அகிலத்திரட்டு அம்மானை பகுதி-16
மாதுநல்லா ளேழ்வரையும் மணமுகித்து மாயவரும்தீதகலும் நற்பதியில் சிறந்தங்கினிதிருந்தார்கன்னிமா ரேழ்வரையும் கைப்படித்தோம் நாமுமினிபொன்னம் பதியில் புகழ்ந்ததிரு நாள்நடத்திநித்தந் திருநாள் நிதம்நடந்த வேணுமென்றுசித்தமதில் நாரணரும் சிந்தித்தா ரம்மானைஎத்திசையு முள்ள ஏற்றபுகழ் சான்றோரும்முத்தி யடைந்தோம் மோட்சமது பெற்றோமெனநம்முடைய தாயார் நல்லதெய்வக் கன்னியரைச்செம்மைத் திருமால் திருமணங்கள் செய்ததினால்குற்றமில்லை நம்முடைய குலத்துக் கினியெனவேசித்தமதில் நாரணனார் செயல்நமக் குண்டெனவேவந்துமிக எல்லோரும் வாழ்த்தி மிகப்பணிந்துசிந்துபுகழ் தெய்வ மடவா ரையுந்தொழுதுநல்லபண்ட மானதுவும் நாடும்நிதி யானதுவும்வல்லகுலச் சான்றோர் மாதா பிதாவதுக்கும்கொடுத்தாரே நல்லக் குவலயத்தில் மக்களெல்லாம்விடுத்ததெல்லாம் வேண்டி மிகவேற்றார் மாயவரும்பலன்பெற்றோ மென்றுப் பாலதியச் சான்றோர்கள்குலமெல்லாம் வந்து கூடினார் மாயனிடம் 20 அய்யா திருநாள் இகனை நடத்துதல் அப்போது நாதன் ஆனந்த மேபுரிந்துஇப்போ திருநாள் இகனைநடத்த வென்றுநாளான நாளிதுதான் நாதன் பிறந்தநாள்தாழாத ஞாயிறுவே சுவாமி பிறந்ததினால்இந்நாள் முதல்திருநாள் இன்ப முடனடத்திப்பொன்னான நாரணரும் பூரித்தா ரம்மானைஞாயிறாழ்ச்சைத் திருநாள் நாம்பார்க்கப் போவோமெனத்தேச மதிலுள்ளத் தெய்வகுலச் சான்றோர்கள்பாலுக்கு நெல்லும் பண்பாய்ச் சிறுமணியும்மாலுக்கு நல்ல மகிழ்ந்துபிச்சி மாலைகளும்கொழுந்துபன்னீர் சந்தமமும் குலுங்கா விடலைகளும்தென்னங்காய் மாம்பழமும் திகட்டாப் பலாக்கனியும்வாழைக் கனியிலையும் வகிர்ந்தகமு கின்குலையும்நாளைத் திருநாள் நமக்குமுந்திப் போவோமெனஇத்தனையுங் கொண்டு இசைந்ததிரு நாள்வகைக்குப்பத்துமூ ணேழு பணமு மிகஎடுத்துக்காதுக்கு நல்ல கனத்த நகைகளிட்டுமாதுக் கியல்வாய் வளர்கோர் வையுமணிந்துபெட்டிச் சீலையுடுத்துப் பெரியநாமப் பொட்டுமிட்டுக்கட்டன்ன மும்பொதிந்து கண்ணர்திரு நாட்கெனவே 40 மக்கள் மணவாளன் மனைவி கிளைகளுடன்சிக்கெனவே நாதன் திருநாட்கும் போவோமெனவருவார் கிழமை மாதந் தவறாமல்திருமால் அகமகிழ்ந்து திருநாள் முறைநடத்தக்கொட்டகை யிட்டுக் குவிந்தமணி மேடையிட்டுப்பட்டால் மேற்கட்டி பழங்கனிகள் தாந்தூக்கிப்பிச்சிமா லைதூக்கிப் பெருவாடை தான்தொளித்துமிச்சம்பழந் தூக்கி மிகுவாடை தான்தொளித்துசந்தனங் கஸ்தூரி சவ்வாது புனுகுடனேசிந்தரெவ ரும்போற்றத் தேன்கனிகள் மாங்கனிகள் வெற்றிலை பாக்கு மிகுவாய்ப் பழங்களுடன்தத்திதத்தி யாகச் சதாகோடி யாய்க்குவித்துப்பாலாயி தங்கள்வைத்துப் பாவித்து நற்பதிக்குள்மாலா யிருந்து மகிழ அலங்கரிப்பார்தெருவிற் காளாஞ்சித் தீவட்டி யும்பிடித்துமருவினிய மாதர் மகாகுரவை மலமலெனடம்மானை நகாசுரம் நல்லவா ணவெடிகள்மும்மான முளக்கம் போலே மிகமுழங்ககன்னிமார்க் கெல்லாம் காவிப்பட் டாடைகொண்டுபின்னு மடவார்க்குப் பெரியருத்தி ராட்சமிட்டு 60 நாமப் பொட்டிட்டு நல்லஎத் தாப்புமிட்டுமாமடவா ரெல்லாம் மகிழ்ந்து தெருவில்வரஎந்தன் பிரானும் எடுத்தா ரொருசொரூபம்கந்தைக்கா விபூண்டு கழுத்தில்தா வடம்பூண்டுகையதி லேமாத்திரைக்கோல் கமூக்கூட்டி லேபிரம்பும்மெய்யதிலே வெண்பதமும் மினுக்க முடனணிந்துஉச்சிக்கொண்டை கோர்த்து உயர்ந்தசுரைக் கூடுமிட்டுமெச்சுந் துளசி மிகுமாலை யுமணிந்துபிச்சிமாலை யணிந்து பெண்கள்மிகச் சூழ்ந்துவரச்சச்சிசச்சி யாகச் சனங்கள்சான் றோர்கள்வரக்கைக்குள்நின்ற சீசர் காவிவஸ்தி ரமணிந்துமெய்க்குருவைப் போற்றி மேலில்ருத்தி ராட்சமிட்டுக்கையதிலே மாத்திரரைக்கோல் கனத்தசுரைக் கூடுமிட்டுமெய்யதியப் பொக்கணமும் மேலதிய நாமமிட்டுஅய்யா குருவேயென்று அவர்கள் மிகப் போற்றிவரத்துய்ய துவையல் துவைத்தபண் டாரமெல்லாம்காவிருத்தி ராட்சம் கனத்தசெம்புக் கடுக்கனிட்டுநாவிற் சிவாவெனவே நாட்டமிக வாய்வரவேஆரா தனையாய் அருள்கொண்டப் பெண்ணாணும்நாரா யணர்பேரில் நற்கீதம் பாடிவரத் 80 தங்கரத்தினத் தொட்டில் சுவாமி மிகஇருந்துபெண்கள் மிகநன்றாய்ப் பெருகக் குரவையிடசங்கு தொனிக்கச் சகலோர் மிகப்போற்றசிங்கமுக லெட்சுமியும் திருமுகத்தில் நின்றிலங்கசான்றோர்கள் தொட்டில் தண்டாய முஞ்சுமந்துஆன்றோர் பதியை அலங்கிருத மாகிவரக்கன்னிமார் நாதன் கைக்குளொழுங் காய்வரவேமின்னும் பதித்தெருவும் மிக்கஇந் தப்பவிசாய்உலாவி வரவே உற்றதெய்வ வானோர்கள்குலாவி மகிழ்ந்து கிருபையுள்ள நாரணர்க்குபூமாரி பொன்மாரி பெரிய சலமாரிநாமாரி வானோர் நாடி மிகத்தொளிக்கஎல்லோரும் பார்த்து இத்திருநாள் நல்லதென்றுஅல்லோரு மெச்சி அகமகிழ்ந்தா ரம்மானைநல்ல திருநாள் ஞாயிறாழ்ச்சை முழுதும்செல்ல மறுநாள் திங்க ளுதித்தவுடன்காட்சி நடத்திக் கரிய திருமாலும்நாச்சிமார் கூட நாதன் பதிபுகுந்தார்நாதன் பதிபுகுந்து நருட்கு விடைகொடுத்துமாதரோடு நாரணரும் மகிழ்ந்திருந்தா ரம்மானை 100 இப்படியே திருநாள் இகனை மிகநடத்திநற்புடனே நாதன் நாயகிமார் தம்மோடுகூடி யிருந்து குலாவி யிருக்கையிலேவேடிக்கை யாக விதியின் படியாலேநல்லபுகழ் சீதா லட்சுமிக்கு நாரணரும்செல்லப்பட் டானதுவும் சிவந்ததங்கக் காறையதும்இட்டுக் கலியாணம் இலட்சுமியைச் செய்யவென்றுமட்டநிக ரில்லா மாயன் மனதிலுற்றார்தங்கத்தால் காறை தானதியப் பட்டதுவும்அங்கே மிகவருத்தி ஆயிழைக்குத் தான்கொடுத்துத்திருநா ளிகனைத் திடிமன் முழக்கமொடுபெருமாளும் லட்சுமியைப் பேறாய் மணமுகித்துத்தெருவலங்கள் சுற்றிச் சிறந்த பதிபுகுந்துமருவினிய நாதன் மாதரோடு வீற்றிருந்தார்நல்லரிய நாதன் நன்றா யிருக்கையிலேவல்ல திருதெய்வ மடவார்க ளேதுரைப்பார்ஐயாவே யெங்களையும் ஆண்டத் திருமாலேவைய மளந்த மாயத் திருமாலேஎங்களைநீ ரிப்போ இவ்வுலகந் தானறியமங்களமும் செய்தீரே மக்களையுந் தாருமென்றார் 120 அப்போது மாயன் அவர்களோ டேபுகல்வார்இப்போது மாதர்களே என்னோடு கேட்டதற்குநல்லத் திவசம் நமக்குவரு மந்நாளில்வல்ல வகையாலும் மக்களையுந் தாறோமென்றார்அதுவரையும் நீங்கள் அதட்டாம லெயிருங்கோஇதுவரைக்க நல்ல ஏந்திழைமா ரெல்லோரும்சந்தோச மாக சுவாமி தனக்கவர்கள்வந்தே நிதமும் வாய்த்ததொண்டு செய்துமிகவாய்த்தபுகழ் லட்சுமியும் மாதுமட வாரேழும்ஏற்ற தொண்டுசெய்து எப்போதும் வீற்றிருந்தார்நாரணருந் தேவியரை நாடி யகமகிழ்ந்துகாரணரு மெச்சிக் களிகூர்ந் தினிதிருந்தார்நன்றாக இப்படியே நாச்சிமா ரோடிருக்கஎண்டிசையி லுள்ள ஏற்றபுகழ்ச் சான்றோர்கள்வந்து அவர்பதத்தை வாழ்த்தி மிகப்போற்றிசந்துஷ்டி யாகத் தாழ்ந்துநமஸ் காரமிட்டுமனதில் நினைத்ததெல்லாம் மாயவரோ டேவுரைத்துத் தன்துள் விடைவேண்டி சங்கடங்கள் தீர்ந்திருந்தார்தெய்வமு மவராய்த் திருவுள முமவராய்வைய மகிழ மனுப்போலு மிருந்தார் 140வத்துவகையும் மாடாடு சொத்துக்களும்ஒத்து மிகவாழ்ந்து உடைய பரனிருந்தார் அம்மை மார்களுக்கு மதலை ஈதல் இப்படியே ஒத்து இவரிருக்கும் நாளையிலேநற்புடைய தெய்வ நாயகிமார் கேட்டபடிமதலை கொடுக்க மனதிலுற் றெம்பெருமாள்குதலை யினத்தைக் கூறி மிகவுரைத்தார்ஏழினமு மாதருக்கு இனமிட்டே தான்கொடுத்துநாளுவந் தபோதே நாரணருங் கொண்டாடிவாய்த்த திருநாள் மகிழ்ச்சையுட னடக்கஏற்றகுலச் சான்றோர் எல்லோரும் வந்துநிற்கபிள்ளை தனையெடுத்துப் பெண்ணார்க ளேழ்பேர்க்கும்வள்ளலந்த மாலும் மனதுற்றி ருக்கையிலேகண்ணான தெய்வக் காரிகைமா ரெல்லோரும்விண்ணாண மாக வீரநா ராயணரை கண்ணரே கரிய மாலே காரணக் குருவே அய்யாஇண்ணெங்கள் மதலை யேழும் எடுத்துநீ ரினம தாகவிண்ணெங்கு மகிழத் தந்து வெற்றியா யாண்டு கொள்ளும்மண்ணெங்கு மளந்த மாலே மகாபரக் குருவே யென்றார்நாதக் குருவே நாடுமெங்கள் மன்னவரேமாதவரே யின்று வந்தநாள் நன்றெனவே 160 இப்போ மதலை எடுத்து மிகத்தாரும்செப்போடு வொத்த திருமாலே யென்றுரைத்தார்நல்லதுதான் பெண்ணே நாட்டு நருளறிய முல்லை வனத்தில் முன்னேநீர் பெற்றுவைத்தமதலைக ளேழும் வளர்த்து இத்தனைநாளும்குதலைப் பிராயமதாய்க் கொண்டுதிரிந் தேவளர்த்தேன்பாலமு தூட்டாமல் பருவனத்தில் நீங்கள்விட்டுக்கோல வனத்தூடே குதித்தோடி மீண்டுவந்தீர்என்னென்ன பாடு யானிந்தப் பிள்ளையினால்பொன்னனயக் கன்னியரே புகலவுந்தான் கூடிடுமோதெய்வேந் திரன்பசுவைத் திரையாகக் கொண்டுவந்துமொய்வனத்தில் பாலுகொண்டு மிகக்கறந்து மக்களுக்குஊட்டி வளர்த்தேன் உம்பர்கோ னுமறிந்துமாட்டிடவே யென்னை மாபடைக ளோடுவந்தான்தப்பி யவன்றனக்குத் தான்வளர்த்தேன் பிள்ளைகளைஒப்பரியப் பாலமிர்தம் ஒருநா ளொழியாமல்மைப்பெரிய தாலம் வகுத்து மிகவளர்த்தேன்மக்களுக்காய்ப் பாடுபட்டு வைகைமண் ணுஞ்சுமந்துசொக்கரெனுஞ் சமைந்தேன் சொந்தமக்கள் வாழவென்றுபின்னுமிப் பிள்ளைகள்தான் பெரும்புவியை யாளவைக்கத் 180 துன்னுகெட்ட கலியில் தோன்றிக் குதித்துவந்தேன்வந்தான்சா ணான்குலத்தில் மாயனென்று மாநீசன்பின்தாக்கிக் கையைப் பிடித்து மிகஇறுக்கிச்சாட்டைகொண் டேயடித்துத் தடியிரும்பி லிட்டுவைத்துக்கோட்டி மிகச்செய்து கூறி மிகஅடித்துஅரங்கு மணிமேடை யானதிலே யென்னைவைத்துப்பரங்குவிய நித்தம் பாதம் பணிவேனென்றான்சாணா ரிடத்தில் தான்போகா தபடிக்குக்கோணாம லெங்களுடன் கூடியிரு என்றுடித்தான்பெற்றபிள்ளை யெல்லாம் பெருகலைந்து போவாரெனஇற்ற விலங்கில் இருந்தேன் மிகக்கவிழ்ந்துசாலமுட னீசன் தான்படுத்தும் பாட்டையெல்லாம்பாலருக்காய் வேண்டிப் பாரறியப் பட்டேனான்பெற்றது போதுமென்று பெண்ணேநீ ரேழ்பேரும்மெத்த தெளிந்து மேவிவந்தீ ரிப்போதுஎன்றுரைக்க மாலும் ஏந்திழைமா ரேழ்பேரும்மன்று ள்ளோர்களறிய மாத ருரைக்கலுற்றார்பிள்ளைகள்தான் நன்றாய்ப் பெருகி மிகவாழவள்ளலெங்கள் மாலே மாறாத் தவசிருந்தகாரணத்தைச் சொன்னால் கணக்கி லடங்கிடுமோ 200 பூரணத்தின் ஞானப் பெரிய திருமாலேஆரு மொருதர் ஆராட்டங் காணாதமேரு நிறைவனத்தில் மெல்லிய ரேழ்பேரும்ஒருவர்முக மொருவருக்கு ஒருரூபங் காணாமல்கரிய அவரவர்கள் காடு வடவுகளில்உடுகலைகள் கொய்து உற்றமுடி தான்விரித்துக்கடுகெனவே வூசிதனில் கைவிரலைத் தானூன்றிஆசை யுறவற்று அக்கபக்கத் தாசையற்றுமாசைக் கருவறுத்து மயக்கவெறி தானறுத்துபாச மறுத்துப் பக்கத் துணைமறந்துவாச மணமும் வாக்குப்பேச் சுமறந்துகாடு நினைவறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்துவீடு நினைவறுத்து வெளிவீடு தான்திறந்துமலசலங்க ளற்று வாயுவுடப் போக்குமற்றுக்குலதலமு மற்றுக் கூறுகின்ற பேச்சுமற்றுப்பேச்சற்று மூச்சற்றுப் பெருவனத்தி லும்மருளால்ஏச்சதூச்ச மற்று ஈராறு காலம்வரைநிற்க வுடம்பை நெடும்புற்று தான்மூடிப்பக்க மால்முளைத்து புறாவினங்கள் தான்கூடிமுட்டையிட்டுக் குஞ்சு மூன்றுநே ரம்பொரித்து 220 வட்டணியாய்க் காடு வளைந்தெங் களைச்சூழ்ந்துகடுவாய் புலிகரடி கனத்தகுட்டி களீன்றுகடுகிமிகப் புற்றுக் கரையில் மிகவாழும்ஆனையது குட்டி அதுபயின் றெங்களுடத்தானநிறை புற்றருகில் தன்னால் மிகவாழும்பிள்ளையால் நாங்கள் பெருகத் தவசிருந்தஉள்ளமைக ளெல்லாம் உரைக்க எளிதாமோநாணமற்று ஊணுமற்று நாலுமூணு ஆண்டுவரைதாணருட தஞ்சமெனத் தவசு மிகப்புரிந்துபிள்ளைக ளாசையினால் பேருல கில்வந்தோம்வள்ளலெங்கள் மக்கள்தம்மை மாயவ ரேதாரும்தந்து புவியாளத் தலைவரே யும்முடைய விந்துவழி மக்களையும் விரைவாய் மிகத்தாரும்தாருமென மாதரெல்லாம் தாழ்மையுட னீதுரைக்கஆருநிக ரொவ்வா அச்சுதரு மேதுரைப்பார்மாதேநா னிந்த வையகத்தில் வந்தவுடன்பாரேழில் நம்முடைய பஞ்சவர்கள் தம்வழியில்தேர்ந்துந்தன் மக்களிலே சீசனென நான்தெரிந்துகூர்ந்தெந்தன் கையதுக்குள் கொள்ளுகிறேன் வேலையதுஇன்னாபா ரென்று ஏழுபேரையு மெடுத்து 240 நன்னகரி பார்க்க நாத னிடுப்பில்வைத்துவட்டமிட்டு ஆடி மாதரொவ் வொருவர்க்கொருகிட்டவிட்டுக் காட்டிக் கிளிமொழிமார் கைக்கொடுத்தார்பாலரையும் பார்த்துப் பாவையரைப் பார்த்தவுடன்சீலமுள்ள லெட்சணமும் சிற்றிடையு மொப்பனையும்ஒப்பமென் றெல்லோரும் உம்பருந் தாமகிழ்ந்தார்செப்பமுள்ள மாதர் சிரித்து மனமகிழ்ந்துஅன்றுபெற்ற பிள்ளை ஐந்திரண் டானதிலேமன்றுதனை யாளும் மாபாவிச் சோழனவன்கொன்றானிரு பேரைக் கூடைதலை மீதில்வைத்துசொன்னீரே சுவாமி தோன்றியிப்போ வந்தாரோதேன்மொழியே மாதே சொன்னபிள்ளை ரண்டுடையமானதிய மக்களென மாயவருந் தானுரைக்கஅப்போது பெண்கள் அச்சுதரைத் தான்பார்த்துஇப்போ வரவில்லையே எப்போ வருவார்கள்மைப்பெரிய கண்ணே மாதரென் தேவியரேசெப்பினீரே நீங்கள் சென்றமக்க ளெப்போவென்றுபொல்லாத நாட்டுப் பொன்று கலியைமுடித்துநல்லதர்ம நாடு நான்தோன்ற வைக்குகையில்நடுஞாயங் கேட்டு நடுத்தீர்ப்புச் செய்யுகையில் 260 கெடுவேலை செய்த கேள்வியில்லாச் சோழனையும்ஆக்கினைகள் செய்து ஆழநர கமதிலேதாக்கியும் மக்களைநான் சடத்தோ டெழுப்பிமிகத்தருவேன் குருசுவாமி தன்னாணை மாதர்களேமருவினிய மாதே வாக்கிதுவே தப்பாதுஎன்றாதி நாதன் ஈதுரைக்க மாதரெல்லாம்நன்றாய் மகிழ்ந்து நாடிமக்க ளையெடுத்துமடிமீதில் வைத்து மலர்ந்முகத் தோடணைத்துக்கண்ணோ மணியோ கரடரா சன்மகனோவிண்ணோர்கள் மெச்சும் வேதப் பரஞ்சுடரோதோணார்க் கரியத் துய்யதிரு மாலீன்றசாணாரோ நாயகமோ சகலகலை கற்றவரோதெய்வ யுகக்கன்றோ திசைவென்ற சான்றோரோவையம் புகழவந்த மக்களே என்றுசொல்லிச்சந்தோச மாகத் தார்குழலா ரேழ்பேரும்புந்தி மகிழ்ந்து பூரித் தகமகிழ்ந்தார்நாங்கள்செய் ததவத்தில் நாலிலரைப் பங்குவரம்வாங்கினோ மையா மாயவரே யின்னமுண்டுநாடாள வைக்க நல்லவரந் தந்ததுண்டுதாடாண்மை யுள்ள சங்கரரும் வந்திருந்து 280 என்றுரைக்க மாதர் எம்பெருமாள் நல்லதென்றுஇன்று வரைத்ததுவும் இலக்கதிலே ஆகுமெனச்சீதைக்கு நல்ல சிறந்தமக னையெடுத்துமாதுக்குத் தான்கொடுத்தார் வையகத்தோருங் காணமணமுகித்து மாதருக்கு முன்வகுத்த மைந்தரையும்குணமுடனே காட்டிக் கொடுத்தாரே யெம்பெருமாள்நல்ல திருநாள் நாள்கழித்து மற்றாம்நாள்வல்ல கதிரோனும் வந்ததுகா ணம்மானைகதிரோனுந் தோன்றிக் கங்குலவெளி யாகுகையில்திருநா ளிகனை செய்து நிறைவேற்றிமக்களெல்லாஞ் சூழ வந்து மிகப்பணிந்துமிக்கஅவர் வீட்டில் விடைவேண்டித் தாம்போனார்கைக்குள்ளே நிற்கும் கரியச் சன்மாரும்மைக்குழல் மாரோடும் மகிழ்ந்திருந்தா ரம்மானைபின்னுஞ் சிலநாள் பெரியதிரு நாள்நடத்திமன்னுகந்த நாரணரும் மாதரொடு வீற்றிருந்தார்பெண்க ளவரவர்க்குப் பெரிய அரங்குவைத்துத்தங்கள் தங்களுக்குச் சாமான்க ளுங்கொடுத்துப்பால்பவிசுங் கொடுத்துப் பாக்கியங்கள் மிகுவாய்மாலவர்கள் மனையில் வந்து அமுதருந்தி 300 இன்றொரு வீட்டில் ஏற்ற அமுதருந்திஅன்றிரா அங்கே அனந்தமால் பள்ளிகொண்டுபின்னுமொரு மாதருட பொன்னரங்கில் வந்திருந்துஅன்று அமுதருந்தி அன்றிரா அம்மனையில்பள்ளிகொண்டு இப்படியே பாவையர்கள் வீடோறும்துள்ளியே மாயன் திருவிளையாட் டுமாடிமங்கையர்கள் காணாமல் மறுமனைக ளும்புகுந்துகொங்கைமட வாரோடு கூடிவிளை யாடிடுவார்மாயன் விளையாட்டை வகைப்படியே சொல்லவென்றால்வாய்ந்த வுலகில் வளர்ந்தபனை யோலையில்லைகூடி மடவாரோடு குவிந்துவிளை யாடுகையில்நாடி மடவார்கள் நாயகிமார் தங்களுக்குள்ஒருவர்க் கொருவர் உபாயமாய்ப் பார்த்திருந்துதிருமருக ரோடே தெய்வமட வார்வெகுவாய்ச்சண்டை பிடிப்பார் தந்ததுபோ ராதெனவேகண்டமட வாரோடும் கனிவாகப் போறீரெனஅவள்வீட்டில் போறீர் அவளோ டதிகமுமாய்உபகாரஞ் செய்யுகிறீர் உள்ளாகத் தானிருந்துஎன்னோடு பேச்சு இப்படியே செய்வீரெனமின்னோ வியங்கள் வெகுவாகக் கத்திடுவார் 320 சாமியொடு வெகுவாய்த் துரைத்தனங்க ள்தான்பேசிநாமகலப் போவோம் எனநடந்து மக்களுடவீட்டி லவர்போவார் வீரமால் தானறிந்துகூட்டி வரப்போவார் குளிர்ந்த மொழியுரைத்துஅள்ளித் தருவேன் அனந்தவரா கன்பணமும்வெள்ளியும் பொன்னும் மேன்மையுள்ள சீலைகளும்உந்தனக்குப் போதும் உடைமை மிகத்தருவேன்அந்தப்பெண் ணார்களுக்கு அதுக்கதுபோ லேகொடுப்பேன்எழுந்திருநீ யென்று எட்டிமிகக் கைப்பிடித்துக்குளிர்ந்தநய வார்த்தைக் கோதைமின்னார் தாங்கேட்டுச்சிரித்து மகிழ்ந்து தேற்றலிது நன்றெனவேஉருத்துமிகச் செய்வதெல்லாம் ஓவிய முமறிவேன்ஏன்காணு மும்முடைய இந்திரசால மெல்லாம்கோன் கிரிவேந்தே கொஞ்சமெனக் குத்தெரியும்மருட்டா தேயுங்காண் மாய்மால முந்தெரியும்உருட்டா தேயும்போம் உமதுதொழி லுந்தெரியும்எனக்கேற்ற வார்த்தை இதமதிமாய்ப் பேசிடுவீர்தனக்கேற்க நெஞ்சம் தானறியா தேயிருக்கும்கன்னி யுமதுடைய கருத்தெல்லாம் நானறிவேன்நின்னு சடையாதேயும் நீர்போவு மென்றுரைப்பாள் 340 அப்போது மாயன் அதுக்கினிய வார்த்தைசொல்லிஇப்போது நீயும் எழுந்திருந்து வாவெனவேமாய னழைக்க மாது மெழுந்திருந்துநாயன் பிறகே நடந்து மிகவருவான்வந்து வளர்பதியில் வாழ்ந்துண் டினிதிருப்பார்சந்தோ சமாகத் தண்மை வெகுகுணமாய்இப்படியே பெண்களோடு இகனை மிகநடத்திஒப்புரவாய் மாயன் உகந்துண் டிருக்கையிலேசெந்தூ ரலையில் தேவனுதித் தன்றுவந்துமுந்துமூலப் பதியில் உவரிக் கரையிடத்தில்சென்றங் கிருந்து சிவலிங்கத் தானமைத்துமன்றுக்குள் கொஞ்சம் மறைத்துவைத்து மாயவரும்நான்தவ சிருந்து நாட்கள்கொஞ்ச மேகழித்துவான்புதுமை யற்புதங்கள் மாநிலத்தோர் தாமறியச்செய்துதெய்வ மாதர்களைச் சிறந்த மணமுகித்துதெய்திதனி லிங்கே திருநாளைக் கொண்டாடிவருவே னெனச்சிலைக்கு வாக்குமிகக் கொடுத்துத்திருவேற்றி வைத்த தேதியின்று வந்ததெனசும்மா இவரைத் திருப்பதியில் வாநீயென்றுநம்மா லுரைத்தால் ஞாயமில்லை யென்றுசொல்லிக் 360 கொஞ்ச மொருசூத்திரம் கூர்மையாய்ச் செய்யவென்றுஅஞ்சலெனச் சாமளா தேவிதனை யழைத்துக்கன்னியிலே ரண்டு பேரைக் கலக்கமிட்டுஎன்னுடைய மக்களிலும் யாம முறைப்படியேகொஞ்சமது வாந்தி கொடுத்துயிரைத் தான்வாங்கிமஞ்சறை யில்வைத்து வாகாகக் காருமென்றுவிடைகொடுக்க நாதன் வேண்டினாள் தேவியவள்திடமுடனே சொன்ன சொல்வாக் குரைப்படியேகன்னியரில் ரண்டு கடத்தினாள் மாதேவிமின்னி னொளிமதலை வீரத் தனமாகநாலுமூ ணுடனே நகட்டினாள் மாதேவிஉடனே சனங்கள் உடையவரே தஞ்சமெனத்தடமேலே வீழ்ந்து சுவாமி அபயமென்றார்அவதாரத் தின்படியே அன்றமைத்த பெண்கொடியைஉபகார மாமணங்கள் உடையவரே நீரருளிவையகத்தோ ரெல்லாம் மனமகிழ்ந் திருக்கையிலேசெய்யஇந்த மாயம் செய்வாரோ மாயவரே ஆரார்க்கு ஏற்கும் அரிவையர்கள் மக்களுந்தான்போரா வழியானப் பொல்லாப்புச் செய்தாரோஆதியே யவர்கள் அநியாயஞ் செய்ததென்ன 380 சோதியே யென்று தொழுதார் மடவார்கள்அப்போ தொருமகன்றான் அஞ்சாறு நாளதுமுன்சொப்பனங்கள் கண்டதுவைச் சொல்லாமல் தட்டழிந்துஅன்றைப் பொழுது அவன்வந் தடிதொழுதுநன்றினிய எங்கள் நாரணரே நாயகமேபத்துநா ளுண்டும்நான் படுத்திருக்கு மவ்வளவில்பெற்றுச் சழிந்தவர்போல் பெரியபூவண் டர்வடிவாய்வந்தென் றனோடு வளப்பமென்ன சொல்லலுற்றார்சந்தமுடன் நானுரைத்தச் சட்டமற வாதபடிகொஞ்சநாள் தோப்பு குளிர்ந்தபதி யானதிலேஅஞ்சிரண் டாண்டு அதில்வாழ்ந் திருந்துபின்னும்மூலகுண்டப் பதியில் மிகஇகனை செய்யெனவேஏலமே சொன்னதெல்லாம் எண்ணமதி லில்லாமல்பெண்களைக் கண்டவுடன் பூத்தான மாய்மகிழ்ந்துகண்ணாட்ட மறந்து கலியை முடிப்பதற்குநினைவு மயர்ந்து நிலைபேர்ந் திருக்குகிறான்நாட்டுக்குற்றங் கேட்க நானயைச்சு வைத்தற்குகோட்டு மடவாரைக் குறிப்பாக எண்ணிமிகஎண்ணி யிருக்குகிறான் இப்போது அங்கேசென்றுநண்ணிமூ லப்பதியில் நாடிவரச் சொல்லிவிடு 400 வரவில்லை யானால் மாதருடன் மக்களையும்சரமதையும் வாங்கிடுவேன் சுவாமியுடன் போயுரைநீஎன்றுசொல்லி நாளும் எட்டுரண் டாச்சுதையாஅன்று வுரைக்க அய்யாமிகக் கோபமுற்றுபாவிப் பயலே பகராம லித்தனைநாள்மேவி யிருந்தாயே மெல்லி யிழந்தேனேதீட்டிவைத்த சொற்பனத்தைச் சொல்லா திருந்ததினால்கூட்டில் மிகவாழ்ந்த கிளியைமிகத் தோற்றேனேமுந்திவந்து நீயும் மொழிந்ததே யுண்டானால்என்ற னிளமயிலை இழந்துமிக வாடேனேபூவண்ட ரானால் பெரிய பிதாவல்லவோமாவண்டப் பயலே வந்துசொல் லாதிருந்தாய் அய்யா மூலகுண்டப்பதி எழுந்தருளல் இப்போ பதிக்கு எழுந்தருள வேணுமென்றுமைப்போடு வொத்த மாதரொடு மக்களுமேகூடி நடந்தார் கூண்டரிய பொற்பதியில்தேடிமூ லப்பதியின் சிறப்பெல்லாந் தான்பார்த்துஏலமே இப்பதியில் எட்டுநாட் குள்ளேவந்தால்மாலவரின் மக்களுக்கு மாய்வுசற்றும் வாராதேகெடுத்தானே சொர்ப்பனந்தான் கெணித்தவுடன் சொல்லாமல்கொடுத்தோமே நம்முடைய குலமக்கள் மாதரையும் 420 இப்பதியில் வந்தால் எள்ளளவுந் தோசமில்லைஎப்பதியு மிப்பதிக்கு ஒவ்வாது என்றுசொல்லிஎல்லோ ருடனே எம்பெருமா ளுமகிழ்ந்துஅல்லல் வினைதீர்ந்து அதில்வாழ்ந் திருந்தனராம்தோப்புப் பதிபோல் தொட்டிக்கட் டம்பலமும்கோப்புப் புரையும் குளிர்ந்த மணியரங்கும்பள்ளி யறையும் பார்சவுககை மண்டபமும்துள்ளி யிகனை சுகசோ பனம்வரவேபூம்பந்த லும்பெரிய புகுவீர மேடைகளும்ஊண்புரையும் நல்ல உகத்தீர்ப்பு மேடைகளும்சிணமாகச் செய்து சிறந்து மிகஇருந்துகுணமாக மாயன் கோதையொடு வாழ்ந்திருந்தார்வாழ்ந்து திருநாள் வாரஞ்செவ் வாச்சைமுதல்ஆழ்ந்த திருமால் அவதாரக் காட்சியுடன்கும்மி யிகனை குவலயத் தீர்ப்புரைத்துத்தம்மியல்பு கொண்டு சுவாமிவெண் பட்டுடுத்தித்தங்கக்குல் லாஅணிந்து தாமரிய நீராளம்எங்கு மகிழ எம்பெருமாள் தானணிந்துஆயிழைமா ரவர்க்கு அழகுவெண் பட்டுடுத்திவாயிதமாய் மாயன் மகிழ்ந்துமிகக் கொண்டாடி 440 மங்களமா யிகனை மகாயிகனைத் தான்கூறிசங்க மகிழ சுவாமிதிரு நாள்நடத்திபாக்கியங் களோடே பவிசா யிருக்கையிலேதாக்கமிக மாயன் சந்தோச மாய்மகிழ்ந்துபொல்லாக் கலிநாடு பொன்றிவருங் காலமதில்வல்லாமை யான வாய்த்த பகவதிக்கும்மாது உமைக்கும் மண்டைக்காட்டாள் பார்வதிக்கும்தீதகலும் வள்ளி தெய்வானை நாயகிக்கும்கலிமுடியு முன்னே கலியுகத்தோர் கண்காணவலியான மாதர்களை மணமுகிக்க வேணுமென்றுமுன்னுரைத்த ஆகமத்தின் முறைநூற் படியாலேநன்னூல் வழியாய் நாமுகிக்க வேணுமென்று அய்யா கன்னிபகவதி பதியேகல் உன்னித் திருமால் உள்ளில் மிகஅடக்கிவள்ளலந்த மாகுமரி வாழும் பகவதியைமாயமாய்க் கொண்டு வரவேணு மென்றுசொல்லிஉபாயமாய் மனதில் உடைய பரனினைத்தார்கிழவனா கச்சமைத்து கிருதஞ்செய்ய வேணுமென்றுதளதளெனத் தேகம் தன்னுடம் புமினுக்காய்மெக்குவாய் பொக்கனுமாய் முடியுமிக வெண்ணரையாய்கக்க லிருமலுமாய்க் கையதிலே கோலூன்றி 460 தள்ளாடி மெள்ளச் சன்னை மிகப்போட்டுப்பிள்ளாய்ப் பகவதியே பேத்தியென்றன் பொன்மகளேகண்ணு மயிலே கனகவொளி மாமணியேபெண்ணும்பிள்ளாய்ப் பேத்தி பேரனுக்குக் கஞ்சிவிடுஎன்றுசொல்லி மெள்ள ஏந்திழையாள் தானிருக்கும்குன்றுமணிக் கோவிலுக்குள் குன்னிமெள்ளச் சென்றனரேபேத்தியென்ற சொல்லைப் பிரியமுடன் நாயகியும்காதில் மிகக்கேட்டு கன்னி மிகப்பார்த்துஆர்காணும் நானிருக்கும் அரங்குக்குள் வாறதுதான்பாரழியும் நாளோ பையரங்குக் குள்ளேவந்தாய்எங்கிருந்து நீதான் எவ்வூ ருன்பேரேதுகிங்கிலுக்க வந்தவனோ கிழவன்தா னோவுரைநீஅம்மா என்பேத்தி ஆயிழையே நாயகியேசும்மா மயங்காதே சூட்சமொன்று மில்லையம்மாபரமார்த்த மம்மா பழனிமலை யென்றனக்குவிதமாற்ற மில்லை வினோதவித்தை தானுமில்லைஇலாடகுருவம்மா இராமனென்றன் பேர்பேத்திதிலாடம திலிருந்து தீர்த்தமிங் காடவந்தேன்வந்தேனான் கண்மயக்காய் வழிதப்பி யிங்கேதான்உந்தன் திருப்பதியை ஒருஅகர மென்றிருந்தேன் 480 மகளே யென்பேத்தி மாஞால மொன்றுமில்லை செகமெல்லாந் தீர்த்தம் சென்றேனா னிவ்வயதுள்உன்னுடைய தீர்த்தம் உகந்தாட இப்போவந்தேன்பின்னுமொரு பேச்சு பேசுகிறா ரிவ்வுலகில்இன்றுந் தன்பதியில் இருந்திந்த ராவிடிந்தால்நின்றுநின்று போயாலும் நிச்சயம்பார்த் தேமகிழ்ந்துஎன்னுடைய வூருக்கு ஏகவே ணும்பேத்திபொன்னு மகளே பேத்தியெனப் போத்திசொன்னார் பேத்தியென் றுரைத்த போது பொன்பக வதித்தாய் மெச்சிப்போத்தியே யுமக்குக் கொஞ்சம் பொரிமாவு பிசைந்து தாறேன்ஏற்றுநீ ரிளைப்பு மாறி இன்றிரா கழித்து ஏகும்சாற்றிய மொழியைக் கேட்டுத் தனதுள மகிழ்ந்தார் போத்தி அம்மா நீசொன்ன அருமை யெனக்கதிகம்மும்மால்க்கு மேற்று முகுந்தன் பதம்பெறுவாய்தாகமல்லால் பசிகள் தானெனக்கு இல்லையம்மாதேகமது வாடாமல் செலந்தந்தால் போதுமென்றார்பால்மோரு போலே பதங்கொடுத்து மாகுமரிகாலாறிப் போமெனவே கன்னி மிகவுரைத்தாள்தாக மதுதீர்ந்து தானிருக்கு மப்பொழுதுநாகரீகக் குமரி நாயகியு மேதுரைப்பாள் 500 போற்றி யுமக்குப் போதவய தானதினால்நாற்றிசைக ளெங்கும் நடமாட்ட மாயிருக்கும்ஏதேது தீர்த்தம் இகனைபல மாயுளதுமாதோடே சொல்லும் மாபெரிய போத்தியென்றாள்உடனே கிழவன் உளமகிழ்ந்து நன்றெனவேமடமாதே காசி மகாதீர்த்தம் நல்லதுதான்கன்னி மாகுமரி காசித்தீர்த்தம் நிகராம்பின்னு மற்றதெல்லாம் பிரமாண மப்படிதான்இப்போ தொருசெய்தி இராச்சியத்தில் சொல்லுகிறார்எப்படியோ நிசமாய் இருந்தாலது மேன்மையதாம்என்றுரைக்க நல்ல இளங்குமரி ஏதுரைப்பாள்விண்டுரைத்த ஞாயமதை விளம்புவீர் போத்தியென்றாள்அப்போது கிழவன் ஆச்சரிய மாய்மகிந்துஇப்போது வேணும் இவளை மிகஇளக்கஎன்று மனதுள் இருத்தி மிகத்தெளிந்துமன்றுதனில் கேட்ட வளமைகே ளென்றுசொல்லிஆயிரத் தெட்டாண்டாம் ஆனதொரு மாசியிலாம்வாயிதமாய்ச் செந்தூர் வாரிதனி லேபிறந்துவைகுண்ட மென்று வையகத்தில் வந்திருந்துகைகண்ட அற்புதங்கள் கனகோடி செய்கிறாராம் 520 தண்ணீ ரதுவாம் தான்கொடுக்கு முத்திரியாம்மண்ணிலுள்ளோர் யாரும் வந்து வணங்குறாராம்தண்ணீர் மண்ணீந்து சகலவினை தீர்க்கிறாராம்புண்ணிய தானங்கள் போதமிகச் செய்கிறாராம்குட்டங் குறைநோவு குருடூமை யானதுவும்கட்டங் கொடியக் கர்மமுதல் தீர்க்கிறாராம்மைந்தர் கொடுக்கிறாராம் மகாதர்மஞ் செய்கிறாராம்மனுப்பேரில் பேயை மாகிலுக்க மாயாட்டித்தனுப்பெலங்கள் வாங்கி சருவி லெரிக்கிறாராம்தெய்வமட வாரெனவே தேவியேழு பெண்களையும்வைய மறிய மாலையிட்டுக் கொண்டாராம்நித்தந் திருநாள்போல் நீணிலத் துள்ளோர்கள்மெத்தக் குமுக்காய் மிகவந்து கூடுறாராம்டம்மான வெடிகள் டகுடகென நாகசுரம்இம்மாத்திர மெனவே எண்ணவுங் கூடாதாம்காட்சிரெம்ப வுண்டாம் கலிமுடிக்க வந்தோமென்றும்பேச்சுமிகச் சொல்லி பிரான்யாமங் கூறுறாராம்இப்படியே பேச்சு இதுவுறுதி யானாக்கால்எப்படியுங் கர்த்தன் இவரெனவே சொல்லிடலாம் 540 அல்லாமல் கலியுகங்கள் அழியுகின்ற நாளையிலேசொல்லால் பெரிய திருமால் சொரூபமதாய்த்தெச்சணத்தில் வந்து திருவிளையாட் டாகுமெனஅச்சமறப் பேச்சென்று ஆதியிலே கேட்டதுண்டுஅந்த முறைதானோ அவனியிலே கேட்கிறதுஎந்த விதமோ தெரியுதில்லை யென்பேத்திபோய்ப்பார்த் தால்தெரியும் பொன்மகளே பேத்தியென்றார்வாய்பார்த்த போது மாது மிகமகிழ்ந்துகண்ணரிய போத்தி காரணத்து நற்போத்திதிண்ணமுள்ள போத்தி செப்புவதை நீர்கேளும்தெய்வ மடவாரைத் திருமணங்கள் செய்தாரென்றுவையமது சொன்ன வளமுரைத்தீ ரென்போத்திமாதரையும் பார்க்க மனவிருப்ப மாயிருக்குஆதரவாய்ப் போத்தி அதுவரையும் என்னையும்நீர்கூட்டிக்கொண்டு போவீர் கிழவனா னபோத்திபூட்டியுந் தன்பிறகே பிள்ளைபோ லேவருவேன்செய்தியென்ன வென்று தேவி யுருக்கமுடன்செய்தி மிகவடைந்த தாதனோ டேயுரைத்தாள்அப்பொழுது லாடகுரு அவரேது சொல்லலுற்றார்இப்படியே சொன்னதற்கு யான்கூட்டிப் போயிடுவேன் 560 ஓடி நடக்க ஓட்டாது தள்ளாட்டம்கூடி நடக்கக் குறுக்குப் பெலக்காதுபேசி நடக்கப் பிசகுமம்மா என்னாக்குவீசி நடக்க விழிக்குக்கொஞ் சமறைவுகக்க லிருமல் கால்பெலக்க வொட்டாதுசிக்கெனவே நடந்தால் செருக்கிரும லீளைவரும்இத்தனை துன்பம் இருக்குங் கிழவனுடன்சிற்றிடையீர் நல்ல சிறுபிரா யம்நடந்தால்ஒக்குமோ பேத்தி உன்னடையு மென்னடையும்பக்குவமோ நான்தான் பாதை நடப்பதற்குநானடப்பேன் காதவழி நாலுநாள் தங்கலெனநீயென்னோ டேநடந்தால் நிகராமோ பேத்தியென்றார்அப்போது நல்ல ஆயிழையு மேதுரைப்பாள்நற்போடு வொத்த நம்முடைய பேராநீர்வேறாட்கள் கூடவெளியேறப் போகாதுவீறாகப் போத்தி மெல்லநடை யாகிடினும்உம்மோடே நடக்க உள்ளாசை யாயிருக்குஎம்மாத்திரம் நாட்கள் எவ்வளவு சென்றாலும்பைய இருந்திருந்து பாதை மிகநடந்துநெய்யதியக் கன்னி நேரிழைமா ரேழ்வரையும் 580 பார்த்து வரவேணும் பண்டையுள்ள போத்தியென்றாள்சாற்று மொழிகேட்டு தாதன் மிகமகிழ்ந்துஅப்படியே யானால் ஆயிழையே யுன்னருகில்பொற்பணிவே லைபுரியும் பெண்ணா ரறியாமல்இங்குள்ள பேர்கள் எள்ளளவு மறியாமல்கங்கைக் கரைவழியே காணாது போய்விடுவோம்போக வென்றாலும் பொழுது புறப்படுமுன்ஏகவேணும் நாமென்று இயல்பா யுரைத்தனராம்அப்போது கன்னி ஆயிழையும் நல்லதென்றுஇப்போ தெழுந்திரியும் இதுகடந்து போவோமெனச்சொல்லிக் கிழவன் சிரித்து மனமகிழ்ந்துநல்லகா ரியமெனவே நாம்போவோ மென்றுவுன்னிஅரிஹரி கோவிந்தா அலைதுயின்றாய் போற்றுயென்றுகரிஹரி கோவிந்தா காரியங்கைக் கொண்டோமென்றுகுன்னி மிகவெழுந்து கோலு மிகபிடித்துஉன்னி யிருப்பும்விட்டு உடனே வெளியில்வந்துசன்னை மிகஇருமித் தள்ளாடித் தள்ளாடிப்பின்னே விழுவார்போல் போத்திமுவ் னிற்கையிலேமாது கதவெல்லாம் வாங்கி மிகஅடைத்துக்கேது விளைத்துவந்த கிழவன்பின் னாலேகி 600 வந்தவளை யழைத்து வாவா பிறகெனவேசந்தமுடன் லாடகுரு சாடைசெய்து முன்னடந்தார்முன்னடக்கப் போத்தி மொய்குழலாள் பின்னடக்கஅன்னநடைகள் விட்டு அலைவாய்க் கரைவழியேமுட்டாங்கு மிட்டு முகந்தெரியா வண்ணமவள்கட்டாய்க் கவிழ்ந்து கன்னி பகவதியும்கிழவன் பிறகே கிளிமொழியாள் தானடக்கமலர்மாரி தூவ வாயு மரைவீசபூமி குலுங்காமல் பொருப்பு மசையாமல்காமி குமரி காலசையா மல்நடந்தாள்நடக்கும் வழிதனிலே நாயகியோ கேகேட்பார்வடக்குநா டுநமக்கு வசந்தான் வழிநடப்புதெச்சணா பூமி திசைமாற்ற மாயிருக்கும்பச்சை வளையணிந்த பாவையரே பார்த்துநடதிக்குத் திசைகள் தெரியுதில்லை யென்பேத்திமுக்கொரு மூலைதன்னை முன்னாடிப் போவோமெனவாரிக் கரைவழியே வாய்த்தநேர் மேற்காகக்காரிருளாகு முன்னே கால்விரைவாய்ப் போவோமெனச்சொல்லச் சிறுகன்னி தியங்கிமெள்ள வாயுரைப்பாள்அல்லல் வினையோ ஆண்டவன் தன்செயலோ 620 வெளிகாணா தேயிருந்த மெல்லி வெளியில்வந்தால்வழிதான் தெரியுமோகாண் மாபெரிய போத்தியென்றாள்பதறாதே பெண்கொடியே பகவான் துணையுண்டுமடிஇதறாதே நாமள் இவ்வழியே சென்றாக்கால்தெச்சணத்தில் பள்ளிக்கொண்டு தெய்வமட வார்களையும்நிச்சயம் மணம்புரிந்த நீலவண்ண ருண்டுமடிகலங்காதே கண்ணே கடற்கரையே போவோம்விலங்காம லிவ்வழியே மேற்குநோக் கிப்போவோம்என்றுசொல்லி மாதை இளக்கிமிகப் போகையிலேஅறைந்த வாரி அதற்கு வடபுறமாய்இடம்மான வோசை டகுடகா வென்றுமிகஇடம்மானம் நாகசுரம் இரைச்சல் மிககேட்டுச்சற்றே பொறுபேத்தி சத்தமொன்று கேட்குதிங்கேமெத்த இரைச்சல் மேளத் தொனிகேட்குக்குரவை யொலியும் குத்து வெடியுங்கேட்குப்பரசா திக்குரல்கள் பலவிதமாய்க் கேட்குப்பார்த்து நடப்போம் பாதைவிட் டுவிலகிச்சற்று வடக்கேறி தான்பார்த்துப் போவோமெனஎன்றுரைக்கப் போத்தி இயம்புவாள் நாயகியும்நன்றுநன்று கிழவா நடவுமுன் னேயெனவே 640 தண்டையணி மடவாள் சடைத்து முகம்வாடிகெண்டையக்கண் மடவாள் கிள்ளைபோ லேயுரைத்தாள்குன்னிமெள்ளக் கிழவன் கோலூன்றிக் கோலூன்றிமின்னிடையே பையவென்று மெல்லவடக் கேறினராம்வடக்கேறி மாதை வலம்விட்டுத் தான்கூட்டிநடக்கையிலே ஆளிரச்சல் நாடி மிக்ககேட்டுஅன்ன நடையழகி அமிர்தவாய்ச் சொல்லழகிசின்ன இடையழகி திசைமயங்கி யேதுரைப்பாள்கண்ணினிய போத்தி காரணத்து நற்போத்திநண்ணினிய போத்தி நானுரைக்குஞ் செய்தியைக்கேள்சனக்கூட்டம் ரெம்பத் தான்காணு மானதினால்எனைக்கூட்டிக் கொண்டு இதில்விட் டகலாதேயும்திக்குத் திசையெனக்குத் தெரியாது கண்டீரேபக்குவங்கள் சொன்னேன் பாத மடைக்கலமேகைக்குள் விட்டுக்கொண்டு கன்னியரைத் தான்காட்டிப்பைக்குள் வைத்துக்கொண்டு பகலோ னுதிக்குமுன்னேஎன்பதியில் கொண்டு இருத்தியெனை வைத்தீரால்பொன்பதி னாயிரத்தால் புனைந்தவொரு தாவடந்தான்உம்முடைய மார்பில் உடனணிவேன் கண்டீரே எம்முடைய மானம் இருக்குதுகா ணும்மிடத்தில் 660 ஒருவ ரறியாமல் உபாயமாய்க் கொண்டுவென்னைதிருவனப் பதிக்குள் சேர்த்துவையும் போத்தியென்றாள்பேத்தி பதறாதே பெரியபதி சேர்த்துவைப்பேன்காற்று அசுங்காத கண்ணர்பதி சேர்த்துவைப்பேன்மலங்கா தேபேத்தி வான்பதியில் வாழ்ந்திருக்ககலங்கா தேசேர்த்துக் கண்ணாணை வைத்திடுவேன்என்றுரைக்கப் போத்தி இளவரசி யுமகிழ்ந்துஅன்றந்தக் கிழவன் அருகிலொண்டித் தானடந்துஆளுக் கிடைநடுவே ஆயிழையும் பேத்தியுமாய்த்தோளுப் பிடித்தாற்போல் தோகையரும் வந்தனராம் வந்தனள் பதியின் சீரும் வளர்மணி மேடைக் காலும்சந்தன வாடை வீசும் தலமது நருட்கள் சீரும்செந்தமிழ் தர்மச் சீரும் சிவாலயத் தெருக்கள் நேரும்புந்தியில் மகிழ்ச்சை கூர்ந்து போத்தியை மெச்சு வாளே போற்றிநீ ருரைத்த தெல்லாம் பொய்யில்லை மெய்ய தாகும்சாற்றினீர் பின்னுந் தெய்வத் தார்குழ லுண்டு மென்றுபார்த்துநீர் நமக்குக் காட்டும் பைங்கிளி மாரை யெல்லாம்சீத்துவ மாக எந்தன் சிந்தையி லறிய என்றாள் உடனந்தக் கிழவன் தானும் உள்ளது தானே யென்றுமடமயில் குமரி தன்னை வாவென அழைத்துக் கூட்டி 680குடதன முடையா ரானக் கோதையர் கோவில் புக்கிநடைதனில் நின்று கொண்டு நாரிய ரிவர்தா மென்றார் பார்த்தந்த மடவா ளானப் பகவதி மாது சொல்வாள்சேர்த்திந்த மடவார் தம்மைத் திருமணஞ் செய்த மன்னர்ஏற்றெந்த இடத்தே வாழ்வார் இதுநமக் கறியக் காட்டிக்சாற்றிந்தத் தலமுங் காட்டித் தன்பதி போவோ மென்றாள் ஆதிக் கிழவா அரிவைகன்னி மார்களையும்நீதி யுடன்கண்டேன் நேரிழைமார் தம்மைமணம்செய்த கணவரையும் சென்றுபார்த்த தேநாமும்நெய்தரிய நம்பதியில் நாம்போவோம் வாருமையாஎன்றுரைக்க மாது இளங்கிழவ னேதுரைப்பார்நன்றுநன்று பேத்தி நாயகிமார் மன்னனையும்இன்றுநீ காண இப்போது காட்டுகிறேன்பார்த்துக்கோ வென்று பையவா வென்றுசொல்லிக்கோற்றுக் குருவம்பலத்தில் கும்மிமிகக் கொண்டாடிநாட்டுத்தீர்வைக் கணக்கு நவின்றிருக்கும் வேளையிலேகாட்டிக் கொடுத்தார் கரியமால் நாரணரை பகவதிக்குச் சச்சிதானந்த வடிவைக் காண அருளல் பகவதியாள் வந்து பார்க்கின்ற அப்பொழுதுசுகபதியாள் கண்ணதுக்குத் துய்யத் திருமாலும்பச்சை நிறமும் பவளவாய்க் கனியிதழும் 700 நச்சரவில் பள்ளிகொண்ட நல்லசொரூ பம்போலேதண்டை யணிக்காலும் தாமரைக்கை பொன்முகமும்தெண்டையக்கண் மாலும் கிரணவொளி ரத்தினம்போல்செம்பவள வாயும் சிறந்தபீதாம் பரத்துடனேஅம்பலத்தே நின்று ஆனந்த மேபுரியஆனந்த மான அழகு பகவதியும்தானந்த மான சச்சிதானந் தவடிவைக்கண்டந்த மாது கண்மூடா வண்ணமங்கேநின்று அவள்பார்த்து நெஞ்சந்தடு மாறினதைகிழவ ரறிந்து கிளிமொழியை விட்டகலபழவ ரொருசொரூபம் பாச மிகஎடுத்துக்கைநெகிழ்ந்து மாயன் கனகபதி மீதில்வந்தார்மைவளைய மாது மாறிமன தேதிரும்பிப்பார்த்தா ளருகில் பண்பாக நின்றதொருகூத்தாடித் தாதனையும் கோதைமிகக் காணாமல்பாவிக் கிழவன் பாதங்கள் செய்தானேலாவிலாவிக் கொஞ்சம் லாவிமிகத் தேடலுற்றாள்அய்யோ கெடுத்தானே ஆதிக் கிழவனம்மைமெய்யோ னென்றிருந்தோம் வெளியேற்றி விட்டானேஎங்கே யினிக்கண்டு என்பதியில் போவேனான் 720 திங்க ளுதிக்குதல்லோ சேவல்குர லாகுதல்லோநிலவெளிச்ச மாகுதல்லோ நிற்கிழவனையுங் காண்கிலையே குலமுழிவ தாச்சே குவலயங்கே டாகுதல்லோமான மழிந்தாச்சே வையகமும் பேசாச்சேதான மழிந்தாச்சே சங்கையினி கெட்டாச்சேஇக்கிழவ னம்மை இளக்கியிங்கே கொண்டுவந்துமொக்கை மிகக்கெடுத்து மோசஞ்செய்ய வந்தானோஎன்னபோ லாச்சு என்தலையி கூறிதுவோஅன்னம்போல் வார்த்தை ஆசார மாயுரைத்துச் சந்தியில்பந் தாக்கினானே சளக்கிழவன் நம்மையின்றுசுந்தரியு மொத்தச் சோர்ந்துமன தேகலங்கிபுலம்புவாள் தனியே பொன்னும் பகவதியும்சிலம்பணியும் நாயகியும் தியங்கிப் புலம்பினளாம்என்னைப் படைத்தவரே ஈசுரரே தஞ்சமென்றுபொன்னனைய மாதும் புலம்பித் தவிக்கலுற்றாள் 740 தலையி லெழுதுஞ் சங்கரரே தஞ்சமெனஉலையில் மெழுகதுபோல் ஓவியமும் உள்ளுடைந்துஇனம்பிரிந்த மானதுபோல் ஈயமது போலிளகிமனம்பிரிந்து மாது மதலை யழுதாப்போல்பிறப்பித்தச் சீமானே பிஞ்ஞகனே தஞ்சமென்றுசிறப்பித்த மாது தியங்கி மயங்கலுற்றாள்மாது பகவதியாள் வயசுபதி னாறுடையாள்சாருமிட மற்றார்போல் தனியே புலம்பலுற்றாள்கண்ணினிய சொல்லாள் கரியமகா ஈசொரியாள்எண்ணுஞ் சாகாமல் இருக்கும் பகவதியாள்தாயில்லாப் பிள்ளை தயங்கினாற் போலேநின்றுவாய்குளறிக் கண்ணீர் வடிய மிகஅழுதாள்சோடு பிரிந்த துய்யப்புறா வுமிரங்கிப்போடுகின்ற சத்தம் போலே குரல்நிகழ்த்திஉள்ளுக்குள் நோக்கும் ஓவியத்தின் தன்குரலும்எள்ளுக்குள் ளெண்ணெயென இருந்து மிருக்கலைத்தான்சங்குள் பிறந்த சமயத்திருமணியும்எங்கும் புகழ்பெற்ற ஈசொரியாள் மாமயிலும்தனியே யிருந்து தனதுள் ளகமடக்கிமனிதர் காணாமல் மறைந்துநின்று மாதுநல்லாள்கிழவன் தனைத்தேடி கிளிமொழி யாள்பார்த்துக்களப நிறத்தாள் காணாமல் வாடலுற்றாள்கூட்டிக்கொண்டு வந்த கூனுக் கிழவனையும்காட்டித்தர மாட்டீரோ கன்னிகுல மாதர்களே ஆதிமகா லட்சுமியே அண்ட மளந்தவளே 760 சோதி மகாபரனே துணைசெய்ய மாட்டீரோஅன்னபட்சி மாமரங்காள் ஆவினங்கா ளூர்வனங்காள்என்னைமிகக் கூட்டிவந்த இளங்கிழவனைக் காட்டித்தாரீரோ என்றனுட சந்தபதி நான்போகவாரீரோ என்மனது வாட்டந் தவிர்ப்பதற்குஎன்று புலம்பி இளங்குழலித் தேடுகையில்குன்றுமேல் திங்கள் குதிக்குமந்த வேளையதாம்வேளை யறிந்து மெல்லி பொன்வண்டதுபோல்சூழநிற்கும் புன்னைப் பூவிலொரு சூட்மதாய்இருந்தாள் பொன்வண்டாய் ஏற்றபக லேகும்வரைத்தருந்தார மார்பன் சுவாமி மிகஅறிந்துபகவதிக்கு மங்களங்கள் பாடி மகிழ்ச்சையுடன்சுகம்பெரிய மாயன் சோபனங்கள் கொண்டாடஆடிக் களித்து அகமகிழ்ந்தா ரச்சுதரும்கூடிநிற்கும் பேரோடு கூறிமிக ஆடிடுவார்நாட்டை யழிக்க நமக்கு வொருமுகூர்த்தம்பேட்டைதர்மந் தோணப் பொகுதின் றென்றனக்குஎன்று கும்மிபோட்டு இளங்குழலை யும்பார்த்துஇன்று இருவென்று எம்பெருமா ளுமாடநல்ல பகவதியாள் நாடிப்பொன் வண்டதுபோல் 780 செல்லப் பதுங்கித் திசைமயக்க மாயிருந்தாள்பகற்பொழுது மாறி பகவா னடைந்தபின்புஉகப்படைப்பு மின்னாள் ஒருகுழந்தை போலாகிபத்து வயசுப் பிராயம்போ லேசமைந்துசித்துப் பலதுடையாள் சேர்ந்தவுயிர்க் கண்மணியாள்இரண்டு பொழுதாச்சே நம்பதியை விட்டிளகிபண்டு பதிக்கேகப் பாதைசற்றுங் காணலையேநாலுதிசை யுண்டுமென்பார் நமக்குசற்றுந் தோணலையேகோலூன்றுங் கிழவன் கூட்டிவந்த பாதையதும்சற்றுந் தெரியலையே தலையிலெழு துஞ்சிவனேமுற்றுமிந்த நாடு முடிமாய்ந்து போவதற்கோநரைக்கிழவ னம்மை நடுச்சபையில் கொண்டுவிட்டான்உரைத்திடுவா ரிந்த ஊரி லொருவசனம்மாப்பிள்ளைக்கு வீங்கி வறட்டுக்கிழ வன்கூடபோய்ப்பிழைத்தா ளென்று புவனஞ்சொல் வாரிதுவேநம்முடைய மட்டும் நாயன் விதித்தானோசும்மாயிந் தக்கிழவன் சோலிபண்ண வந்தானோபடைத்த பரனே பாவியே யென்றலையில்நடத்தை யெழுதி நவின்றதுவு மிப்படியோபரதவித்து மாது பலபலவா யெண்ணிமிக 800 விரதமுற்று மாது மெல்லி யிளமயில்போல்ஆளுக் கிடையே அன்னம்போ லேதிரிந்துகூழு குடித்தக் குறுங்கிழவ னைத்தேடிதிரியும் பொழுது செய்யதிரு மாலவரும்பரியேறும் பெருமாள் பகவதியைக் கண்டவரும்இனியிவளை யிந்த ராச்சியத்தில் நம்முடையமனிதப்பெண் கூட்டிலிட்டு மாலையிட வேணுமென்றுநினைத்துப் பெருமாள் நேரிழையைத் தான்மயக்கிபுனைத்தொரு பெண்ணுடைய பொற்கூட்டுக் குள்ளடைத்துதாண்டவ மாடுஞ்சபையில் சனங்களெல்லோ ருமறியகாண்ட மிகப்படித்துக் கன்னிப் பகவதியைமனுவறிய அண்ட வானலோ கமறியஇனிமணங்க ளிவளை யாம்புரிய வேணுமென்றுநிச்சித் தொருபெண் நிலையுங் குறிபார்த்துஎச்சரிக்கை யான இளமயிலாள் தன்கூட்டில்அடைத்தார் பெருமாள் ஆயிழையும் வெகுவாய்ப்படைத்தோ ரருளால் பாரீரேழு மயங்கப்பாடினாள் காண்டம் பகவதித்தாய் நாயகியும்நாடி யவள்படித்த நற்காண்ட மானதுதான்புகன்றா லுலகம் பொடிப்போ லுதிர்ந்திடுமே 820 உகந்தான் முடிய உரைக்கிறாள் காண்டமதுமனுவி னுடலதையும் மாகுலுக்கமாய்க் குலுக்கிதனுவளைத்தாற் போலே சடலந் தனைவளைத்துஆளுக் கிடையதிலே ஆட்டிச் சடலமதைத்தூளு மிகப்பறந்து தூசிவா னமடையச்சடலந் தனையாட்டித் தான்கோப மாய்க்குலுக்கித்தடதடெனச் சுவாமியுட தாளடி யில்வீழ்ந்து பகவதியம்மை காண்டம் படித்தல் பாவிநீ யிந்தப் பாரழிக்க வந்துஎங்கள்ஆவி மறுக அவனிதனி லெங்களையும்சீரழிக்க வென்றோ தெச்சணத்தில் வந்திருந்தாய்போரழிவு இல்லாமல் பொன்று கலியதிலேபொல்லாத நீசனுட பிதிரையெல் லாமழித்துச்சொல்லொன்றுக் குள்ளே தெய்வகன்னி மக்களையும்வைத்தாள நீயும் வந்தாக்கா லெங்களுடமெய்த்தான மழிக்க மேன்மையோ வுன்றனக்குப்பாவிநீ யென்னிடத்தில் பருங்கிழவ னாகவந்துதேவியென்றன் மானமெல்லாம் சீரழித்துப் போட்டாயேஇவ்வளமை செய்வாய் என்றேநான் முன்னறிந்தால்பொவ்வாயில் தீயெரியப் போடுவே னக்கினியைஎன்கோவில் வந்து என்னைக்கண் மாயமதாய் 840 உன்கோவில் வாசலிலே விட்டாட்டுப் பார்க்கிறாயேஎன்னமாய மாக இங்கேகொண்டு வந்தாய்நீபொன்னம்பலத் தீசன் பொடிப்படுவா னிங்கில்லையோபொல்லா தகத்தீசன் பொருப்பேறி மாண்டானோஎல்லா ஆபத்தும் இத்தனைநாள் காத்துஇப்போமாண்டானோ அகத்தீசன் மாமுனியாய்ப் போனானோவேண்டு மென்றகாலம் வேம்புமினிப் பானதுபோல்பார்வதி மாதுமையும் பரமே சொரியாளும்சீர்பதியென் னக்காள் சிறந்தமண்டைக் காட்டாளும்ஒக்கொன்றாய்ச் சேர்ந்தாரோ ஓவியம்நான் வேண்டாமென்றுஅக்கறுகு சூடும் ஆதி வெறுத்தாரோமூவாதி மூவருக்கு முன்னுதித்து வந்தவனோஇவனுடைய மாயம் என்னசொல்லப் போறோம்நாம்சிவனுக்கு மென்னுடைய செய்தி தெரியுமல்லோஆருக்கு மடங்காத அதிகாரம் பெற்றவனோபாருக்குள் வந்து பரிசு கெடுக்கிறானேபோகவழி சொல்வீர்களோ பொன்னுகன்னி யெம்பதிக்குஏகவழி சற்றும் எனக்குத் தெரியல்லையேஎன்று பகவதியாள் இரைஞ்சிமிகக் கூச்சலிட்டு 860 மன்றுதனில் வீழ்ந்து மாபுலப்ப மாயழுதாள்புலம்பிடத் திருமால் மாதைப் பொறுபிள்ளாய்ப் பிள்ளாய்ப் பெண்ணேசலம்பிநீ யுரைத்தா லோகம் தட்டுண்டு போமோ சொல்லுபலம்பெற வுனக்கு இந்தப் பருவமா மணங்கள் செய்யநலம்பெற வரங்கள் பெற்ற நற்பரத் தீசன் நானே நானென்ற ஈச னானால் நானிலம் பிறவார் கள்ளக்கோனென்ற இடையன் சாமிக் கோபால னான தாலேதானென்று உலகில் தோன்றி சடாட்சர ஆட்டு மாடிநானென்று வேடம் பூணும் நாரணன் நீதா னென்றாள் நாரணன்நீ நீதா னென்று நவின்றது சரிதான் பெண்ணேகாரண வுகத்துக் கெல்லாம் கருவுதித் தோங்கு மாதிநாரண ஈச னல்லால் நடப்புவே றாரு சொல்லுவாரணக் குயில்போல் வன்ன மயிலென வுரைத்தா ரையா உரைத்திடு மொழியைக் கேட்டு உறுமியே கோப முற்றுவரைத்தடம் புலிபோல் சீறி மங்கையு மாறிச் சொல்வாள்நரைத்துமே புலச்சை கெட்ட நாரண ஈச னென்றுதுரைத்தன மாகச் சொல்லச் சுணையுண்டோ வுனக்கு என்றாள் சாதிக்குச் சாதி நீயும் சமைந்துநல் வேடம் பூண்டுதாதிக்குக் கணவன் போலும் சடமெடுத் துடல்கள் போட்டுவாதிக்குப் பிறப்பாய்ப் பின்னும் வழியுன்றன் குலமே கந்தன் 880சாதிக்குச் சரியே வுன்றன் தன்குல மறிவே ளானும் அறிவே ளானென்ற பெண்ணே ஆதியு மெனதுள் கண்டாய்தறுமொழி சொல்ல வேண்டாம் தாணுமா லயனும் நானேஉறுமொழி யொருசொற் குள்ளே உகமதை யாள நானும்மறுமொழி யில்லா வண்ணம் வரம்பெற்ற நாதன் நானே அப்போ தரிவையரும் ஆதி முகம்நோக்கிஇப்போ துன்மருட்டு எல்லா மிகஅறிவேன்சோலிமிகச் செய்யாதே கெஞ்சுகவாய்ப் பெண்ணாரைப்பாதகங்க ளேராதே பாவையரை விட்டுவிடுதோதகமாய் வித்தைத் தோகையரோ டேறாதுஎங்கள் கண்மயக்கம் எல்லா மிகத்தெளித்துதங்கள்தங்கள் பதிக்குத் தானேக விட்டுவிடுகேட்டந்த நாரணரும் கிளிமொழியோ டேதுரைப்பார்நாட்ட மடவாரே நானென்ன செய்தேன்காண்உங்களைநான் கட்டி ஓடிமிகப் போகாமல்எங்களுட பொற்பதியில் இட்டிருக்கோ பிள்ளாய்ச்சொல்போகவே ணுமென்றால் பிடித்திழுப்பா ருண்டோசொல்ஏகவே ணுமென்றால் எழுந்திருந்து ஏகலாமேமாயத் திருமேனி மனதுள்ளொன் றேயடக்கிப் 900 வாய்த்திரு வாய்மலர்ந்து உரைத்திடவே பெண்ணாளும்வாயுரைத்தாற் போலே மனதுமிகச் சொல்லாதேநீயுரைத்தாய் நெஞ்சம் நினைப்புவே றாயிருக்கும்மாய மறிவாரோ மாயாதி யுன்சூட்சம்உபாய மறிய ஒருவரா லேலாதுஎன்று மாகுமரி இப்படியே சொன்னவுடன்நன்று நன்றென்று நாரணர்பின் னேதுரைப்பார்பெண்ணே யெனதுடைய பேரழகிப் பொன்மயிலேகண்ணே யெனது கனியேயென் தெள்ளமுதேஅமுதவாய்ச் சொல்லழகி ஆசார வீச்சழகிகுமுதவாய்ப் பெண்ணே குமரிப் பகவதியேதேனே மயிலே திகட்டாத தெள்ளமுதேமானே குயிலே மரகதப்பெண் ணோவியமே கிஞ்சுகவாய்ப் பெண்ணே கிளிமொழியென் மாமயிலேசெஞ்சுடரே நல்ல திரவிய மாமணியே பொன்னும் பகவதியே பிள்ளாய்நான் சொல்வதுகேள்என்னுடைய பேரில் எள்ளவுங் குற்றமில்லைகலியழிய வயது காலஞ்சரி யானதினால்வலிய யுகமான வாய்த்ததர்ம நற்புவிதான்பிறப்பதினா லிந்தப் பெரும்புவியில் நாம்பிறந்து 920 சிறப்பதுகள் செய்து செய்கரும முமுடித்துநாடாள நமக்கு நல்லபல னானதினால்தாடாண்மை யான சத்தி பகவதியே உண்மைதான் சொல்லுகிறேன் ஓவியமே நீகேளு தண்மையல்லால் வேறு தப்பிதங்கள் சொல்லேனான்கயிலையங் கிரியில் கறைக்கண்ட ரீசுரரும்மயிலனையா ளான மாது சரஸ்வதியும்மாது உமையாள் வாய்த்தகுல பார்வதியாள்சீதுபுகழ் லட்சுமியாள் சிறந்த பகவதியாள்மண்டைக்காட் டாள்தெய்வ மடந்தையே யுபேர்கள்குன்றிலுறை வள்ளி கோதைதெய் வானைவரைபூமடந்தை நல்ல பொன்னரியத் தேவியர்கள்பார்மடந்தை கங்கை பாணி மடந்தைமுதல்எல்லோருங் கூடி இருக்க வொருதலத்தில்வல்லாரு மீசர் வகுத்ததுவே நீகேளுகலியன் வரம்பெற்றுக் கயிலைதனை விட்டவனும்திலிய னவனுகத்தில் தேவியவள் பெண்ணுடனேவருகுமந்த வேளையிலே மாமுன சீராமரிஷிதிருஉமையாள் பங்கரோடு சென்றுநின் றேதுரைப்பார்நல்லபர மேசுரரே நாட்டிலிந் தக்கலியன் 940 வெல்லக்கூ டாதவரம் வேண்டியிவன் போறதினால்எக்கால மையா இவன்முடி வாவதுதான்அக்கால மெல்லாம் அருளுமென்றா னீசுரரை நல்லபர மேசுரரும் நாடிமுனி கேட்டதற்குச்சொல்லலுற்றார் பெண்ணே செவிகொடுத்துக் கேட்டிடுநீ சிவன் ரோமரிஷிக்கு அருளியது மாமுனி கேளென்று மாயாத ஈசுரரும்தாமுனிந்து சொன்னத் தன்மை மிகக்கேளுபொல்லாக் கலியன் பொன்றியடி வேரறுவ(து)எல்லா மறிய இலக்கறியக் கூறினராம்இவன்மா ளும்போது இனத்துக் கினம்பகையாம்சிவஞான நினைவு செல்லாது தேசமதில்கொலைகளவு ரெம்பக் கோள்கள் மிகுந்திருக்கும்தலைஞான வேதம் தடுமாறிக் கைவிடுவார்நேருக்குக் காலம் நெகிழ்ந்திருக்கும் பார்மீதில்போருக்கு யாரும் புத்தியாய்த் தானிருப்பார்பிள்ளைக்குத் தாயும் பெருத்தபகை யாயிருக்கும்கள்ளக் கணவருட கருத்துமிக மாதருக்காம்கூடி யுடன்பிறந்த கோதையரைப் பெண்ணெனவேநாடி யவரெண்ணி நாணியிறப் பார்கோடிவாரி கோபிக்கும் வாங்கும் சிலஇடங்கள் 960 மாரி மறைந்துவிடும் வாயுவது நோய்வீசும்கீழ்ச்சாதி யெல்லாம் கெறுவிதங்கள் மிஞ்சியவர்மேல்சாதி தன்னை வேலைகொண்டு தான்வருவார்வம்பருக்கு நோக்கம் வாக்கில் மிகஇருக்கும்அன்பருக்கு நோக்கம் அடங்கி மிகஇருக்கும்மனுவதிலே கற்பிகழா மாதர்கற் பேயழந்துதனுவாய்ப் புருஷனுட தன்வாக்குக் கேளார்கள்தெய்வ நிலைகள் தேசமதில் காணாதுமைநெறியப் பெண்ணார் மனுநீதங் காணாதுஇராச நெறிநீதம் இராத்தியத்தில் காணாதுபிராயம் வருமுன்னே பெண்கள் நிலையழிவார்தெய்வ மடவார் தேசமதி லேவருவார்வைய மறிய மாலையிட்டு வாழ்ந்திருப்பார்பார்பதியாள் ஈசொரியாள் பரமே சொரியாளும்சீர்பதியாள ளான சீதாதே விமுதலாய்க்கன்னி குமரி கயிலைபுகழ் மாதரெல்லாம்உன்னி யவர்கள் ஒருதலத்தி லேகூடிவாழ்ந்திருப்பார் மங்களமாய் மக்கள்கிளை வாழ்வுடனேதாழ்ந்திறந்து மாகலியன் தன்னால் மடிந்திடுவான்இப்படியே யிந்தக் கலிமாயும் லக்கெனவே 980 அப்படியே மாமுனிக்கு அருளச் சிவனாரும்பின்னு முனியும் பிஞ்ஞகனோ டேகேட்பான்துன்னுபுக ழீசுரரே தெய்வமட வார்களெல்லாம்கலியுகத் திலவர்கள் கட்டா யொருதலத்தில்சலிவில்லா தேவாழ்ந்து சந்ததிகள் வாழ்வுடனேவாழ்ந்திருப்பா ரென்று வகுப்புரைத்த ரீசுரரேகூர்ந்திவர்கள் தம்மைக் கோலமணஞ் செய்கிறதார்யானறியச் சொல்லும் அரனே எனத்தொழுதான்தானறியச் சொன்னத் தன்மை மிகக்கேளுநாடுகுற்றங் கேட்டு நல்லோரைத் தேர்ந்தெடுத்துக்கேடுகலி நீசருட கிளைவழிக ளுமறுத்துத்தெய்வ சான்றோர்களுக்குச் செங்கோல் மிகக்கொடுத்துமெய்வரம்பாய்த் தர்ம மேன்மைமுடி யுந்தரித்துத்தரும புவியாளத் தாட்டீக வைகுண்டரும்பொறுமைக்குல மானதிலே பிறக்கிறா ரானதினால்நாங்க ளெல்லோரும் நமனுவர்க் குள்ளாவோம்தாங்கி யொருபொருள்போல் தாமிருப்போ மப்பொழுதுஒருபொருளாய் வந்து உருவெடுப்ப தானதினால்திருமடந்தை யாவரையும் செய்யுமன்னர் தாமவராம்என்றீசர் சொல்ல இசைந்தமுனி நல்லதென்று 1000 நன்று நன்றையா நல்லகா ரியமெனவேசந்தோசங் கொண்டு தானிருந்தான் பெண்ணரசேமுந்தோர் மொழிந்த முறைநூற் படியாலேவந்ததுகா ணிந்தவிதி மங்கையரே யுங்களுக்குஎந்ததுகா ரியம்பெண்ணே என்னையொன்றுஞ் சொல்லாதேதலையில் விதிபிள்ளாய்த் தங்கடங்க விட்டுவிடுகிலேச மதையெல்லாம் கிளிமொழியே விட்டுவிடுகொண்டுவந்தேன் பெண்ணே குவிந்தவதி எந்தலைக்குள்பண்டு அமைத்தபடி பதறாதே பாவையரேபெண்ணே நீயொருத்திப் பேர்பெரியக் கண்ணரசேகண்ணேயுனைக் காணாமல் கலங்கிமெத்த நானலைந்துவாடி யிருந்தேனடி மங்கையுனைக் காணாமல்கோடி யிருந்தேனடி குமரியுனைக் காணாமல்தாபத்தா லுன்னைத் தவமிருந்து கண்டேனடிகோபத்தால் கன்னி குமரியென்னைப் பேசாதேஎன்று மகாமாலும் இரக்கமுடன் மாதைமிகக்கொண்டு அணைவாய்க் குழைவாய் மிகவுரைக்கஅம்மை பகவதியாள் ஆகங் களிகூர்ந்துநம்மைப் படைத்தது நாயன்முன்னா ளென்றுசொல்லிஇருந்த பதியை எண்ணிöண்ணி மாதுநல்லாள் 1020 பொருந்தும் விழியாள் பெருமிமிக நீருவிட்டுஅழுதாளே சொல்லி அருவரைகள் தானிளக ஒழுகாக நிற்கும் உலக நருளழவேமாமரங்க ளெல்லாம் பூத்துச் சொரிந்தழவேஐயோ நானிருந்த அம்பலமும் வீதிகளும்வையா வழித்தெருவும் மண்டபமுந் தோற்றேனேசிங்கா சனமும் செகல்த்துறையும் வாவிகளும்மங்காத பொன்னு மாளிகையுந் தோற்றேனேஇலாடக் கிழவன் இராத்திரியில் வந்துநம்மைக்கபாடமிகச் செய்ததினால் கனபதிகள் தோற்றேனேபொன்னா பரணமும் பெட்டகமுந் தோற்றேனேமுன்னா ளெழுத்தோ முத்துமண்ட பமிழந்தேன்ஆண்டிலொரு தேரோட்டம் அதுவெல்லாந் தோற்றேனேவேண்டும் நருட்கள்வந்து விழுந்திறைகள் தோற்றேனேதண்டையணி சிலம்பும் தரளமெல்லாந் தோற்றேனேதுணைக்கிள்ளை யானத் தோழியரைத் தோற்றேனேபணப் பெட்டகமும் பைம்பொன்னரிய பட்டுகளும்நவமணியால் செய்த நல்லவடந் தோற்றேனேசெகமெல்லாங் கூடிச் சேவிப்பதுந் தோற்றேனே 1040 இத்தனைநா ளுமிருந்து இந்தக்கெதி யோஎனக்குமுத்திபெற்ற ஈசன் முன்னெழுதி வைத்ததுவோஅய்யோநான் பிறந்த அன்றுமுத லின்றுவரைவெய்யோன் முகம் வரையும் செல்லியறியேனேபாவிக் கிழவன் பரிகாசஞ் செய்வானென்றுஆவி யறிந்திலனே அங்கமது வாடுதையோமூன்றுபொழு தாச்சே ஊறும்நீர் தானருந்திமீண்டென் சரீரம் விழலா யெரியுதையோபாலு பழமும் பருந்தேனுஞ் சர்க்கரையும்நாலு ரண்டான நல்ல ருசியதுவும்பாவித்த கும்பி பருங்கனல்போல் மீறுதையோஆவிதடு மாறுதையோ ஆதிபர மேசுரரேஎன்று பகவதியாள் எண்ணமுற்றுத் தானழவேமன்று தனையளந்த மாலுமிக அமர்த்தித்தேனினிய கண்ணே தேவி பகவதியேநானினித்தான் சொல்லும் நல்ல மொழிகேளாய்நான்மணங்கள் செய்யும் நாரியர்கள் தம்மிலுமோமேன்மைய தாயுனக்கு வெகுபணிகள் நான்தருவேன்பொன்பணங்க ளானப் பெட்டக முந்தருவேன்என்பதி யுந்தருவேன் ஏறும்பல் லாக்கருள்வேன் 1060 தண்டாய மேறிச் சனங்கள்மிகப் போற்றிவரக்கொண்டாடும் நல்ல குருபாக்கி யந்தருவேன்திருநாள் பவிசு தினமுனக்கு நானருள்வேன்அருள்ஞானப் பெண்ணே அங்கிருந்த சீரதிலும்அய்யிரட்டி யாக அணிவே னுனக்குடைமைபொய்யென் றிராதே பொன்முடியின் தன்னாணைஎன்று மாயாதி இப்படியே ஆணையிட்டுக்குன்று தனமின்னாள் குமரி மனமகிழச்சத்தியஞ் செய்து தலையைத் தொட் டாணையிட்டுப்புத்திவந்து பெண்ணாள் பொன்னும் பகவதியாள்நாதனுட தஞ்சமென நாடி யகமகிழ்ந்துமாது குமரி வாயுரை யாதிருந்தாள் பகவதி திருக்கல்யாணம் அப்போ திருமால் ஆனந்த மேபெருகிஇப்போ பகவதியை ஏற்றமணஞ் செய்யவென்றுஉன்னித் திருமால் ஒருசொரூபங் கொண்டனராம்மின்னுமந்த ஈசுரராய் வேடமது பூண்டுஎக்காள வாத்தியங்கள் இசைதாள நாகசுரம்அக்காலத் தேவர் ஆகாய மீதில்நின்றுபந்தல் விதானமிட்டுப் பாவாணர் போற்றிநிற்கச்சந்தமுடன் மனிதச் சாதி மிகமகிழ 1080 தெய்வரம்பை மாதர் திருக்குரவைத் தான்பாடஞாய மனுவோர் நற்குரவைத் தான்பாடபகவதிக்கு நல்ல பாரமணக் கோலமிட்டுச்சுகபரனு மாலைமணச் சொரூப மெடுத்தவரும்பிச்சிமா லைபுரிந்து பொற்கடுக்கன் மீதணிந்துமிச்சமுடன் வெள்ளி விரலாளியோ டரைஞாண்பொன்தா வடங்களிட்டுப் பொன்னரிய தாலிதன்னை மின்தா வடம்பூண்ட மெல்லி பகவதிக்குக்கண்ணானத் தாலி காரணத்து நற்தாலிவிண்ணோர்கள் மெய்க்க விறலோன் மிகத்தரித்தார்கண்டு தெய்வாரும் கன்னி பகவதிக்குஇன்று மணம்புரிந்தார் இறையவர்தா னென்றுசொல்லிக்கொண்டாடிக் கயிலை குவித்துமிக வாழ்ந்திருந்தார்தொண்டான சான்றோர் துதித்து மிகப்போற்றிக்கலிமுடிந்த காலம் கன்னி பகவதிக்குச்சலிவில்லா மாமணங்கள் தானாச்சு நன்றெனவேஎல்லோருங் கொண்டாடி இருந்தார்கா ணம்மானைநல்லநா ராயணரும் நாடி யகமகிழ்ந்துசெல்லமட வாரோடு சேர்ந்துவிளை யாடிருந்தார்அந்தந்தப் பெண்களுக்கு அழகுசொரூ பம்வேறாய்ச் 1100 சொந்த விளையாட்டுத் தோகையரோ டாடினராம்ஆடித் திருநாளும் ஆனந்தக் கும்மிகளும்நாடி யுகத்தீர்ப்பும் நல்லமக்க முக்கறிவும் சொல்லி யாமங்கூறிச் சோபனங்கள் தான்பாடிநல்லியல்பாய் நாதன் நடத்தி வருகையிலே பார்வதி திருக்கல்யாணம் ஈசுரனுக் கேற்ற ஏந்திழையாள் பார்வதியைவீசுபுகழ் மாதுமையை வெற்றிமண்டைக் காட்டாளைமாமணங்கள் செய்ய மனதிலுற் றெம்பெருமாள்பூமணங்கள் னானப் பொன்னுநல்ல பார்வதிக்கும்மங்களங்கள் கூறி மாதை மிகநினைத்துத்திங்கள் சடையணிந்து சிவவேட முந்தரித்துமாத்திரைக் கோல்பிடித்து மார்பில்தா வடம்பூண்டுகாத்திருந்து பார்வதியைக் கருத்தாய் நினைக்கலுற்றார்மாதுமைக்கு மங்களங்கள் மயேசு ரன்கூறசீதுகந்த மாதுகளைச் சிவனு மிகநினைத்துக்கருத்தா யிருந்து காண்டமது சொல்லியவர்உருத்தா யிருந்துஓதுவார் மோகமதாய்ப்பெண்ணே யென்பார்வதியே பேரான மாதுமையேகண்ணே யென்பார்வதியே கனகவொளி ரெத்தினமேகூட்டுக் கிளியே கொடியிடையே நிங்களெல்லாம் 1120 நாட்டிலென்னை விட்டு நன்னகரில் வாழ்வீரோதனியேநான் வந்திருந்து தவித்துமுகம் வாடுவதுகனியேயென் மாமணியே கருத்தி லறியீரோஉள்ளுடைந்து வாடி உங்கள்மேல் காதல்கொண்டுதள்ளுடைந்து நானிருக்கும் தன்மை யறியீரோஊணுறக்க மில்லை உங்களைநா னெண்ணியெண்ணிக்கோணுதலாய் வாடி கோடிமுகம் வாடுறேனேவாரீரோ பெண்காள் வயிறுபார்த் தன்னமிடப்பாரீரோ என்முகத்தைப் பார்த்திரங்க மாட்டீரோஅன்னங்காய் வைத் அமுதருந்து மென்றுசொல்லிமுன்னிங்கே வந்து முத்தமது தாரீரோவாழை பழங்கனிகள் மாம்பழம் பாலக்கனிகள்கூழனைய சந்தனமும் கொண்டுவந்து தாரீரோகண்ணரிய பெண்ணுகளே கள்ளமில்லா தோவியங்காள்பெண்ணரிய மாமயிலே பிள்ளா யென்கண்மணியேஎண்ணுஞ் சிறுபிள்ளையாய் இருக்குமென்றன் பார்வதியேகண்ணு மயிலே கைக்குள்வந்து சேராயோஎன்றுபர நாதனுமோ இவ்விசைகள் தான்கூறமன்றல்குழ லுமையாள் வாய்த்தகுலப் பார்வதியாள்வந்துதிருப் பாதமதில் மாகோபமாய் மகிழ்ந்து 1140 முந்து மொழியெல்லாம் மொழிந்தாரே மாதரவர்அய்யோஈ தென்ன அடிமாறு காலமதோபொய்யோ கலியன் பிறக்கப்போய் நாங்களெல்லாம்இப்பா ருலகில் இப்படியே வந்ததென்னமுப்படியே யுள்ள முறைநூற் படியாலேபொல்லாக் கலியுகந்தான் பொடிப்பட்டுப் போறதற்கோவல்லாத்த மங்கையெல்லாம் மாகலியில் வந்ததுதான்என்றந்த மாதர் இதுகூற மாயபரன்நன்றென்றன் மாதர்களே நாம்நினைத்த துபோலேவந்தீரே யின்று மணம்புரிய வேணுமென்றுபுந்தி யயர்ந்து பூவை முகங்கோடிஅண்ணர்நா ராயணரும் அவனிதனில் வந்தாரென்றுபெண்ணரசி நாங்கள் போய்ப்பார்க்க வேணுமென்றுவந்தோமே யென்னுடைய வரம்பெரிய அண்ணரென்றாள்அண்ணரது நீயென்றாய் ஆயிழையே யிவ்வுகத்தில்இண்ணதுவே இப்படித்தான் என்னுடைய நாயகமேமனதயர்ந்து மாதர் வாயுரைக்கக் கூடாமல்தனதுள் முகங்கோடி தலையில் விதியெனவேநின்றார் மடவார் நினைவு தடுமாறிப்பண்டார மாகப் பரமன் வடிவெடுத்துத் 1160 தாலி மிகத்தரித்தார் தாமனந்தப் பெண்ணார்க்குஆலித்துப் பார்வதியை அரவியுட னீராட்டிசந்தோ சமாகத் தாலி மிகத்தரித்தார்வெந்தோசந் தீர்ந்து மேலோர்கள் கொண்டாடவையகத் தோரும் மனமகிழ்ந்து கொண்டாடசெய்யத் திருமால் செய்சடங்கு கள்முடித்துவாழ்ந்திருந் தார்பெண்களுடன் மாய பரநாதன்தாழ்ந்து மடவார் சரண மிகப்பூண்டு பூண்டு பணிவிடைகள் பூவையர்கள் செய்துமிகவேண்டும்பல பாக்கியத்தோ(டு) இருந்துமிக வாழ்ந்தார்இப்படியே பெண்களொடு இருந்துமிக எம்பெருமாள்நற்புடைய தேர்திருநாள் நாளுங் குறையாமல்செய்து இகனை சிவசோ பனம்புரிந்துபைதுவளை மாதரோடு பண்பாக வேயிருந்தார்மாதருக்கு மாதவனாய் வானோர்க்கு நாயகமாய்த்தாரணிக்கும் நாதனெனத் தான்வாழ்ந் திருந்தனராம்வாழ்ந்திருக்கும் நாளில் மாதுகன்னி மார்களோடும்சேர்ந்திருக்கும் நாளில் திருமால் மனமகிழ்ந்துகூர்ந்தொரு தேவி குவிந்தமண்டைக் காட்டாள்க்குசோபனங்கள் கூறி சுத்தமங்க ளம்பாடி 1180சேவரசி யான மெல்லியரை நாமணந்தான் மோகினி வேடம் புரிவதற்குக் கோலம்புகழ்ந்தணிய வேணுமென்றுமதிபெரிய மாதை மயக்கமிகச் செய்திடவேமாதுக்கு நல்ல மகாவிருப்ப மானதொருசீதுகந்த மாதரென செம்பவள மாயவரும்காதுக்குத் தோடணிந்து கைக்கு வளையணிந்துமார்பில் வடமணிந்து வாய்த்ததண்டைக் காலிலிட்டுச்சேலை யுடுத்துச் சிவந்தகொசு கமுடித்துமாலை யணிந்து மார்பில் கலையணிந்துகோர்வை யணிந்து குழலு மிகமுடித்துத்தோர்வை படாதே தோகையென வேசமைந்துமஞ்சணையும் பூசிபிச்சி மாலை மிக அணிந்துசெஞ்சொல் மதனைச் சிந்தைக்குள் ளேயிருத்திஎடுத்தார் பெண்ணாக எம்பெருமாள் கோலமதுகடுத்தகன்னி மார்கள் கன்னிக் கணவரென்றுசொல்லி மகிழ்ந்து தோழிநா மென்றுசொல்லிமுல்லையணி பெண்ணார் முகுந்தன்பதந் தொழுவார்நாட்டி லுள்ளோரும் நாரணர்பெண் ணானாரென்றுதாட்டிமையாய்ப் போற்றி சரணம் பணிந்துநிற்பார்இப்படியே வேசம் எடுத்துத் திருமாலும் 1200 பொற்படியில் வாழும் பொன்னுமண்டைக் காட்டாளைமயக்கிக் கொடுவரவே மாமோகப் பெண்ணேவஇச்சொரூபம் போலே ஏந்திழையாள் கண்ணிலொருசச்சு ரூபமாகத் தான்கண் டுரைபகரும்பெண்ணேயென் னக்காள் டுரைபகரும்பெண்ணேயென் னக்காள் பேர்பெரிய நாயகமேகண்ணே யென்மாமணியே கனகவொளி மாதவமேகலியுகத்தி லேபெரிய கண்காட்சை தன்னுடனேவலிதான நல்ல வாய்த்த பதிச்சிறப்பும்நித்தந் திருநாளும் நீலமணி மண்டபமும்சிற்றம் பலமும் திருநாள் சிறப்புடனேசத்தகன்னி மாரும் தண்டரள மாதுமையும்புத்தியுள்ள பார்வதியும் போர்மகள் பகவதியும்கங்கை மடவாரும் காட்சி மிகப்புரிந்துகொங்கை மடவார் கூடி மிகப்புரிந்துகும்மி யடித்துக் குரவை மிகக்கூறிஎம்வடிவு போலே ஏலங் குழலார்கள்ஆடிப் படித்து அலங்கிருத மாகியவர்சாடிக் குலாவி சனங்கள்வெகுக் கூட்டமுடன்பாலு பழமருந்திப் பாவிக்கும் பாவனையைமேலுக் குகந்தவளே விடுத்துரைக்கக் கூடாது 1220 என்றுரைக்க அந்த இளவரசிக் காட்டாளும்அன்று மதிமயங்கி ஆயிழையாள் மாய்கையொடுகூடி நடந்து கூண்டரிய நற்பதியில்ஆடிக் களிக்கும் ஆதியிகனைச் சுபையில்வந்தாளே மாய்கை மண்டைக்காட் டாளுடையசிந்தை யதற்குள்ளே சென்று மிகவிருந்துதிக்குத்திசைகள் தெரியாமல் தான்மயங்கிபக்குவ மாது பறிகொடுத்தப் பேர்களைப்போல்புலம்பித் தவித்துப் பெண்ணரசி நிற்கையிலேவலம்புரிக்கண் மாயன் மாதை மிகவருத்திமணமுகிக்க வென்று மாயன் மனதிலுற்றுக்குணமுடைய மாயன் கூண்டுமுன் மாலையிட்டப்பகவதிக்குள் சேர்த்துப் பாரமணஞ் செய்யவென்றுசுகபதியா ளந்தச் சோதி பகவதிக்குள்உள்ளாக்கிக் கொண்டு உற்ற திருச்சபையில்துள்ளாட்ட மாகித் தொகுத்தகாண் டம்படித்தாள்வையகத்தோர் காண வாழும் பகவதியாள்செய்யமண்டைக் காட்டாள் சிறந்தகாண் டம்பிடித்தாள் மண்டைக் காட்டம்மை காண்டம் படித்தல் அய்யோநான் கண்மயக்காய் அங்கிருந் திங்குவரப்பொய்யோ வொருமாய்கைப் பெண்ணாக வந்ததுதான் 1240இங்கே யிவர்போலே இருந்ததுகாண் வந்தபெண்ணும்சங்கை நமைக்கெடுக்கச் சமைந்தாரே பெண்ணாகிப்பெண்ணாய்ச் சமைந்து பேராசையு மருளிக்கண்ணான என்றன் கற்பு மழிந்தேனேஎன்றுமா தேவி இப்படியே சொன்னவுடன்ஒன்றுமறி யாதவர்போல் உள்ளந் தனிலடக்கிப்பெண்ணே நானிந்தப் பெருங்கலியைத் தான்முடிக்கக்கண்ணான பெண்ணரசி கரிய சொரூபமதுஎடுத்திகனை கூத்து யானிங்கே யாடுறவன் முடுத்துந்த னூரில் முறைமயக்க வந்தேனோஎனக்குப்பெண் ணில்லையென்று இரந்துகொள்ள வந்தேனோதனக்கிதுவோ ஞாயம் தரணியது சொல்லாதோநாமிருப் பிங்கே நாமமெங்குங் கேட்குதல்லோசோமவா ரமணிந்த சுவாமியுட கற்பனையோஎன்று பெருமாள் இதுமொழிய மாதுசொல்வாள்குன்றெடுத்த மாயக் கோபாலா வுன்சூட்சம்எவரா லளவெடுக்க ஏலுங்கா ணுன்மாயம்கவராயிரங் கோடிக் கருத்திருக்கு மாயவரேஇராமனாய்த் தோன்றி இராவணசங் காரமதுசிராமர் படைவகுத்துச் செய்யம்பு கைப்பிடித்துப் 1260 போரில்நீர் நின்று பெருதுகின்ற வேளையிலேமேரு குலுங்கி விண்தூள் மிகப்பறந்துஆகாயத் தேகி அந்தரங்க மேகமதில் தூள்மூடக் கண்டு தேவர் மீகப்பதறிவேழதிய உன்போர் மிகுதேவர் பார்க்குகையில்போரிலும்நீர் நின்றுப் பொருது சரம்விளைக்கவாரியிலும் பாம்பணையில் வாய்த்தபள்ளி கொண்டீரேஆய்ப்பாடி ஆயர் எல்லோருந் தாங்கூடிச்சாய்ப்பானப் பேய்களுக்குச் சருவில் கொடைகொடுக்கப்பேயையெல்லா மோட்டி பெரும்பூத மாயிருந்துஆயர்கள் பார்த்திருக்க அங்குபூ சாரியுமாய்த்தின்றாயே யத்தினையும் சிலபூத மாயிருந்துதொட்டிலா யர்மனையில் சிறுபிள்ளையாய்க் கிடந்துமட்டுப் பருவமுள்ள மாதர் மனைபுகுந்துவிளையாடி நீயும் வேறா ரறியாமல்குழைவாய் மதலையெனக் கூண்டதொட்டி லேகிடந்துசிறுகுழவி போலே சீறி மிகஅழுவாய்ப்பருவதங்க ளுமெடுப்பாய்ப் பாலன்போ லேகிடப்பாய்உன்சூட்ச வேலை உரைக்க எளிதாமோதன்சூட்ச மெல்லாம் தானுரைக்கக் கூடாது 1280 பலவேசங் கொண்டு பார்முழுதுஞ் சுற்றிடுவாய்க்குலவேசம் நீரும் கொண்ட தொழிலல்லவோஆரோடுஞ் சொல்லி அதட்டிவிட வேண்டாமேபாரோ டுதித்துவந்த பாவையொடு செல்லாதுஎன்றுமண்டைக் காட்டாள் இசைந்தமொழி தான்கேட்டுநன்றுநன்று பெண்ணே நமக்கிதுவே ஞாயமுறை மண்டைக்காட்டம்மை திருக்கலியாணம் பெண்ணேயுன் றன்பேரில் பேராசை ரெம்பவுண்டுகண்ணே யுனையிப்போ கலியாணஞ் செய்வதற்குவேளையி தாகும் மெல்லியரே யென்றுரைக்கமானதிய மங்கை மனதயர்ந்து வாய்குழறித்தலையி லெழுத்தெனவே சத்தமுரை யாடாமல்சிலைநுதலிக் கன்னி சொல்லுரையா தேயிருந்தாள்இருந்த நினைவை ஏகமூர்த்தி யறிந்துபொருந்து மதியானப் பிரமாதி வேசமதாய்வேச மெடுத்து மேளத் தொனியுடனேவாசவருந் தேவர்களும் மலர்மாரி தூவிநிற்கதேச நருளறியத் தெய்வமட வாரறியமாய பரனும் மகாபெரிய நூல்முறையாய்வாசக் குழலாளை மாலையிட்டா ரம்மானைமாலையிட்டு நாதன் வாய்த்தசடங் குங்கழித்துச் 1300சாலையத் துள்ளேகித் தானிருந்தா ரம்மானை வள்ளி திருக்கல்யாணம் மணமுகித்து நல்ல மணவறையக லுமிருந்துதுணைபெரிய மாயன் சுருதி முறைப்படியேஆகமத் திகனை அலங்கிருத மாய்ப்புரிந்துநாகரீக நாதன் நடத்திவரும் நாளையிலேகந்தனுக்கும் பெண்ணைக் கலியாணஞ் செய்யவென்றுசிந்தித்து நல்ல திருமால் மனமகிழ்ந்துகேட்டு வரையாள் கோதைவள்ளி நாயகியைக்கந்தன் சொரூபம் கரியமால் தானெடுத்துஎந்தன் பிரானும் ஏற்றவள்ளி நாயகியைமாலையிட்டு நல்ல மணமுகித்தார் கந்தனுமேவேலையிட்ட மான வேண்டுஞ் சடங்குசெய்துநாளிட்டு வந்து நாளேழு மேகழித்துவாழட்டு மென்று வாய்த்தசடங் குமுகித்துமாதரோ டெல்லாம் மகிழ்ந்திருந்தா ரம்மானைதாரணியோ ரறிய தான்வாழ்ந் திருந்தனராம்பெண்ணார் தமக்குப் பேர்பெரியத் தற்சொரூபம்கண்ணான மாயவரும் காட்டி மிகவாழ்ந்தார்வாழ்ந்திருக்கும் நாளயிலே மங்கை தெய்வ மாதர்களில் 1320 ஏந்திழையில் சிலர்கள் இளங்குழலி பெற்றனராம்பாலராண் பெண்ணும் பாவையர்கள் பெற்றுமிகக்கோலமுடன் வாழ்ந்திருந்தார் கூண்டரிய செல்வமோடுபாக்கியங்கள் ரெம்பப் பவிசு குறையாமல்நோக்கியல்பாய் மாதர் நுண்ணிமையாய் வாழ்ந்திருந்தார்நாரா யணர்க்கு நல்லமுது தான்படைத்துகாரணரு மமுது கலந்துமிக வுண்டிருந்தார் 1327