டமதில்பொல்லாங்கு செய்தாரெனப் பேருநாம் கேட்டதில்லைஎல்லாங் கடைதலைக்கு இட்டதர்ம மேகாக்கும்என்றன்போர் சொல்லி இவரழுது நின்றராம்அன்றந்த நாதன் அதுகடந்துப் போயினரேபோனாரே தக்கலையின் புரைக்குள்ளே யுமிருந்து 260 மானான பொன்மேனி வாலரா மங்கடந்துவாரிக் கரையும் வாய்த்த நதிக்கரையும்சீரிய நாதன் சென்றகண் டேநடந்தார்நடந்துத் திருவனந்தம் நல்லபுரத் தெல்கைகண்டுஅடர்ந்த மரச்சோலை அடவி வனங்கள் கண்டுகண்டுகொண் டெம்பெருமாள் கண்கொள்ளாக் காட்சியுடன்பண்டுநாம் சீரங்கத்தைப் பார்த்தகன் றேநடந்துஇவ்வூரைக் கண்டு எத்தனைநா ளாச்சுதென்றுசெவ்வுமகா விட்டிணுவும் சிந்தைக்குள் ளேயடக்கி சிங்காரத் தோப்பில் சுவாமி சிறை அவ்வூரைப் பாராமல் அந்த வனமானதுக்குள்எவ்வுயிர்க்குந் தானாய் ஈயுகின்ற பெம்மானும்நாட்டுக் கலியனுக்காய் நற்சோத னையெனவேநீட்டின காலில் நீசனிட்ட விலங்கோடேஏழைகளுக் காக இருந்தார்பா ராவதிலேகோழைக் குடும்பக் குறும்பர் தமைவதைக்கமனுப்பா ராவதிலே மாயாண்டி தானிருந்தார்தனுப்பா ரமடக்கித் தாழ்மையுட னேயிருக்கஆகாத நீசன் அழியும் நினைவதினால்போகாத படிக்குப் பேயன் தனைவிலங்கில்போட்டு வையென்றும் புள்ளி பதனமென்றும் 280 கோட்டுக்கா ரர்தமக்குக் கொடுத்தானே வுத்தரவுஅந்தக் கலிராசன் அவனுரைத்த வுத்தரம்போல்சந்தமுனி மாயனையும் தான்விலங்கி லிட்டுவைத்தான்அப்போது மாயன் அதிகசான் றோர்களுக்காய்இப்போ பொறுதிகொண்டு இருக்கே னெனஇருந்தார்நாட்டுச் சோதனைக்காய் நாராயணர் விலங்கில்நீட்டின காலோடே நிலம்பார்த் தேயிருந்தார்சாணான் பால்வைத்துச் சந்தோசப் பாலேற்றுநாணாம லெம்பெருமாள் நற்சோலையி லிருந்தார்சோலையில் வாழ்பறவை சாமிவந்தா ரென்றுசொல்லிஏலேல முங்கூறி எந்நேர முந்தொழுதுநன்றான மாமுனியும் நற்பறவை யானதுவும்கொண்டாடிக் கொண்டாடிக் கொஞ்சிவிளை யாடிருக்கும்இந்தவனச் சோலையிலே எம்பெருமாள் தானிருக்கசந்த முடனருட்கள் சதாகோடி யாகவந்துதொழுது நமஸ்கரித்துத் தூயோன் பதம்பூண்டுமுழுது முன்பாதமென மொய்குழ லார்சிலர்கள் நாற்பது வயசாய் நான்சேயில் லாதிருந்தேன்காப்பதுன் பாதமெனக் கண்டு தொழுதபின்புதந்தாரே யெங்களுக்குச் சந்ததி தழைத்தோங்க 300 வந்தாரே நாயடியார் வாழு மனையிடத்தில்என்ன உபகாரம் இவர்க்குநாம் செய்வோமென்றுகன்னல் கதலிக் கனிகள் கொடுப்போமோதர்ம மால்தீர்த்தச் சஞ்சலங்க ளானதையும்அம்மம்மா சொல்ல ஆராலு முடியுமோடிகுட்டம் பதினெட்டும் குடித்தபத மொன்றாலேகட்டம் முதலாய்க் காணாப் பறந்ததுவேஇப்புதுமை செய்தவர்க்கு இப்போ தொருபுதுமைகொப்பளிக்கு முன்னே கூடா தோஇவரால்ஏதோ வொருதொழிலாய் இவர்பம்ம லாயிருக்கார்சூதால் கொடுமைவந்து சுற்றுங்காண் நீசனுக்குஎன்று சிலபெண்கள் ஏழைபங் கோனருளைகண்டு தொழுது கருத்தகலா நின்றுடுவார்அப்படியே நருட்கள் ஆதிநா ராயணரைசெப்படிபோ லவர்க்குச் செய்தநன்றி சொல்லியவர்கூரைக்குப் போகக் கூறநினை வில்லாமல்நாரணரைச் சூழ்ந்து நமஸ்காரஞ் செய்துநிற்பார்சூழ்ந்து நருட்கள் தொழுதுமிக நிற்கையிலேதாழ்ந்துசா குங்கலியன் சறடன் தனைநோக்கிப்பேயனொரு சாணானைப் பிடித்துக்கொடு வந்தோமே 320தூய இரும்பு விலங்கதிலே போட்டுவைத்தோம் கடுவாய் சோதனை சாமியென்று பாவித்தச் சாணான்தனை நாமும்காமியத் தால்பெருத்தக் கடுவாய் தனைவருத்திஏவிவிட்டுப் பார்த்து இருவகையுந் தானறிந்துபோவெனவே சொல்லிப் பேயன் தனையனுப்பவேணுமே யிப்போ விவரமென்ன என்றுரைத்தான்ஆணுவ மூர்க்க அரச னிதுவுரைக்கநல்லதுதா னென்று நாட்டமுற் றுச்சறடன்வல்லபெலச் சேவுகரை வாவென் றருகழைத்துஇப்போ தொருநொடியில் ஏழுமலை யுந்தேடிவெற்போடு வெற்பெல்லாம் வேக முடன்தேடிவேகம் பெரிய வேங்கைகடு வாய்பார்த்துநாகமதிலுங் கடிய நல்லகடு வாய்பார்த்துநாழிகை ஏழதுக்குள் நம்மிடத்தில் கொண்டுவரத்தூளி யதுபறக்கும் சூறா வளியதுபோல்கொண்டு வாவெனக் கூறிச் சறடனுமேவிண்டுரைப்பான் பின்னும் வீரியமாய்ச் சேவுகர்க்குநன்று மொழிகேளும் நல்வீரச் சேவுகரேஇன்றேழு மணிக்கு இங்கேகொண்டு வராட்டால்தூக்கியே வுங்களையும் தூண்டலில் போட்டிடுவேன்340 ஆக்கினைகள் செய்துவுங்கள் ஆமிசத்தை வாங்கிடுவோம்என்று சொல்லிச் சேவுகரை இறுக்கமுட னிறுக்கிஇன்றுபோ மெனவே ஏற்றவரி சைகொடுத்துஅனுப்பினாள் சேவுகரை அந்தவே ளைதனிலேபனிப்பிசினும் வெயிலைக் கண்டு பதறினாற்போல்பதறியே சேவகர்கள் பண்பாகச் சட்டையிட்டுக்குதறியே வந்து கூண்டுரைப்பார் மாயவேனாடுநாரா யணரே நாங்கள்போ குங்கருமம்பேராய் நடக்கவேணும் பெரிய திருமாலேஉம்மைச்சோ தனைபார்க்க குங்கருமம்ஆனதினால் செம்மையுள்ள ராசன் சிணமே யனுப்பினர்காண்ஆனதினால் கடுவாய் அடியேங்கள் கையதிலேபோனவுடன் சிக்கிடவும் புண்ணியரே வந்தாரும்என்றுரைக்கச் சேவுகர்கள் எம்பெருமா ளுள்ளமதில்நன்று நன்றென்று நாரா யணர்சிரித்துவிடைகொடுத் தார்கடுவாய் வேகமதில் சிக்கிடவும்படைச் சேவுக்கத்தார் பாரமலை தானேறிகடுவாய் கிடக்கும் கனமலைகள் தான்தேடிமுடுகித் தலையாரி முடிச்சு வலைவளைந்துகாடு கலைத்துக் கடுநாய்கள் விட்டேவி 360 வேடுவர்க ளெல்லாம் விரைந்து கலைத்தனரேகலைக்க வொருகடுவாய்க் கடுங்கோபங் கொண்டெழுந்துவலைக்குள் நுழைந்ததுகாண் மாயவனார் தன்செயலால்உடனேதான் சேவுகர்கள் ஓடிமிக வளைந்துஅடவுடனே வலையை அமர்த்தி மிகப்போட்டுஉபாயத்தாற் சென்று ஒருகூட்டுக் குள்ளடைத்துக்கபாடத்தால் கட்டிக் கனகூடு தானெடுத்துத்தாமரை குளத்துச் சன்னாசி பாதமதால்நாமளு மன்னனுக்கு நாடிப் பிழைத்தோமென்றார்நல்லவென்னி யுண்டு நற்சாணாச் சுவாமியிடம்வல்லவர் தானென்று மாதவாய்க் கொண்டாடித் தேடித் திரியாமல் திக்கெங்கும் வாடாமல்ஓடித் திரியாமல் உயர்சாணாச் சாமியினால்நாமும் பிழைத்தோம் நற்கடுவாய்க் கொண்டுவந்தோம்சீமையாளு மரசன் செப்பும் வாக்குப்படியேகடுவாயைக் கொண்டு காலமே போவோமெனவெடுவாகக் கூடதுக்குள் வேங்கை தனையமர்த்திச்சுமந்துகொடு வந்தார் துடியான சேவுகர்கள்அமர்ந்த கடுவாய் அதறுகின்ற வோசையினால்நருட்கள் மிகப்பதறி நாற்கரைக்கு மாட்கள்விட்டு 380 வருகின்ற வேளை மாகோடி யாய்ச்சனங்கள்சாமியென்ற சாணானைச் சோதிக்க வேணுமென்றுஆமியமாய்க் கடுவாய் அதோகொண்டு வாறாரெனப்பார்க்க வருஞ்சனங்கள் பலசாதி யுங்கோடிபோர்க்குத் திரள்போல் போற வகைபோலேஎண்ணிறந்த நருட்கள் இதிற்கூடி வந்தனரேமண்ணளந்த நாதன் மனமகிழ்ந் தேயிருந்துசாமி யருகில் சூழ்ந்திருந்த சான்றோர்கள் நாமினித்தான் செய்வதென்ன நாதனே யென்றுசொல்லிகேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண்டுக் குள்மகிழ்ந்துநாட்டுக் கரிவிரிநாள் நாரா யணனும்நான் படசி பறவை பலசீவ செந்துக்களைநிச்சயமாய்ப் படைத்த நீலவண்ண நாதனும்நான்மண்ணே ழளந்த மாயப் பெருமாள்நான்விண்ணே ழளந்த விஷ்ணு திருவுளம்நான்ஏகம் படைத்தவன்நான் எங்கும் நிறைந்தவன்நான்ஆகப்பொருள் மூன்றும் அடக்கமொன் றானதினால்நாதக் கடல்துயின்ற நாகமணி நானல்லவோசீவசெந்துக் கெல்லாம் சீவனும் நானல்லவோஇந்நீச னெல்லாம் என்னையறி யாதிருந்தால் 400 மின்னிலத்தில் நான்படைத்த மிருக மறியாதோஎன்றே யடக்கி ஏகந் தனைநினைத்துஒன்றுக்கு மஞ்சாதே உற்றமக்கள் சான்றோரேபதறாதே யென்றனுடப் பாலகரே யென்றுசொல்லிஇதறாத மாயவனார் இருந்தார்கா ணம்மானைஅப்போ தவரிருக்க அம்மிருக மானதையும் வைப்போடு நெஞ்ச மாநீச ராசனிடம்கொண்டுவைத்தா ரந்தக் கோபக்கடு வாய்தனையும்கண்டு கலிராசன் கனகசந் தோசமுடன்அன்று சிப்பாயிகட்கு ஆனவரி சைகொடுத்துஇன்றுகடு வாய்தனையும் இப்போது கொண்டுசென்றுகூட்டி லடைத்துவைத்துக் கோப மதுவருத்தஈட்டிமை யாயதற்கு இரையொன்றும் போடாமல்இன்றைக்கு வைத்து இதுநாள் கழிந்ததன்பின்சென்றந்தப் பேயனிடம் செல்லவிட லாமெனவேஅடைத்துவை போவெனவே அரசன் விடை கொடுக்கத்திடத்தமுடன் சேவுகர்கள் சென்றடைத்தார் கூடதிலேஅன்றிரச் சென்று அடுத்தநாள் சென்றதற்பின்இன்றுகடு வாய்திறந்து இகழ்ச்சியது பார்பபோமென்றுவந்தானே யந்த மாநீசப் பாதகனும் 420 தந்தாய்ச் சறடன் சௌனி கௌடனுமேகவுடன் வெகுடன் கீர்த்திதுரை சானிகளும்மகுடவர்த்தனர் முதலாய் மந்திரி மார்களுமேதுலுப்பர் சலுப்பருடன் சிப்பாயி மார்களுமாய்அலுப்பர் பட்டாணிகளும் ஆனகரி காலாளும்காலாளும் வீராளும் கருமறவர் சேகரமும்சூலாளும் தோலாளும் சூழ்ந்தபடை யாளர்களும்ஒக்கத் திரண்டு ஒருமித்தாங் காரமுடன்மிக்கத் திரண்டு வெடியாயு தத்துடனே ஆனைக்கா ரர்கோடி திரண்டுவந்தா ரம்மானைசேனைக்கா ரர்கோடி திரண்டுவந்தா ரம்மானைஇந்தப் படையோடும் எச்சாதி தன்னோடும்வந்து வளைந்தார் மாகடுவாய்க் கூட்டையுமேஅப்போது ராசன் அருகில்தலை யாடகளைஇப்போது இந்த ஏற்றகாடு வாய்தனையும்குண்டியிலே கம்புகொண்டு குத்துவது கோபம்வரக்கண்டுகடு வாயதுவும் கம்பதுக் கேபதறிஅதறி மிகமுழங்கி அதுகவிழ்ந்து தான்படுத்துப்பதறி யதுகிடந்து படுக்கை யிளகாமல்நீச னவன்குத்த நெடுஞ்சற டன்காமல் 440 வாசப் பொடிவருத்தி வன்னப் பொடிநிறைத்துமட்டாய்க் கடுவாய் மாறி யிளகாமல்கிடந்ததுகா øணாய கிருபை யதினாலே தடந்தெரியா வண்ணம் சனங்கள் மிகப்பார்க்கஈட்டி யெடுத்து இனிக்குத்த வேணுமென்றுமேட்டி யொருவன் விசையாகக் குத்திடவேஎட்டிக் கடுவாய் ஈட்டி தனைப்பிடித்துவிட்டிடவே யருகில் நின்றதொரு வேதியனைக் குத்திச்சே யீட்டி குடல்பீற அம்மானைகத்தியும் பட்டுக் கதறியொரு வன்சாகப்பார்த்திருந்த நீசப் பாதக னேதுரைப்பான்நாற்றிசைக்கு மேராதே நல்மறையோன் பட்டதுதான்ஆயிரம் பசுவை அடித்துமிகக் கொன்றாலும்தோச மீதல்லவொரு வேதியனைக் கொன்றதுதான்என்னபோ லாச்சு யாம்நினைத்த காரியங்கள்மன்னன் கலிராசன் மாசறட னுமயர்ந்துஞாயமீ தல்லவென்று நடந்தா னரண்மனைக்குதோசமொன் றேற்றோமெனச் சொல்லி மிகப்போனான்அப்போது சனங்கள் அல்லோரு மேதுரைப்பார் 460 இப்போதிப் பேயனுக்கு இதுவுமொரு நல்லதுதான்என்றுசொல்லி நீசன் ஏற்ற சறடனுமேஒன்றுமுரை யாடாமல் உள்ளபடை யத்தனையும்கூட்டிக்கொண்டு போனான் கோட்டையதுள் ளம்மானைவேட்டைப் பலித்துதில்லை வெற்றிதான் பேயனுக்குபார்க்கவந் தசனங்கள் பலதிசைக்கு மிவ்விசளம்ஆர்க்கு மிகவே அறிவித் தகன்றனரேஅப்போ சுவாமி அருகில் மிகவாழும்மெய்ப்பான சனங்கள் மெத்தசந் தோசமதாய்இண்ணத் தறுவாய் ஈசுரன் காத்ததுதான்அண்ணல் காயாம்பு அச்சுதனார் காத்ததுதான்என்று மனமகிழ்ந்து எம்பெருமாள் நாரணர்க்குஅன்று விவரம் அறிவித்தா ரன்போர்கள்கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண்டுக் குள்மகிழ்ந்துஆட்டுவோ மாட்டுவோங்காண் அல்லாமல் வேறுளதோஇப்படியே சொல்லி இருக்குமந்த நாளையிலேமுப்படித்தான் ஈசர் மொழிந்தநா ளதுவரைக்கும்இருப்போ மெனச்சொல்லி இருந்தார்கா ணம்மானைஅருப்பான நீசன் அவன்சிலநாள் சென்றதற்பின்என்ன விசாரம் இப்பேய னுக்குகெனவே தன்னே யிருந்து தானினைக்கும் வேளையிலேமுன்னே யொருயுகத்தில் மூவரிய நாரணர்க்குஅன்னமொடு பாலும் அருந்த மிகக்கொடுத்தஆயர் குடியில் அவதரித்தக் கோமானில்தூய வொருகோனும் துணிந்தங் கெழுந்திருந்துபத்தியுள்ள நாரணரைப் பாரா வதுஇளக்கஉத்தரித்துக் கோனும் உலகமதை யாளுகின்றமன்னவன் முன்பில்வந்து நின்றங்கு ஏதுரைப்பான்தன்னதிய மானத் தலைவனே கேட்டருளும்நம்முடைய ராச்சியத்தில் ஞங்ஙளிட தன்னினத்தில்எம்முடைய ஆளாய் இருக்கின்ற இச்சாணான்சாணானில் நல்ல தன்மைவெகு மானமுள்ளோன்கோணா மனதுடையோன் குணமுடைய நல்லவன்காண்நேர்மை யொழுங்கோன் நேர்சொல் லொருவாக்கன்ஓர்மை யுடையோன் உபகாரக் காரனிவன்ஆனதா லெங்களுக்காய் அரசேநீர் தாமுருகிஈனமிலா தெமக்காய் இரங்கு மெனத்தொழுதான் வைகுண்டர் விடுதலை அப்போ தரசன் அவன்மனது தானிளகிஇப்போ திவனை யாமனுப்பி விட்டிடுவோம்விட்டா லவனும் மேலு மிருக்குமுறை 500கட்டாகச் சொல்லிக் கைச்சீட் டெழுதிவைத்துப் போகச்சொல் லென்று போகண்ட னார்க்குரைக்கஆகம் மகிழ்ந்து ஆயன்மறுத் தேதுசொல்வான்என்ன விதமாய் எழுதிவைக்கும் வாசகங்கள்மன்னவனே சொல்லுமென மாறி யவன்தொழுதான்அப்போ தரசன் எல்லோரு மேகேட்கஇப்போ திவனினத்தில் எத்தனைபேர்க் கானாலும்ஒப்போ டுறவாய் ஒத்திருந்து வாழ்வதல்லால்சற்பம்போ லொத்த சகலசா திதனக்கும்உத்தரவு சொல்லாமல் உபாயமாய்த் தானிருந்துமற்றுமொரு சாதிகளை வாவென்று ரையாமல்தன்னொரு சாதி தன்னோ டிருப்பதல்லால்பின்னொரு சாதி பிதனம்வைத்தப் பாராமல்இனத்துடனே சேர்ந்து இருப்போம் நாமென்றுசொல்லிக்கனத்தோ டவனும் கைச்சீட் டெழுதிவைத்துப் பின்னவன் எல்லையிலே போகச்சொல் லென்றுரைத்தான்மன்னன் கலியுரைத்த வாக்கின் படியெழுதிஒப்பமிடச் சொன்னார் உலகளிந்த பெம்மானைசெப்பமுடன் நாரணரும் சிரித்து மனமகிழ்ந்துநம்மாலே சொல்லி நகட்டப் படாதெனவே 520 சும்மா அவன்வாயால் சொல்லிச் சுமைசுமந்தான்இதல்லோ நல்ல இயல்கா ரியமெனவேஅதல்லோ வென்று அரிமா லகமகிழ்ந்துகைச்சீட்டை சுவாமி கைகொண்டு தான்கீறி வச்சுக்கோ வென்று மண்ணில் மிகப்போட்டார்கீறிவிட்ட ஓலைதனைக் கெடுநீசன் தானெடுத்துமாறிக் கொருத்து வைத்தான்கா ணம்மானைஉன்னில் லிடத்தில் உடனேநீ போவெனவேகுன்னுடைய நீசன் கூறினா னம்மானைஅப்போது மாயவனார் அகட்டென வுறுக்கிஇப்போது நீநினைத்த இலக்கதிலே போவேனோதேவ னினைத்தத் தேதியுண் டவ்வேளைப்போவே னெனச்சொல்லிப் பெரியோ னகமகிழ்ந்துநல்லவரே மக்காள் நாம்நினைத்தத் தேதியதுவல்லவரே வருகு மாசிபத் தொன்பதிலேகிழக்குநாம் போவோம் கிரணமாய் நீங்களெல்லாம்விளக்கொளி போலே வீரம தாயிருங்கோஎன்றுரைக்க நாதன் இசைந்தமக்க ளெல்லோரும்நன்று நன்றென்று நாதன் பதந்தொழுதுதொழுது அவரிருக்கத் தூயத் திருமாலும் 540 முழுது மனந்த மூதூரை விட்டுஇன்றுபழுதில்லாத் தெச்சணத்தில் பரமனமக் கேயருளித்தந்தயச் சிருந்த தாமரையூர் நற்பதியில்சிந்தை மகிழ்நாதன் சீக்கிரம் போகவெனநினைத்துத் திருமால் நிண்ணயமாய் உள்ளடக்கிக்கனத்த புகழ்சான்றோர் கைக்குள்ளே நிற்பவரைப்பய்யவே யின்று பயண மெனவுரைக்கஉய்யமிகக் கொண்டோர் உல்லாச மேயடைந்துசந்தோசங் கொண்டு சங்கடங்கள் தீர்ந்துதென்றுவந்தோர்க ளெல்லாம் மாயவரைத் தொட்டில்வைத்துஏந்தி யெடுத்து இயல்வா கனம்போலேஓர்ந்து வருக உற்ற அனந்தம்விட்டுக்கண்டுநீ சப்பாவிக் கர்த்தாவைத் தானிகழ்ப்பாய்க்கொண்டுபோஞ் சாணாரைக் கூடிமிகச் சிரிப்பார்சாமியென்றோன் பட்ட சளங்களெல்லாம் பார்த்திருந்தும்வாய்மதத்தால் பின்னும் வழுங்கல் சுமப்பதுபார்பிழைப்பில்லை யென்றோ புத்திகெட்டச் சாணார்கள்உழைக்க மதியற்று உளத்துகிறான் சுமந்துபேயனைச் சுமந்து புலம்பித் திரிவதற்குநாயன் முன்னாளில் நாட்டில் படைத்ததுபார் 560 என்று தூசணிப்பார் இசைந்தபுகழ்ச் சான்றோரைஅன்றதிலே சிலபேர் அல்லகா ணென்றுசொல்லிநம்மளுக் கென்ன நட்டம்வந்து போச்சுதெனச் சும்மா அவனினத்தோர் சுமந்துகொண்டு போவதல்லால்ஏனிந்தப் பேச்சு யாம்சொல்லப் போறோமெனத்தானிந்த வார்த்தை சனங்கள்சிலர் சொல்லவேசொல்லன்பு வன்பு சுவாமி மிகப்பார்த்துநல்ல அனந்தம்விட்டு நாடும்வால ராமம்விட்டுச்செல்ல அரியும் சிறப்பா யகமகிழ்ந்துவல்ல வழியில் வாழுகின்ற ஊரும்விட்டுப்பள்ளிவா சல்விட்டுப் பார்வதி யகரம்விட்டுப்துள்ளிக் கோட்டாறு சுசீந்திரத் தலமும்விட்டுவேக மடக்கி விளியிட்டு வண்டுறுக்கிஆகமத்தின் தேதி அடுத்தாலா கட்டெனவேசொல்லுவேன் வெள்ளித் தோன்றி வருகையிலேவெல்லுவே னென்று விசையடக்கி எம்பெருமாள்தொட்டிலி லிருந்து சுவாமி விளியுமிட்டுமட்டி லிருந்த வளர்தா மரைப்பதியில்வந்து பதிகண்டு வட்டமிட்டுத் தானாடிவிந்து வழிகளுக்கு மேற்கெதிக ளாகுதென்று 580இன்றுமே லெனக்கு ஏற்றவெகு சந்தோசம்பண்டு எனக்குப் பகர்ந்த மொழிபோலே துவையல் பந்தி-வாகைப்பதி தவசு சான்றோரை நல்ல தவத்துக் கனுப்பிடவும்பண்டோர் நமக்குப் பகர்ந்தபடி மாதர்களைநாடு மணங்கள் நல்லகலி யாணமுதல்வீடுவகை சொத்து விருதுவே டிக்கையுடன்தேரு திருநாள் திருக்கல்யாணக் கொலுவும்பாரு புகழப் பாவாணர் கீதமுடன்நாட்டில் மனுக்கள் நல்லோர்கள் வாழ்வதிலும்மேட்டிமைக ளாக மிகுவாழ்வு சேர்கையுடன்வேண்டும் பவிசு மிகுவாய்ப் பவிசுகளும்தாண்டும் பெரிய சனங்கள் மிகக்குழைவும்கொடியுமிகக் கட்டிக் கொக்கரித் திகனையுடன்வெடியெக் காளமுடன் வெற்றியி டம்மானமிட்டுநாட்டில் சிறப்பதிகம் நாமினிமேல் செய்யவென்றுதாட்டிமையாய் நாதன் சான்றோர் தமக்குப்போஅறிவில் வினோதம் அதிகநே ருத்தமமாய்க்குறியாய் மனதில் குறிக்கும் படியருளஅருளான விஞ்சை அருள்கொடுக்கு மாலோனும்மருளாமல் சாணார் மனதி லுருவாக 600 மூணுநேரத் துவைத்து உச்சி யொருநேரமதாய்வேணும் பச்சரிசி வெற்றிச் சிறுமணியும்வேகவைத்து நன்றாய் விரைவாய் மணலிலிட்டுத்தாக மில்லாமல் தவசிருக்க வேணுமென்றுபெண்ணுடனே ஆணும் பிறந்தபிள்ளை தன்னோடும்கண்ணான கட்டில் கலருங் கிழவிவரைசூலி யிளம்பிள்ளை திரண்ட மடமாதும்மாலி னருளால் வஸ்துவகை தான்மறந்துவீடு மனைமறந்து விற்று விலைகள்செய்துஒண்ணிலரைப் பாதியென ஒக்கவிற்றார் சொத்ததனைமண்ணு மறந்து மாடாடு தான்மறந்துஆண்டபண்ட மெல்லாம் அகல மிகமறந்துகூண்டபண்ட மெல்லாம் கூசாம லேமறந்துஅனுபோக மற்று ஆண்பெண் ணிகழாமல் இனிபோக மற்று இருந்தார் தவசெனவேஎல்லோரு மிக்க இருக்கத் தலம்பார்த்துஅல்லோரு மேக அவர்கள் மனதிலுற்றுநாத னரிநாதன் நாரா யணநாதன் சீதக்குரு நாதனிடம் சென்றா ரவர்பதத்தல்சென்றே யவருடைய சீர்பாதந் தெண்டனிட்டு 620 இன்றேக எங்களுக்கு இப்போ விடையருள்வீர்என்றே சனங்கள் எல்லோரும் போற்றிநிற்கஅன்று பெருமாள் அகமகிழ்ந்து கொண்டாடிநாம்நினைத் ததுபோலே நடந்து காரியந்தான்தாம்நினைத் ததுபோலே தாநடந்து வீரெனவேஉத்தரவு சொல்ல உடைய வழிச்சான்றோர்சித்தருட அருளால் சென்றார் தவமதுக்கே தவமது செய்ய வென்று சடுதியிற் சான்றோ ரெல்லாம்உகமது அளந்தோன் பாதம் உண்டென மனதி லாக்கிவகைபொரு ளாசை யற்று மனைவிகள் மக்கள் கூடதிகையது நோக்கி வாரி துவரயம் பதியிற் சேர்ந்தார் மண்ணுடன் மனைக ளாசை மாடுடன் வீடு மாசைபெண்ணுடன் பொருளி னாசை பூதலப் பொன்னி னாசைஎண்ணுடன் எழுத்தி னாசை இடறுபொல் லாசை வேசைஒண்ணுடன் ஆசை நீக்கி உடையவ னாசை கொண்டார் கொண்டுநல் மனதிற் பூண்டு குருபரா தஞ்ச மென்றுபண்டுநல் துவார கையின் பதிவாட வாசல் தன்னில்தெண்டிரை வாவை சூழ்ந்த செகற்கரை தனிலே வந்துகண்டுநற் பதியில் புக்கி கருத்துடன் இருந்தா ரன்றே இருந்தவர் தலமும் பார்த்து ஏகநல் வெளியுங் கண்டு 640பொருந்திடும் ஞான வான்கள் புண்ணிய மனதி லெண்ணிவருந்திடக் கனிவே காணும் வாவைநற் பதியி தாகும்தெரிந்திடக் கடலில் மூழ்கிச் சிவகலை யணிந்தார் தாமே அணிந்தவர் பெண்ணு மாணும் அன்புடன் மகிழ்ச்சை கூர்ந்துதுணிந்தவர் தங்கள் தங்கள் துயரங்க ளறவே நீக்கப்பணிந்தவர் நாதன் தன்னைப் பரிவுடன் மனதுள் ளாக்கித்தணிந்தவர் கோப வேகத் தகுளியைத் தள்ளி வாழ்ந்தார் வாழ்ந்தே தவசு வாகைப் பதியதிலேதாழ்ந்தே சனங்கள் சந்தோச மாயிருக்கஅந்திசந்தி யுச்சி ஆகமூ ணுநேரம்நந்தி யருளால் நல்ல துணிதுவைத்துஉவரிநீ ரில்துவைத்து உவரிநீ ரைக்குடித்துஉவரிநீர் தன்னில் உற்றன்ன மேசமைத்துஉச்சி யொருநேரம் உணவு மிகஅருந்திமெச்சிப் புகழ்ந்த விடிய வொருசாமம்உகப்பாட்டு மோதி உற்ற அபயமிட்டுவகையாய் விடிய வரும்நா ழிகையேழில்துணிகள் துவைத்துத் தோய மதிலிறங்கிக்கெணியாய்க் குளித்துக் கிருஷ்ணர் பதம்போற்றிஇப்படியே நித்தம் இவர்மறவா வண்ணமேதான் 660 அப்படியே வாரி அலைவாய்க் கரையிருக்கவாரிப் புறமாய் வளர்காற்று வாடைமிகநீரிறைத்தாற் போலே நித்தமந் தத்தவத்தோர்பேரி லிறைத்துப் பெருவாடை யாய்வீசச்சீருகந்த நாதன் செயலா மெனஇருந்தார்இருந்தார் தவசு ஏற்றரிய சான்றோர்கள்அருந்தாமல் மற்றொன்றும் அன்னமொரு நேரமுமாய்வாரிநீ ரல்லால் மறுநீ ரறியாமல்சீரியல்பாய்ச் சான்றோர் செய்தார் தவமதுவேபவமா னதுநீக்கும் பச்சைநா ராயணரும்முன்னாறு வருசம் உவந்திருந்த நற்றவத்தைப்பின்னொரு வருசம் பேணி நடத்துமுன்னேநீச னிடையில் நிறடுசெய் தானதினால்தோச மவன்பேரில் சுமக்கச்சா பம்புரிந்துஆறு வருசம் அதிற்குறைவு வராமல்வாறு தவசு வகுத்து முடிக்கவென்றுபுரிந்தார் தவசு இலக்குத் திகைவதுமுன்சான்றோர் தவத்தைத் தான்பார்க்க வேணுமென்றுஆன்றோர் மனதில் அன்புமிகக் கொண்டாடி 680 அலைவாய்க் கரையில் அமர்ந்திருந்த சான்றோரைநிலைபார்க்க வேணுமென்று நிச்சயித் தெம்பெருமாள்உகத்துக்குத் தக்க உபாயமினிச் செய்யவென்றுமகத்துவ நாதன் மனதில்மிக வுத்தரித்துத்தெள்ளு தனக்குச் சிணமே விடைகொடுத்தார்விள்ளுறவே செய்து விடுநீ சிணமெனவேஆதி விடையருள அதுவெல்லா மேசமைந்துமோதி யொருமித்து உற்றஅந்தத் தெள்ளினங்கள்வந்து வளைந்துதல்லோ வாய்த்ததவத் தோரருகில்பொந்து பொந்துள்ளும் போடுந் துணியதுள்ளும்வைத்தக் குடிலுள்ளும் வளைந்ததுகாண் தெள்ளினங்கள்மெய்த்தபுகழ்ச் சான்றோர் மெலிவாய் மிகச்சடைத்துமாடா டுகோழி வளர்ப்பில்லா நம்மிடத்தில்ஏடா விடமல்லோ இதுசெய்யு மாய்மாலம்இருக்கு மிடத்தில் எண்ணக்கூ டாதபடிப்பொருக்குப் பொருக்கெனவே பொன்றக் கடிக்குதென்னமூணுநேரந் துவைக்கும் உற்றகலை யானதிலேகோணியலில் பற்றும் குறுந்தெள்ளு வந்ததென்னபடுக்க இருக்கப் பண்புசற்று மில்லாமல்முடுக்கமாய்த் தெள்ளு முடுக்கிமுடுக்கிக் கடிக்க 700 இதல்லால் சான்றோர்க்கு இன்னம்விட்டுப் பார்ப்போமெனசதமில்லா மூட்டை தன்னினங்க ளைவருத்தித்தவத்தைக் குலைத்துச் சான்றோரைத் தான்விரட்டிப்பவத்துமாய் நீங்கள் பாவிப்பீ ரென்றுசொல்லிமூட்டைக் குரைகள் மொழிந்தார் முகுந்தனுமேசேட்டைசெய் வோமெனவே திரண்டு மிகச்சூழ்ந்துவந்து வளைந்தார் வாழரியச் சான்றோரைமுந்து பரிந்த மூண்டதெள் ளினங்ளோடுகூடிக் குலாவிக் கூட்டமிட் டேதிரளாய்த்தேடிச் சான்றோரைச் செகலதுக்குள் ளேவிரட்டவேணு மெனவே விசும்புகொண் டவ்வினங்கள்பூணு முடைமை போர்த்துந்துணி யிலிருந்து நடையிற் கடிக்கும் கிடக்கவிடா தேயரிக்கும்குடிக்கின்ற வெள்ளமதில் கும்பல்கும்ப லாய்க்கிடக்கும்முடிக்குந் தலையில் முச்சிறங்கை போல்கிடக்கும்அன்னத்தி லேமிதக்கும் அண்டைக்கல்லி லேவாழும்முன்னெற்றி மயிரில் மிதந்துமிக முன்னுதிரும்இடைக்குள் ளிருந்து இடைவிடா தேயரிக்கும்உடையி லிருந்து ஓயாம லேயரிக்கும் 720 மேலெல்லா மிதந்து மிகச்சரியும் கீழ்வழியாய்க்காலெல்லாந் தெள்ளு கனமாய் மிகஅரிக்கும்மாறி யிவரெடுக்க மனதுசற்று மில்லாமல்ஆறிப் பதறி அசையாமல் தாமிருப்பார்வாரிக் கரையில் வளர்நண்டு சேகரமாய்மாரித் துளிபோல் வந்து வளைந்துமிகப்பாண்டத்துக் குள்ளே பதிந்திருந் தேவாழும்காண்டமாய்க் கண்டு கைநீட்ட லாகாதெனத்தடவி யெடுத்துத் தன்னாலே போநீயெனவடவிப் போகாமல் வளர்ப்பார்கள் போலிருப்பார்இப்படியே தெள்ளு ஈமூட்டை நண்டினங்கள்அப்படியே கூடி அவரலைச்சல் செய்திடவேஅல்லாமல் சான்றோர் அவரவர்க்குத் தேகமதில்பொல்லாத வங்குப் பெரிய சிரங்குடனேவெகுவாய்ப் பெருத்து மேலிலிடை காணாமல்தகுவாய்ச் சடைத்துச் சனங்கள்மிக எல்லோரும் எங்கே யினிப்போவோம் எல்லோரு மென்றுசொல்லிசங்கை யுடன்கூடிச் சமுத்திரக் கரையருகில்போயிருக்கும் வேளை பொங்குகடல் கோபமதாய்வாயிதமாய்த் திரைதான் வந்துகோபித் தடித்து 740 பாலதியப் பெண்கள் பண்பா யுடுத்திருந்த சீலைரண்டு தன்னைச் செகற்கொண்டு போயினதேஅய்யோ கடல்தான் அங்குசெல்லக் கூடுதில்லைசெய்ய விலகவென்றால் தெள்ளுநம்மை விட்டுதில்லைவீட்டுக்குள் செல்ல விட்டுதில்லை மூட்டையதுஊட்டுகின்ற அன்னமதில் உயரவந்து நண்டிருக்கும்தேகமதிற் சிரங்கு சொறிச்சல் பொறுக்குதில்லைதாகத்துக் கேற்ற தண்ணீர் கிடைக்குதில்லைபாகமுட னுண்ணப் பற்றுதில்லை தீனதுவும்இனியெங்கே போவோம் எல்லோரு மென்றுசொல்லிமனுப்புகழுஞ் சான்றோர் மாதமொரு ஆறாய்இருந்தா ரதிலே ஈசன் செயலெனவேதிருந்தார மார்பன் திரும்ப வொருதலத்தில்கொண்டுபோய்ப் பார்ப்போம் குலதெய்வச் சான்றோரைபண்டு வொருசணான் படுத்திருக்கு மவ்வேளைசொர்ப்பனம்போல் உற்பனமாய் சுவாமி மிகவுரைத்தார் முட்டப்பதி தவசு இதின்நேர் தெற்கு இருக்கு மொருபதிதான்அதின்நோக்குஞ் சொல்ல ஆராலு மேலாதுதுட்டர் தமைவென்று சுற்றுமதில் கோட்டையிட்டு 760 அலங்கார நற்பதியின் அழகுசொல்லக் கூடாதுவலங்கார மான வாய்த்த கடலதினுள்தேரு பொன்பதிகள் சிங்கார மேடைகளும்நீருக்குள் ளேயிருக்கும் நிறங்கள்சொல்லக் கூடாதுகன்னிமா ராடும் கரியநல்லப் பூஞ்சுனைகள்பொன்னினா லேபடிகள் பூஞ்சப்பிரக் கொலுவும்மாணிக்கக் கல்லால் வளர்ந்தமணி மண்டபமும்ஆணிப்பொன் தன்னால் அழகுபூம் பந்தல்களும்வகையின்ன தென்று வகுக்க முடியாதுதொகையின் தென்று தொகுக்க முடியாதுஇப்பதியில் நீங்கள் இந்தநே ரம்போனால்அப்பதியி லுங்களுக்கு அதிகப்பலன் கிட்டுமென்றுதூக்கமதில் சொர்ப்பனம்போல் சொன்னாரே வுத்தரவுஆக்க முடனே அவனெழுந்து சொல்லிடவேகேட்டு எல்லோரும் கெட்டிதா னென்றுசொல்லிஆட்டு மெனவே எல்லோருஞ் சம்மதித்தநடக்கத் துணிந்தார் நாரண ருண்டெனவேஅடக்க முடனிதிலே ஆறுமா சம்வரைக்கும்இருந்தோமே நன்றாய் இனிநடப்போ மப்பதியில் 780 வருந்தாமற் போவோம் மகாபரனா ருண்டெனவேபோவோ மெனவே பெண்ணா ணுடனெழுந்துதாவமுள்ள முட்டப் பதிதலத்தில் வந்தனரே வந்தனர் பதியின் கூறும் வாரியின் செயலுங் கண்டுசந்தன வாரி போலும் தலமிது நன்ற தாகும்இந்தநற் பதியில் நாமள் இருந்துதான் தவசு செய்தால்செந்தமி ழாயன் பாதம் செயல்பெற வாழ்வோ மென்றார் வாழ்வ திற்குறை வராது மக்களுங் கிளைக ளோடுதாழ்வ தில்லை வண்ணம் தவமது வளர்வ தாகும்நாள்வழிப் பலனுண் டாகும் நாரண ரருளி னாலேஆள்வது திடனா மென்று அதிலவ ரிருந்தா ரன்றே என்றே மிகமகிழ்ந்து எல்லோரு மோர்முகமாய்அன்றே மிகமகிழ்ந்து அதிலிருந்தா ரம்மானைசூழ அணியாய்ச் சுற்று மதில்போலேநீள அரங்குவைத்து நெருங்கப் புரைகள்வைத்துவைத்தோர் திசையில் வாசலொன் றாகவிட்டுமெய்த்தே தினமும் மிகவே துணிதுவைத்துஅன்ன மதற்கு அவித்தநெல் லேயுடைத்து வன்னமுள்ள காய்கனிகள் வகைவகையாய்த் தான்வகுத்துநல்லநீர் தன்னில் நாடி மிகத்துவைத்து 800 எல்லா வகைக்கும் இசைந்தநீ ரேயிருந்திஅந்திசந்தி உச்சி ஆதிதனைத் துதித்துத் தந்திரம தாகத் தவசு மிகப்புரிந்தார்கண்டிருந்த மற்ற கலிநீசச் சாதியெல்லாம்பண்டி லமைத்ததுவோ பனையேறுஞ் சாணார்க்குமூணுநே ரந்துவைத்து உச்சியொரு நேரமதாய்வேணும் பகுத்தாய் வெகுவா யலங்கரிக்கவேத னவர்க்கு விதித்த விதிப்படியோநாதனவர் பங்கில் நாடிமிக வந்ததுவோஎப்போமீ னுண்டு என்றே மிகப்பார்த்துஅப்போ ததைவேண்டி அரக்குரக் காயவித்துவாயிலெடுத் திட்டு வயிறுவளர்க்குஞ் சாணார்கள்புகையிலையு மறந்து பெண்ணாணு மோர்மனதாய்இந்தப் படியாய் இருக்க இவர்களுக்குமுந்தை விதித்த விதிவந் தொத்ததுவோஅவர்க ளுடுக்கும் ஆடையழுக் கில்லாமல்இவருடுக்கச் சற்றும் எண்ணமொன் றில்லாதார்மூணுநே ரந்துவைக்கும் உற்றதுணி பொன்னிறம்போல்தோணுதலா யவர்கள் தேகம் பழபழெனஇந்த விதமாய் இவர்கள்பா வித்திடவே 820 சொந்தத் திருமால் சேர்ந்தா ரவரிடமேஆதி மகாமால் அவர்பங்கி லில்லாட்டால்ஓதி யுணவருந்த ஒன்றுந்தெரி யாதிவர்க்குபேற்றி நம்பூரி பிராமணர்கள் தஞ்சீலைமாற்றித் துவைப்பு மங்கலாய்க் காணுதுகாண்இந்தசா ணார்சீலை எரிசூரி யன்போலேபந்த வொளிபோலே பழபழெனத் தோணுதுகாண்பிராமணர் சூத்திரர்கள் பேணி யிவர்தமக்குநிராதனமாய்க் காய்கனிகள் நித்தஞ் சுமக்கிறார்கள்பாக்கியங்கள் வந்துதென்று பனையேறுஞ் சாணார்க்குநோக்கமது வந்துதென்று நீணலத் துள்ளோர்கள்எச்சாதியும் புகழ்ந்து இருந்தார்கா ணம்மானைஅச்சாதி யெல்லாம் அப்படியே சொல்லிமிகச்சாதிமற்றோ ரெல்லாம் தலைகவிழ்ந் திருக்கையிலேநாதித் திருமால் நாடுகின்ற சான்றோரைஇவர்க்கருளு மாண்டு இலக்குத் திகைந்துதல்லோஅவரவர்கள் வீட்டில் அனுப்பிவிட வேணுமென்றுதோணித்தா ரவர்மனதில் சொர்ப்பனம்போ லெம்பெருமாள்மாணிக்கச் சான்றோர் மனமறியத் தாம்பார்த்துஇனிநாம ளிப்போ இருந்த தலமும்விட்டுத் 840 தனியானோம் நாமளங்கே சார்ந்தோமெ யானாக்கால்நம்முடைய சாதி நகைத்திழிவு பேசுமல்லோஎம்முடைய தவமும் இல்லையென்று போயிடுங்காண்முன்னிருந்த வீடும் மூண்டிருந்த பண்டமுதல்தன்னிருந்த சொத்தும் தலத்தை யிழந்தவந்தோம்இனியங்கே போனால் இருக்க இடமுமில்லைஇனியங்கே போவதைக்கால் இந்தக் கடலதிலேவிழுந்தோமே யானால் மேலும் பதவியுண்டுஅழுந்த லுடன்நினைத்து எல்லோரு மேயிருந்தார்அப்போ அரிநாதன் ஆகட்டென வுறுக்கிஇப்போநீர் போவும் என்றே விடைகொடுத்தும்இன்னமிவர் போகலையே என்றே மனதிலுற்றுஅன்ன மøக்குறைத்து ஆழாக் கரிசியிட்டார்ஆழாக் கரிசி அலர்மலர்ந்த கோவையுடன்தாழாமல் சனங்கள் சடையாம லேற்றனரேதுவையல் முடங்கவில்லை தொழுதுநிதஞ் சேவிப்பதுவும்உகப்பாட் டோதுவதும் ஓயாமல் செய்தனரேஇன்னம்போ னாரில்லையே இப்படியே செய்திடினும்இன்ன மொருவசனம் இப்போது செய்யவென்றுஉன்னித் திருமால் உற்றவை சூரியைத்தான் 860 ஏவினார் சான்றோர் ஏந்திழைக்கும் பிள்ளைகட்கும்மேவியே சான்றோர் மிகமெலிந்து தான்வாடிப்பற்றி யிருந்தப் படுசிரங்கு மாறலையேமுற்றுங் கண்ணொளிவு முழுதுந் திறக்கலையேகும்பிக் குளிரக் குடிக்கக் கிடைக்கலையேவெம்பு மிலைகனிகள் மிகப்பறிக்கக் காணலையேஐயோநா மெல்லாம் அலைந்து மலைந்திருக்கவையமதி லில்லாத வைசூரி வளைந்துதல்லோஎன்று சனங்கள் எண்ணம் பெரிதாகிச்சென்ற சனத்தில் சிலபேர் மடிந்திடவேபதறி நடுங்கி பரனேநீ தஞ்சமென்றுகுதறி யுலகில் கூச்ச மிகவடைந்துஎங்கே யிருந்தாலும் ஈசன் செயலெனவேசங்கை வழுகாமல் தாமோ தரனுடையநினைவு மயராமல் நிலைதவறிப் போகாமல்தன்னுடைய வீட்டில் தான்போவோம் நாமளென்றுபோகு முன்னாகப் பெரியோன் பதமணுகிப்பாகுரைத்து நாமள் பட்டசள முரைத்துஉத்தரவு வேண்டி உற்றிடத்தில் போவோமெனப்புத்தி யுடனே பெரியோ னடிசேர்ந்தார் 880 சேர்ந்துவா கைப்பதியின் செய்தியெல்லா முரைத்துப்பேர்ந்துவந்து முட்டப் பதியின் பெருமைசொல்லிஊணுகிடை யாததுவும் உயிரழிவு வந்ததுவும்கோணுத லெல்லாங் கூறி விடைகேட்டார்அப்போது நாதன் எல்லோரை யும்பார்த்துஇப்போது உங்கள் இல்லிடத்தி லேபோனால்நாரா யணக்குருவை நாளு மறவாமல்பேராக வேயிருந்தால் பேறுங்களுக் கேகிடைக்கும்அன்ன மளக்கும் ஆதித் திருநெடுமால்முன்னவன் தன்பேரால் முத்திரிக ளிட்டதினால்சென்ற இடமெல்லாம் சிறப்பதிக முங்களுக்குஎன்றைக்கும் நல்ல இயல்பே யருள்வோமெனநல்ல விடைகொடுத்து நாரா யணரனுப்பவல்ல வளர்சான்றோர் வாழ்த்தி யவர்போனார்அவரவர்கள் வீட்டில் அன்பாகப் போனவுடன்இவரிவர்க்கு நல்ல இயல்புசெய்ய வேணுமென்றுஏகபர நாதன் எம்பெருமா ளானவரும்லோகமதி லெம்பெருமாள் ஒருசொரூபங் கொள்ளலுற்றார்இரப்ப வடிவாய் எடுத்தா ரொருவேசம்பரப்ப வடிவைப் பாருள்ளோர் கண்டுகண்டு 900 கோட்டைக் கணக்காய்க் குளிர்ந்தநெல் லேயெடுத்துச்சாட்டமுடன் காய்கனிகள் சகல வகையுடனேபழங்கள் முதலாய்ப் பப்படமும் பாயசமும்வளங்க இலையிட்டு வற்றல்வகை சீனியுடன்அன்ன முதல்தானம் ஆடையொடு பொன்தானம்சொர்ணத் தானமுதலாய்த் துவையல்கா ரர்ககெனவேசான்றோ ரினத்தில் சார்ந்தன்பு கொண்டோர்கள்ஆண்டோ னருளால் அன்னவஸ்த்திரங் கொடுத்தார்நித்தம்நித்த மன்னம் நீங்களுண்ணு மென்றுசொல்லிச்சித்த மிரக்கமதால் துவையற்கா ரர்க்கெனவேஇடைவிடா தபடியே ஈந்தாரே அன்னமதுவடவெல்லாந் தீர்ந்து மகிழ்ந்திருந்தார் துவைத்திருந்தோர்நாலு திசையதிலும் நடந்துபிச்சை தான்குடித்துப்பாலு பவிசுடனே பாவித்தி ருந்தனராம்இப்படியே சான்றோர் இனமா யிருந்தவர்கள்அப்படியே பிச்சையிட்டு அன்பாய் மகிழ்ந்திருந்தார்பாங்கா னதுவையல் பண்டா ரங்களெல்லாம்பூங்கார மாகப் பிச்சையமு துண்டிருந்தார் 918


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !