வடுகநாத சுவாமி கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை
ADDED :1657 days ago
பல்லடம்: பவுர்ணமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் கிராமம் மலையம்பாளையத்தில் ஸ்ரீவடுகநாத சுவாமி கோவில் உள்ளது. கால பைரவர் இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார். நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, கால பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார்.